விதி
பொன். குமார்
சாலைகளில் விபத்து
சகஜம்.
உடனடியாக
அப்புறப்படுத்தப்படுகின்றன
மனித சடலங்கள்.
நாயுடல்கள் விதிவிலக்கு
அதிகபட்சம்.
இறப்பு எல்லாவுயிர்க்கும்
பொது.
நாய்க்கு மட்டும்
வாகனமே எமன்.
ஒவ்வொரு முறை பயணத்திலும்
சாலையில் காண நேர்கிறது
நசுங்கி கிழிந்து
இரத்தமும் குடலுமான
நாயின் சடலம்.
நாய்கள்
நல்லவையானாலும்
மனிதர்களை திட்ட
மலிவான சொல்
அதுவே.
சாலையிலும்
சொல்லிலும்
அதிகம் அடிப்படுவது
நாயாகவேயுள்ளது.
குறைந்த பட்சம்
மனிதர்களைத் திட்ட
நாயைப் பயன்படுத்தாமலிருப்பதே
நன்றியாகும்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|