அம்மா அரங்க மல்லிகா
கம்மாக்கரைக்கும்
களத்து மேட்டுக்கும்
காற்றாய் பறக்கும் கால்கள் _
கடலைப்பறிக்க
கட்டுச்சோற்றோடு
நாலு கிராமம் தள்ளி
வயல் வெளியில்
தலை குனிய
இறந்த கணவனின்
இறுதிச் சடங்கில்
கலந்து கொள்ள
விதி உண்டோ ! என
கலங்கிய மகன்களோடு
இறுக்கமாய் முகங்கள்
தூரத்தே பார்வையிட
எடுத்து விடலாம் பிணத்தை
எட்டூருக்கு நாற்றம்
அடித்து விடுவதற்கு முன்னால்
என்ற குரல் கேட்டு
அசந்து நடந்து வரும்
அம்மாவுக்குத் தெரியவில்லை
இறந்தது தன்னுடைய கணவன் என!
ஐந்து நிமிடத்தில் அரக்க பரக்க
எடுத்து விடுங்கடா
என் உயிரை
என்ற இரும்புக் குரலில்
அதிர்ந்து பார்த்தோம்
அம்மாவின் கம்பீரத்தை
அதிரும் தண்டவாளம்தான்
அம்மாவின் இருதயம்
பயணிகளுக்கு வாழ்வளிக்க
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|