விதி
பொன். குமார்
சாலைகளில் விபத்து
சகஜம்.
உடனடியாக
அப்புறப்படுத்தப்படுகின்றன
மனித சடலங்கள்.
நாயுடல்கள் விதிவிலக்கு
அதிகபட்சம்.
இறப்பு எல்லாவுயிர்க்கும்
பொது.
நாய்க்கு மட்டும்
வாகனமே எமன்.
ஒவ்வொரு முறை பயணத்திலும்
சாலையில் காண நேர்கிறது
நசுங்கி கிழிந்து
இரத்தமும் குடலுமான
நாயின் சடலம்.
நாய்கள்
நல்லவையானாலும்
மனிதர்களை திட்ட
மலிவான சொல்
அதுவே.
சாலையிலும்
சொல்லிலும்
அதிகம் அடிப்படுவது
நாயாகவேயுள்ளது.
குறைந்த பட்சம்
மனிதர்களைத் திட்ட
நாயைப் பயன்படுத்தாமலிருப்பதே
நன்றியாகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|