மஜீத் இயக்கத்தில் ‘கி.மு’
தமிழன் என்ற படத்தை இயக்கியவர் மஜீத். அதற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கி.மு’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதுகுறித்து மஜீத் கூறும்போது,
மிகச்சிறந்த ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது. கி.மு.படத்தின் கதை மிக வித்தியாசமானது. வீட்டை விட்டு ஓடிப்போகும் காதலர்கள் கணவன், மனைவி என சொல்லி வீட்டை வாடகைக்கு எடுக்கின்றனர்.
அங்கு ஏற்படும் பிரச்சனைகளை காமெடி கலந்து சொல்லியிருக்கிறோம். மளிகைக்கடை நடத்தும் கேரக்டரில் வடிவேலு கலக்கியிருக்கிறார். காதலுக்கு கி.மு.விலிருந்தே பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் தான் படத்திற்கு ‘கி.மு.’என டைட்டில் வைத்திருக்கிறோம். இதில் ஹசன், சாரிகா என்ற இரண்டு புதுமுகங்கள் நடிக்கிறார்கள் என்றார் மஜீத்
|