பயணப்பாட்டு செந்தில் பாலா
மான் முதுகில்
உட்கார்ந்திருக்கும்
படகின் கண்கள்
சுற்றிச் சுற்றி பார்த்தபடி
குருவி.
மேடுபள்ளமான பாதை
குலுங்கவே இல்லை
படகு பயணம்
போகும் படகில் மனிதர்கள்
ரசித்தது
தண்ணீர் குடிக்க வந்த மான்.
படகின் விளிம்பில் நின்றபடி
ஒவ்வொருத்தரும் மறுத்து
ஒவ்வொரு பெயரை சொன்னார்கள்
எல்லாசாயலோடும் பொருந்தியது
புதரசைய நகர்ந்த மிருகம்.
முழுதாய் தெரியாத குழந்தை ஒன்று
என்னைப் போலவே
அமைதியாய்.
முன்னே போகும்
படகின் கையசைப்பில்
பின் தொடரும் மனசு.
யாரோ ஒருத்தர்
படமெடுத்தார்
செத்தாலும் இருக்கும்
படத்தில் குருவி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|