தூத்துக்குடி மாவட்ட திராவிடர்விடுதலைக் கழகம் சார்பில் 27.08.2016 சனிக்கிழமை அன்று மத்தியில் ஆளும்மோடியின் பி.ஜே.பி. அரசால் - கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பட்டியல் இனத்தினர்மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நவீனசம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப்பரப்புரைப் பயணம் தூத்துக்குடி முதல்ஆழ்வார்திருநகரி வரை கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில்நடைபெற்றது.

27.08.2016 காலை 9.00 மணிக்குதூத்துக்குடி பாளை சாலையில் உள்ளபுரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார்சிலை அருகே தொடங்கிய பரப்புரைப்பயணத்தை ஆதித்தமிழர் கட்சி மாநிலதுணைப் பொதுச்செயலாளர் க. கண்ணன்தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர்பொறிஞர். சி. அம்புரோசு, தோழர்.கோ.அ.குமார் ஆகியோரது உரையைத் தொடர்ந்துகழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்.

முன்னதாகதந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர்சிலைக்கு பரப்புரைச் செயலாளர் மற்றும்மாவட்ட தலைவரால் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடிசிதம்பரநகர் - ஸ்பிக் நகர் - பழையகாயல் -வடக்கு ஆத்தூர் - காயல்பட்டினம் போன்றபகுதிகளில் மதிய உணவிற்கு முன்பரப்புரைப் பயணக்குழுவினர் பரப்புரையைமேற்கொண்டனர். இப்பகுதிகளில்செ.செல்லத்துரை, கோ.அ.குமார், வே.பால்ராசு, அணைக்கரை பால்வண்ணன், பொறிஞர். சி. அம்புரோசு, பரப்புரைச்செயலாளர் பால்பிரபாகரன் ஆகியோர்உரையாற்றினர்.மதிய உணவினை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தென்மண்டலச்செயலாளர் சொ.சு.தமிழினியன் (சமநீதி எழுத்தாளர் ஏபி.வள்ளிநாயகம் சகோதரர்)தனது இல்லத்தில் ஏற்பாடு செய்தார்.காயல்பட்டிணம் நகர விசிக சார்பில்பயணக் குழுவிற்கு வரவேற்பு அளிக்கும்வகையில் அழகாபுரியில் வரவேற்பளித்தனர்.

கழகப் பரப்புரைச் செயலாளர்பால்.பிரபாகரனுக்கு சால்வை அணிவித்துபயணக் குழுவை வரவேற்றனர். மதியஉணவிற்கு பின்ஆறுமுகநேரிஅம்மன்புரம்-குரும்பூர் பகுதிகளில்பரப்புரை நடைபெற்றது. இப்பகுதியில் நடைபெற்ற பரப்புரையில்சொ.சு.தமிழினியன் கலந்து கொண்டார்.இப்பகுதியில் விசிக தோழர்கள் பயணக்குழுவை வரவேற்றனர்.மாலை 6.15 மணிக்கு ஆழ்வார்திருநகரியை அடைந்தபோது எல்லைபகுதியில் வி.சி.க. தோழர்கள் திரளாகநின்று வரவேற்பு கொடுத்தனர். விசிகஉடன்குடி ஒன்றிய செயலாளர் சங்கர், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிசெயலாளர் திருவள்ளுவன் ஆகியோர்கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.

பிரபாகரன் மற்றும் மாவட்டத் தலைவர்பொறிஞர் சி.அம்புரோசு அவர்களுக்கும் சால்வை அணிவித்தனர்.தாமிரபரணி ஆற்றுபாலம் அருகில்அமைக்கப்பட்டுள்ள கழகத்தின் முன்னாள்மாவட்டத் தலைவர் நாத்திகன் இ.சேதுஇராமசாமி நினைவுகொடிக்கம்பத்தில்விசிக தென் மண்டல செயலாளர் சொ.சு.தமிழினியன் கழகக் கொடியை ஏற்றிவைத்தார். மாலை 6.30 மணிக்கு நவீனசம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப்பொதுக்கூட்டம் தொடங்கியது. மாவட்டத்தலைவர் பொறிஞர். சி. அம்புரோசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குஆழ்வை ஒன்றிய தலைவர் நாத்திகம்

ப.முருகேசன், விளாத்திக்குளம் ஒன்றியச்செயலாளர் மாரிச்சாமி ஆகியோர்முன்னிலை வகித்தனர். ஆழ்வை ஒன்றியச்செயலாளர் இரா. உதயக்குமார்வரவேற்புரையாற்றினார்.

நிகழ்வின் தொடக்கமாக காவை.இளவரசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர்சண்முகவேல், சொ.சு.தமிழினியன் உரையாற்றினர். தமிழினியன் தனது உரையில், “பெரிய கட்சிகளே செய்ய தயங்கும் இப்பணியினை திராவிடர் விடுதலைக்கழக தோழர்கள் தொடர்ச்சியாக செய்துவருகிறார்கள். கை பணத்தை செலவுசெய்து இவர்கள் செய்யும் பணி இவர்கள் நன்மைக்காக அல்ல, மக்களின்நன்மைக்காக மட்டுமே. இவர்கள் பதவிசுகத்தை அனுபவிப்பவர்கள் அல்ல. இந்தமக்கள் பதவி சுகத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே போராடுகிறார்கள்.

மக்கள்மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணியினை பற்றியும்” விரிவாகஉரையாற்றினார். நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன்தனது உரையில் பி.ஜே.பி. ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள் செய்து வரும்இந்து மயமாக்கலையும் அதனால் ஏற்படும் கேடுகளையும் விளக்கினார் - புதிய கல்விகொள்கை மருத்துவ கல்விக்கு நுழைவு தேர்வு-சமஸ்கிருத திணிப்பு, வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு போன்றவற்றை விளக்கி உரையாற்றினார். இறுதியில்மாவட்டச் செயலாளர் ச. இரவி சங்கர் நன்றி கூறினார். தோழர்களுக்கு இரவுஉணவு ஆழ்வை ஒன்றிய கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்பயணத்தில் ஆதித்தமிழர் கட்சிமாவட்ட மாணவரணி செயலாளர் கில்லுமற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர்.பயணத்திற்கான ஏற்பாட்டை மாவட்டத்தலைவர் பொறிஞர். சி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் ச. இரவிசங்கர், மாவட்டத் துணைத்தலைவர் வே. பால்ராசு, தோழர். கோ.அ.குமார், இரா. உதயக்குமார்,ப. முருகேசன்ஆகியோர் சிறப்பாகசெய்திருந்தனர்.

பயணத்தில் கலந்து கொண்டகழகத் தோழர்கள்

பால். பிரபாகரன் (மாநில பரப்புரைச்செயலாளர்), பொறிஞர். சி. அம்புரோசு(மாவட்டத் தலைவர்), ச. இரவிசங்கர்(மாவட்டச் செயலாளர்); வே. பால்ராசு(மாவட்ட துணைத் தலைவர்), பால்.அறிவழகன் (மாவட்ட அமைப்பாளர்), ச.கா.பாலசுப்பிரமணியன் (மாவட்ட துணைச்செயலாளர்), அ. பிரபாகரன் (தமிழ்நாடுமாணவர் கழகம்), கோ.அ.குமார், சா. மாரிச்சாமி (விளாத்திக்குளம் ஒன்றியச்செயலாளர்), அணைக்கரை பால்வண்ணன் (நெல்லை மாவட்டத் தலைவர்), சு. அன்பரசு (நெல்லை மாவட்ட அமைப்பாளர்), குறும்பை மாசிலாமணி (கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர்), ச. சுப்பையா(கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளர்), சங்கர்(கீழப்பாவூர் ஒன்றிய பொருளாளர்), சந்திரசேகர், செ. செல்லத்துரை, சக்திராஜ், வெற்றிமணி, அறிவழகன், திலீபன், பெரியசாமி, சேனல் கரை ரமேஷ், குலசேகரம் சேவியர், அய்யனார், சி.ஆ. காசிராசன், இரா. உதயக்குமார், ப. முருகேசன்.

தோழர்களை உற்சாகமூட்டிய நிகழ்வு

பயணக்குழுவினர் பயணத்திற்கு இடையில் தேனீருக்காக தென்திருப்பேரையில் நின்று தேனீர் குடிக்கும்பொழுது துண்டறிக்கைகளை கடைகள்மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர். அவ்வழியே காரில் வந்த இசுலாமியர்கள்துண்டறிக்கையினை வாங்கி படித்ததோடு தோழர்கள் பணியினை பாராட்டியதோடு மகிழ்ச்சியினை தெரிவித்தனர். ஐந்து நூறு ரூபாயை உண்டியலில்போட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் தோழர்கள் காயல்பட்டணம் பகுதியில் துண்டறிக்கை கொடுத்து உண்டியல் ஏந்திய போது ஒரு கடைக்காரர் கடை உரிமையாளர் இல்லை என தெரிவித்து உண்டியலில் பணம் போட மறுத்து விட்டார். தோழர்கள் துண்டறிக்கையினை படியுங்கள் என மகிழ்வுடன் கூறிவிட்டு வந்துவிட்டனர். தோழர்களை துண்டறிக்கை கொடுத்துவிட்டு அதே வழியில் வந்தபோது கடை உரிமையாளர் இல்லை என சொன்ன நபர் தோழர்களை அழைத்து நன்கொடை கொடுத்து உற்சாகப்படுத்தினார்.