தாஜ்மஹால்
மா. கண்ணன்
நூற்றாண்டுகளாக
எதை அடைகாக்கிறது
இந்த அதிசய
அன்றில் பறவை?
இமைமூடி உறங்கும் மலரை
உலகம் இமை மூடாமல் பார்க்க
காலம் உச்சரித்த மன்மத மந்திரம்
மொழியறியா தோரும்
வாசித்துப் போகும்
ஓர் அரபிக் காவியம்
கண்ணீரால் அழும்
கனத்த இதயம் உலக நியதி.
கால்வாய் அழுமோ?
ஒற்றை மயிலிறகை
புத்தகத்துக்குள் மூடிவைத்தல்
மழலை குணம்
ஒரு மயிலையே
சலவைக்கல் புத்தகத்துக்குள்
மூடி வைத்தல் மன்னர் குணமோ?
ஒற்றைச் சொல்லில்
ஒரு காதல் கவிதை கேட்டால்
தயங்காமல் சொல்லாம்
தாஜ்மஹால்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|