குறுங்கவிதைகள் பா. திருச்செந்தாழை
வனத்தினுள் நீளும்
ஒற்றையடிப் பாதையில்
தொலைந்து விடுவதாய் கனவு
விடியாமலிருந்தால் நல்லது
எல்லா வார்த்தைகளாலும்
பிடிபடாமல் நழுவுகிறது
அப்பூவின் வாசனை
அடுத்த அலையில்
காணாமல் போகும்
என் காலடித் தடம்
இந்த இடம்
இந்த ஒளி
இந்த நிகழ்வு
இந்த மௌனம்
இல்லையெனில்
இல்லை இக்கவிதை
பிறகேன் கீழே
என் பெயர் மட்டும்...
உதிர்ந்த இலைகள்
கிளைத்த கொழுந்துகள்
குறித்து குறிப்பேதுமில்லை
இப்பெருமரத்தில்...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|