ஓசையின்றி முத்தம் நளாயினி தாமரைச்செல்வன்
விடியலை
நேரம் உணர்த்தினாலும்
பனிதூறும் காலத்தில்
சூரியன் வருவதில்லை.
வளமையான
உடல் நிறைய விட
ஆறு ஏழு கிலோவால்
என் நிறை உடை வடிவில்
என்னைத் துரத்தும்.
தொட்டிலுக்குள்
பார்த்தால்
எட்டு மாத செல்ல மகள்
கையால் முகம் போர்த்து
பஞ்சுக்குஞ்சாய்
துயிலும் அழக.
மெல்ல அணைத்து
ஓசையின்றி முத்தமிட்டு
காப்பகக் காரியிடம்
கொடுத்துவிட்டு
வேலையில் முழ்கிற போது
திடுக்கிடும் என் மனசு.
ஓ.. என் செல்ல மகள்
என்னைத் தேடுவாளோ?
உடலில் உள்ள
உரோமம் எல்லாம் சேர்ந்து
ஒருவித சிலிர்ப்பைத் தந்து
விழிவழியே உப்பு நீரை
வரவழைக்கும்.
- நளாயினி தாமரைச்செல்வன், சுவிட்சர்லாந்து
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|