1200 ஆண்டுகள் ஆண்ட முகலாயப் பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்திய இந்து மனுதர்மக் கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்மச் சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்.      

அவை என்னவென்று பார்ப்போம்...

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1773ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழுதத் தொடங்கியது.

• சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை இருந்ததை, 1795ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

• 1804இல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது

• ‘பிராமண’ப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு ‘பிராமணன்’ காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம்.  ஆனால் அதன் விளைவாக குழந்தை

பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும்.  (இந்து மனு சட்டம் IX 178) “பிராமணன்” தப்பு செய்தால் தண்டணையில்லாமல் இருந்த நிலையில்....

• பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் கொண்டு வரப்பட்டது.

• ‘சூத்திர’ பெண் திருமணம் முடிந்த அன்றே, ‘பிராமண’ருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

• ‘பார்ப்பான்’ மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, ‘சூத்திர’னும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

• சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளிவிட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

• 1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டு வரப்பட்டது.

• 1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை; கல்வி இல்லை என்றால் அம்பேத்கார் இல்லை; அம்பேத்கார் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திரனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.

முக நூலிலிருந்து...