பெண் நிலை நா.சுப்புலட்சுமி
நீலப் புடவையில்
வெள்ளித் தட்டு
நகரும் மேகங்கள்
வானவில்லை உமிழ
மௌனமாய் அழுகிறது
மழைகாலத்தில் வானம்...
எதையோ நிரூபிக்க
உத்தியோகத்தை நினைக்க
எரிச்சல்கள் பளுவாய்
உண்மை இலக்கு இடையே
வார்த்தையாய் பாலமிட
மன ஊஞ்சல் தகர்த்தப்படும்
போதெல்லாம்
மௌனத்தின் மொழி
நா காத்து நம்மை காக்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|