நினைவுக்கு வரும் நாற்றாங்கால் - அ. சரவணன்
கோடை விடுமுறை வெயில்
சுவர்களில் மோதியே
உடைந்து கொண்டிருக்கும் கனவுகளை
உயிர்ப்பிக்க வருவார்கள் நண்பர்கள்...
கத்தி அரிவாளுடன் புறப்படுவோம்...
குழந்தைகளை அழைக்கும் தாயாய்
எங்களையும் அழைக்கும்
பனை ....
உயரம் பாராமல் தரம் பார்த்து
வெட்டி உண்போம்...
காக்கையன் பத்தாம் வகுப்பு
மூக்கையன் பன்னிரெண்டாம் வகுப்பு
செவலை கல்லூரி படிப்பு
வயது பார்க்காமல் வாதம் செய்வோம்...
முற்றிய கரும்புத் தோட்டம் அருகிலே
எங்களையும் அழைக்கும்
கிணற்றங்கரை மேலிருந்து
கரும்புடன் மென்று துப்புவோம்
கடந்தகால நினைவுகளை....
கிணற்றில் குளித்து கண்சிவக்க
முகம் காட்டுவது சூரியனா? நிலவா?
அப்போது தான் நினைவுக்கு வரும்
மதிய உணவுக்காக வாங்கி வரச் சொன்ன அரிசி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|