ஆறாப்பு வாத்தியாரு சோலை சீனிவாசன்
உள்ளூருக்குள்ள
செவிபடு வாத்தினு
சொல்லு வானுவ
வேல பாத்த
வெளியூர் பள்ளி கொடத்துல
சக வாத்தியாருங்க
கிடாரக் குளத்தானம் பாங்க
கூடுன சாதி பயலுவல
இனங் கண்டு
அடிப்பாரு.
இல மற காயா
பேசஆரம்பிச்சவனுவ
முன்னால நின்னு பேசினானுவ
சாதியப் பத்தி
ஒய்வு பெறும் வயசுல
நல்லாசிரியர் விருது
கொடுத்துச்சு அரசாங்கம்
போங்கடா மயிராண்டிகளானு
விருத வாங்கவேயில்லஅந்த ஆறாப்பு வாத்தியாரு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|