தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை மத்திய அரசு புறக்கணித்து, சிங்கள ராணுவத்தின் தமிழின அழித்தொழிப்புக்கு ராணுவ உதவிகளையும் செய்து வருகிறது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பின்னால் இருப்பது காங்கிர தலைவர் சோனியா காந்திதான் என்ற உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தின் ஒருமித்த கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்த இந்திய அரசு, பிரபாகரன் பிடிபடுவார் என்று இலங்கை அரசு அறிவித்து வருவதைத் தொடர்ந்து, பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவதற்காக இப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா உத்தரவுப்படி இலங்கை செல்வதாக செய்திகள் கூறுகின்றன.

முல்லைத் தீவுப் பகுதியில் கடந்த சில நாட்களில் 300க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இலங்கையிலுள்ள அய்.நா. சபையின் ஒருங்கிணைப்பு அதிகாரி நீல்புனே, இதைத் தெரிவித்த நிலையிலும், இந்தியா, இதைக் கண்டிக்கவில்லை.