ஒளிப்பதிவாளர் பிரச்சனையில் ரோபோ
ரோபோ படத்திற்கு ஒளிப்பதிவாளராக யாரை ஒப்பந்தம் செய்வது என்பதில் இயக்குனர் ஷங்கர் குழம்பிப் போயுள்ளாராம்.
இயக்குனர் ஷங்கரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த். ரோபோ படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏ.வி.எம் நிறுவனம் இயக்கும் சூர்யா-தமன்னா ஜோடியாக நடிக்கும் படம் ஒன்றிற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளார் கே.வி.ஆனந்த். இதனால் ரோபோ படத்தில் அவர் ஒளிப்பதிவு செய்யவில்லை.
இதையடுத்து பில்லா படத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவை அணுகினார் ஷங்கர். ஆனால் அவரும் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் சர்வம் படத்தில் ஒப்புக்கொண்டுள்ளதால் முடியாது என மறுத்திருக்கிறார். இதையடுத்து ஒளிப்பதிவாளர் திரு ரோபோ படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவராவது நீடிப்பாரா பார்ப்போம்.
|