கொளத்தூர் மணி தலைமையில் 200 தோழர்கள் கைது

 தலித் பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள குற்றவாளி யுவராஜை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல் துறையை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம் திருச்செங்கோட்டில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 200க்கும் மேற்பட்ட கழகத்தினர், ஆதித் தமிழர் பேரவை பொறுப்பாளர்களும் கைதானார்கள்.

dvk agitation

 சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கொகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒன்றாகக் கல்லூரியில் படித்த நண்பர்கள் ஆவர். கடந்த 50 நாள்களுக்கு முன்னர் பொறியாளர் கொகுல் ராஜும், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் மலைக்கொவிலுக்கு வந்தபோது அவர்களை ஜாதியின் பேயரால் பிரிக்கும் நொக்கத்தில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் கொகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்தப்பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கொகுல்ராஜை கடத்திச் சென்று பள்ளிபாளையம் இரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் அவரை கொலை செய்து இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர்.

 தமிழகம் முழுவதும் பேரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த ஜாதிய ஆணவ படுகொலையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தமிழக அரசும், காவல்துறையும் கைது செய்யாமல் மெத்தனம் காட்டி வந்தது. பல்வேறு அமைப்பினர் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டபிறகு இக்கொலையில் சம்மந்தப்பட்ட 11 நபர்களை மட்டும் கைது செய்தனர். இக்கொலையில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜை மட்டும் காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை. இதனைக் கண்டித்தும் யுவராஜை கைது செய்ய வலியுறுத்தியும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆகஸ்டு 17ந் தெதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபேறும் என கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். அதன்பிறகு இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 11 நபர்களில் நான்கு பேர்கள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தை பாய்ச்சினர். முக்கிய குற்றவாளியான யுவராஜ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் என காவல் துறையினர் சொல்லிவந்தனர்.

 ஏற்கனவே கழகத்தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தப்படி திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட செயலாளர் வைரம் 17-ந்தெதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆகஸ்ட் 8ஆம் தேதியே காவல்துறையினரிடம் முறையாக அனுமதிக் கெட்டு விண்ணப்பித்திருந்தார். அனுமதி கொடுக்காமல் இபழுத்தடித்த திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா 16-ந்தெதி இரவு அனுமதி மறுத்ததாக தெரிவித்தார்.

 எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி 17-ந்தெதி திங்கள்கிழமை 11 மணியளவில் காவல்துறை தடையை மீறி திருச்செங்கோடு காவல் நிலையம் எதிரே கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் –

 ”தமிழ்நாட்டில் அண்மைகாலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல் அதுவும் ஆணவக் கொலைகள் என்கிற பெயராலெ ஏராளமான ஜாதிய ஆணவக் கொலைகள் நடைபேற்று வருவதை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறொம். அதெபோல் பொறியாளர் கொகுல்ராஜ் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் இதுவரையிலும் கைதுசெய்யப்படாமல் இருக்கிறார். குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 82ஆவது பிரிவின் கீழ் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கவேண்டும். 83ஆவது பிரிவின்படி அவரின் சொத்துக்களை முடக்கி அவரை உடனடியாக சரணடையச் செய்யவேண்டுமென்று கழகத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறொம். இது வரை காவல் துறை அவ்வாறு செய்யவில்லை உடனடியாக மேற்கூறிய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவேண்டும். அதெபோல் இந்தியாவின் சட்ட ஆணையம் இப்படிப்பட்ட கவுரவ கொலைகளுக்கு, திருமண விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிராக ஒரு சட்டத்தை வடிவமைத்து கடந்த 2012இல் கொடுத்திருக்கிறது. அந்த சட்ட வரைவு குறித்து மற்ற மாநிலங்களில் கருத்து கெட்டப்பொழுது தென்னிந்தியாவில் தமிழகத்தை தவிர அனைத்தJ மாநிலங்க்களும் தங்களின் கருத்தJக்களை தெரிவித்து விட்டனர். ஆனால் தமிழ்நாடு மட்டும் தனது கருத்தை இன்னமும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு உடனடியாக ‘திருமண விவகார தலையீட்டு தடுப்புச் சட்டத்தில் தனது கருத்தை தெரிவிப்பதொடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டு”மென கூறி வலியுறுத்தினார்.

 முன்னதாக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் நான்கு பெண்கள் மூன்று குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்ட கழகத் தொழர்கள் கைது செய்யப்பட்டு திருச்செங்கோடு காமராஜர் திருமண அரங்கில் வைக்கப்பட்டனர்.

 ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் திருப்புர் துரைசாமி, மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன், மாநில அமைப்பு செயலாளர் ஈரொடு ரத்தினசாமி, மாநில வெளியீட்டுச் செயலாளர் கொபி இராம. இளங்கொவன், ஈரொடு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முக பிரியன், மாவட்ட அமைப்பாளர்கள் சென்னிமலை செல்வராஜ், குமார், தர்மபுரி மாவட்ட செயலாளர் பரமசிவம், ஈரொடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், பவானி ஒன்றிய செயலாளர் வினொத், மாவட்ட பொருளாளர் பள்ளிபாளையம் முத்துப்பாண்டி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மேட்டுர் கொவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், மாவட்ட பொருளாளர் சம்பத், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ஓமலூர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டெவிட், மாவட்ட பொருளாளர் ஏற்காடு பேருமாள், சுகபக ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் குமார், கொவை மாநகர தலைவர் நெருதாஸ், மாநகர செயலாளர் நிர்மல் குமார், மாநகர பொருளாளர் கிருஷ்ணன், கொவை வடக்கு மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன், செயலாளர் பாபு, அமைப்பாளர் முருகெசன், திருப்புர் மாவட்ட செயலாளர் முகில்ராசு, மாநகர செயலாளர் நீதிராசன், அகிலன், பல்லடம் வடிவேலு, பல்லடம் சண்முகம், ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் துணைச் செயலாளர், லெமு சந்திரன், கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் செல்வ வில்லாளன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசு, கார்த்திகை முருகன் சிவகுமார், திருவாருர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கைதாகினர்.

 ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரம், திருச்செங்கோடு நகரத் தலைவர் சொம சுந்தரம், நகரச் செயலாளர் நித்தியானந்தன், கார்த்தி, பிரகாஷ் உள்ளிட்ட தொழர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

செய்தி - மன்னை இரா.காளிதாசு