"பெரியார் சாதித்தது என்ன?" என்ற கேள்விக்கு நாம் சொல்கிற முதல் பதில், இன்றைக்கு உன் பெயருக்கும் என் பெயருக்கும் பின்னால் சாதி பட்டம் இல்லையே, அப்படி சாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது ஒரு இழிவான/வெட்ககேடான செயல் என்ற கருத்து தமிழர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளதே, இதுதான் தந்தை பெரியாரின் முதன்மையான சாதனை என்றுதானே சொல்வோம்.
பார்ப்பனர்களும் பெரியார் எதிர்ப்பாளர்களும், பெரும்பாலும் பெரியாரை "ஈ.வெ.ராமசாமி நாயக்கர்" என்றே குறிப்பிடுவார்கள். சாதி ஒழிப்பே முதல் லட்சியமாக கொண்ட பெரியாரை சாதிப்பட்டத்துடன் அழைப்பதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம்.
அவர்களைப் போலவே பெரியாருக்கு "நாயக்கர்" பட்டம் கொடுத்து மகிழ்கிறார் வீரமணி.
பெரியார் என்ற கூர்வாளை அட்டைக்கத்திப்போல் சித்தரித்த "பெரியார்" திரைப்படம் இப்போது தெலுங்கிலே மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? "பெரியார் ராமசாமி நாயக்கரு"
"நாயக்கர்" என்று பெயரில் போட்டால் தெலுங்கர்கள் படம் பார்க்க வருவார்கள் என்று நினைத்திருக்கலாம் வீரமணி. அதற்காக பெரியாரின் அடிப்படை கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிட்டு பணம் சம்பாதிக்கத் துடிப்பது அயோக்கியதனம்.
மானமிகு ஆசிரியரின் நேர்மையைப் பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். அவர் நடத்தும் கட்சி பத்திரிகைகளில் இந்த தெலுங்கு படம் குறித்த செய்திகள் எதிலும் படத்தின் தலைப்பு குறிப்பிடப்படவேயில்லை. தன்னுடைய இந்த அயோக்கியத்தனம் தன்னுடைய கட்சிகாரர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்ற அவரது அச்சம் நமக்கு புரிகிறது.
யாராவது இந்த தெலுங்கு படத்தினைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை சொல்லுங்கள் நண்பர்களே. குறிப்பாக படத்தில், பெயருக்கு பின்னால் சாதிபட்டம் போடுவதை நிறுத்தச் சொல்லி அறைகூவல் விடுக்கும் காட்சி ஒன்று தமிழில் இருந்தது. தெலுங்கில் இருக்கிறதா?
பெரியாரின் எழுத்துகளை தன்னைத்தவிர வேறுயார் பதிப்பித்தாலும், அவர்கள் பெரியாரின் கருத்துகளைத் திரித்துவிடுவார்கள் என்று உயர்நீதிமன்றம்வரை சென்று பெரியார் கருத்துகள் பரவுவதை தடுக்கத் துடித்தார் வீரமணி. ஆனால் பெரியாரைத் திரிப்பதில் முதல் ஆளாக நிற்பது வீரமணியே அன்றி வேறுயாரும் இல்லை.
ஆதாரம்: "தி ஹிந்து" ஆங்கில தினசரியின் செய்தி - http://hindu.com/2010/08/10/stories/2010081060640300.htm
- பிரபாகரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
inioru.com/.../
-------------------------------
thamizhoviya.blogspot.com/.../ ...
-------------------------------
கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் திரைப்படத்தை தெலுங்கில் மொழி பெயர்த்து ஆந்திராவில் வெளியிட்டார்கள் . அப்படி வெளியிட்ட படத்தின் தலைப்பு "பெரியார் ராமசாமி நாயக்கரு" என்பதாகும்.
"பெரியார் ராமசாமி நாயக்கரு" என்று தலைப்பு வைத்து விட்டதால் பெரியாரின் அடிப்படைக் கொள்கையை அதிலும் பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கொள்கையை வீரமணி அவர்கள் குழி தோண்டி புதைத்து விட்டதாக ஒரு சிலர் குய்யோ முறையோ என்று கூக்கிரலிட்டு வருகிறனர். கூக்கிரலிடும் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தோன்றிய விதத்தில் காரணங்களை கற்பித்து விமர்சித்து வருகின்றனர். நாமும் அவ்விமர்சனங்களை ஊன்றிப் படித்து வருகிறோம். எனது நெருங்கிய நண்பர்கள்கூட அலைபேசியில் அழைத்து இப்படி பெயரிடுவது சரியா? என்று விளக்கம் கேட்டு வருகின்றனர். அவர்களின் அய்யம் போக்கி தெளிவு ஏற்படுத்த பெரியாரியல் அடிப்படையில் இப்பிரச்சினையை ஆய்வு செய்வோம்.
ஆரம்ப காலங்களில் சென்னை மாநிலத்தில் நாயக்கர் என்றால் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களை குறிக்கும் சொல்லாக நாயக்கர் என்ற சொல் இருந்தது. குடி அரசு இதழ்களி கூட ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றே பதிவு செய்யப்பட்டது 1927 குடி அரசு இதழிலிருந்து நாயக்கர் என்ற சொல் தூக்கியெறியப்பட ்டு ஈ.வெ.ராமசாமி என்று பதிவு செய்யப்பட்டது. அதன் பின் 1938 இல் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. (இந்தப் பட்டம் வழங்கப் படுவதற்கு முன்பே பெரியார் ராமசாமி என்று பலராலும் அழைக்கப்பட்டு வந்தார்) இது குறித்து ஆனைமுத்து அவர்கள் தரும் விளக்கம் இதோ:
“ஈ.வெ.ராமசாமி அவர்கள் 1938 முதல் பெரியார் என அன்புடன் அழைக்கப்பட்டார் என்பதாக இது காறும் வெளிவந்துள்ள வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஆயினும் இது குறித்து உண்மை வேறாகும். தமிழகத்தில். ஒருவரின் சொந்தப் பெயரின் பின்னால் அவரது சாதிப்பெயரைக் குறிக்கும் பட்டச் சொல் (cast title) இணைக்கபட்டே அழைக்கப்படுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள பழக்கமாகும். இது அப்பெயரை உடையவருக்கு உரிமையாகவும், பிறருக்கு நீங்காக் கடமையாகவும் சாதி வழக்கச் சம்பிரதாயங்களின ் படி பெருமை சேர்ப்பதாகவும் இன்று கருதப்பட்டு வருகிறது. இச்சம்பிராதாயத் தை உடைத்து வழிகாட்ட விரும்பிய ஈ.வெ.ரா. 18.12.1927 “குடிஅரசு” மலர் வரையில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எனக் குறிப்பிட்டு வந்ததை மாற்றி 25-12-1927 “குடிஅரசு” மலர் முதல் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி என்று மட்டும் குறிப்பிட்டு ‘நாயக்கர்’ என்பதை நறுக்கிவிட்டார் . இவ்வாறாக ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில் ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானத ு. அவருக்கு உரிய பெருமையைக் குறைத்து விடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் ‘நாயக்கர்’ என்ற சொல் இருந்த இடத்தில் ‘பெரியார்’ என்ற சொல்லை முதல் முதலாகச் சேர்த்து “ஈ.வெ.ராமசாமிப் பெரியார்” என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு.பி.சிதம்பர ம்பிள்ளையே ஆவார். மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நம் அறிஞர்கள் பலரும் ‘ஈ.வெ.ரா. பெரியார்’ என்றே குறிக்கலாயினர். 20.21.7.1929இல் நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் திருவாளர்கள் எஸ். குமாரசாமி ரெட்டியார், நீதிபதி எம்.கோவிந்தன். டீ.கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோரும் பெரியார் எனக் குறிக்கலாயினர். 1930ல் திருச்சி மருத்துவகுல சங்கத்தார் அளித்த உபசாரத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்றும் (சென்னை, திராவிடன் 5.9.1930) ; 22.10.1932ல் கொழும்பு நகரில் ஆதிதிராவிட சங்கத்தார் அளித்த வரவேற்பில் பெரியார் இராமசாமி (“குடிஅரசு” 6.11.1932) என்றும் நெஞ்சாரப் போற்றி பெரியார் என அழைக்கலாயினர். இவ்வாறாக 1928 முதல் பெரியார் என அன்புடன் அழைக்ப்பட்ட அன்னார், 1938 முதல் பெருவழக்காக அவ்வாறு அழைக்கப்பட்டார் . 12,13 -11 -1938 ல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் நடைபெற்றது. தமிழ்நாட்டுப் பெண்கள் விடுதலைக்குப் பெரியார் ஆற்றியுள்ள தொண்டுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதல் தீர்மானமாக அம்மாநாட்டில் நிறைவேற்றினர். ஆத்தீர்மானமாவது . “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்த தலைவர்கள் செய்யவியலாமற்போ ன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும்., தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவர் அல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிழும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது. (விடுதலை 16.11.1938)
----------------(வே.ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -1
பக்கம் XXXVIII – XXLX)
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இப்படித்தான் பெரியார் ஆனார். சமீபத்தில் தெலுங்கில் வெளியிட்ட பெரியார் திரைப்படத்திற்க ும் இந்த அடிப்படையில் அதாவது ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பவர் செய்த தொண்டால் உழைப்பால் பெரியார் ஆனார் என்பதை மக்களுக்கு உணர்த்த "பெரியார் ராமசாமி நாயக்கரு" என்று பெயரிட்டிருக்கல ாம். அந்தப்படத்திலும ் (பெரியார்) தமிழ் திரைப்படத்திலும ் நாயக்கர் என்று அழைக்கும் காட்சி வந்துள்ளதே.
ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறும் பெரியார் ஜாதிவாரி இடஒதுக்கீடு கேட்கலாமா? ஜாதி ஒழிய வேண்டும் என்ற பெரியார் ஜாதி மாநாடுகளில் கலந்து கொள்ளலாமா? கடவுள் இல்லை என்று சொல்லும் பெரியார் மட்டும் ராமசாமி என்று பெயர் வைத்துக் கொள்ளலாமா? கடவுள் இல்லை என்று சொல்லும் பெரியார் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரலாமா?
இது போன்ற அபத்தமான விமர்சனங்கள் போல் தான் பெரியார் தெலுங்குப் பட தலைப்பு தொடர்பான விமர்சனமும். வீரமணி அவர்களை எப்படியாவது கொச்சைப் படுத்தி விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கம் தான் அவர்களுக்கு முக்கியமாக படுகிறதே தவிர இதில் உள்ள உண்மைத் தன்மையை உணர மறுக்கும் இவர்களுக்கு பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தை மீண்டும் போடச் சொல்லலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன ் என்று பெரியார் பேசியது இவர்களுக்கு தெரியுமா?
இதோ பெரியார் பேசுகிறார்:
”தோழர்களே! மக்கள் எல்லாரும் தத்தமது ஜாதிப் பட்டங்களை, அதாவது முதலியார், செட்டியார், கவுண்டர், படையாச்சி, நாயுடு போன்ற பேருக்குப் பின் சேர்த்துக் கொள்ளும் சொல்லை எல்லாம் போட்டுக் கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்று சொல்லி வந்திருக்கின்றோ ம். அதன்படியே நாங்களும் மற்றும் பல்லாயிரக்கணக்க ான மக்களையும் அப்படியே வாலைத் (ஜாதிப் பட்டத்தை) துறக்கும்படியே செய்து இருக்கின்றோம். அப்படிக் கூறிச் செயலிலும் காட்டிய நான் இன்று மக்களை மீண்டும் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்ளச் சொல்லலாமா என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றேன். இப்படி நான் சொல்வதால் இவன் தன் கொள்கையில் இருந்து பல்டி (தலைகீழாய்க் குதித்தல்) அடித்துவிட்டான் என்று என்னைப் பலர் ஏளனம் செய்யலாம். அது பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் என் சுயநலத்திற்காக எந்தவித நலத்தினையும் எனக்கு எதிர்பார்த்து பல்டி அடிக்கவில்லை. பொது நலத்துக்காகப் பல்டி அடிக்கின்றேன்.
தோழர்களே! இதை நீங்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் ஜாதி ஒழிய வேண்டும், ஜாதியைக் காட்டக் கூடிய ஜாதிப் பட்டத்தைவிட வேண்டும் என்று கூறி விளங்கிக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் ஜாதிப் பட்டத்தை விடாப் பிடியாகப் போட்டு கொண்டு வந்தனர்.
கல்வி, உத்தியோகங்களில் பார்ப்பனர் தம் ஆதிக்கமே அதிகமாக இருக்கின்றது. 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் 100 க்கு 70, 80 உத்தியோகங்களில் இருக்கின்றார்கள ். கல்லூரிகளிலும், தொழில் படிப்பிலும் பார்ப்பன மாணவர்களே மிகுதியாக இருக்கின்றார்கள ். 100 க்கு 97 பேராக உள்ள நமக்குக் கல்வியிலும், உத்தியோகத்திலும ் உரிய பங்குகள் இல்லையே என்று புள்ளி விவரங்களோடு எடுத்துக்காட்டி , கூப்பாடுகள் தொடர்ந்து போட்டுக் கொண்டு வந்தால் நம்மவர்களுக்கும ் (திராவிடருக்கும ்) உணர்ச்சி வந்து எதை எடுத்தாலும் பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சியே தலை எடுக்க ஆரம்பித்துவிட்டது.
இதன் காரணமாக நம்மவர்களும் கல்வி உத்தியோகங்களில் பார்ப்பனருடன் போட்டி போடுவது மட்டும் அல்லாமல், 100 க்கு 97 உள்ள எங்களுக்கு எங்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு உத்தியோகத்திலும ் பங்கு வேண்டுமென்று கூப்பாடு போட்டு, அதை ஓரளவு செயல்படும்படியு ம் செய்து விட்டனர். இதன் காரணமாக 100 க்கு 3 பேராக பார்ப்பான் 100 க்கு 70, 80 பதவிகள் அனுபவித்து வந்த நிலை மளமளவென்று குறைலாயிற்று.
இன்று கல்லூரிகளில் சேரச் சென்றாலோ, உத்தியோகத்திற்க ு விண்ணப்பித்தாலோ , இண்டர்வியூவில் (நேர்காணல்) ஜாதியை அறிந்து கொண்டு சேர்த்துக் கொள்கின்றனர்.
அதன் காரணமாகப் பார்ப்பனர்கள் தந்திரம் செய்து தங்கள் பேருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப் போடுவதை விட்டு விட்டனர்.
அத்தோடு மட்டும் அல்லாமல் ஜாதி இன்னது என்று இண்டர்வியூலோ, விண்ணப்பத்திலோ நேர்முகம் மட்டும் அல்லாமல் மறைமுகமாகக் கூட கேட்கக் கூடாது என்று அரசாங்கம் மூலமே கூறச் செய்துவிட்டனர்.
இந்த நிலையில், ஜாதி கண்டுகொள்ள முடியாமல் போகின்றதனால், பார்ப்பனர்களே மீண்டும் உத்தியோகங்களிலு ம் கல்லூரிகளிலும் நிரம்ப இது ஏதுவாகின்றது. எனவே தான் நாம் இனிக் கல்வி, உத்தியோகங்களைப் பொறுத்தாவது விண்ணப்பிக்கும் போது ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொண்டால் அதன் மூலம் தேர்வு செய்பவர்களுக்கு ப் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்) என்று தெரிந்து கொள்ள முடியும். இதன்படிக் கூறலாமா என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன்.
சென்னை மாநிலத்தில் நல் வாய்ப்பாக நமக்குக் கிடைத்து இருக்கும் முதல் அமைச்சர் காமராசர் ஆட்சியில், நாம் கல்வி உத்தியோகங்களை ஓரளவு அடைவதற்கு வசதி ஏற்பட்டு இருக்கின்றது. இதனைக் கண்டு பொறாது பார்ப்பனர்கள் - "இங்கு ஜாதி பார்த்து உத்தியோகம் கொடுப்பதால் நீதி கெட்டுப் போச்சு, நிருவாகத் திறமை கெட்டுப் போச்சு. ஜாதி பார்த்து கல்லூரியில் சேர்ப்பதால் கல்வியில் தரமே கெட்டுப் போச்சு" என்று கூப்பாடு போட்டு இந்த ஆட்சிக்கு மத்திய ஆட்சியிடம் களங்கம் கற்பிக்கும் வேலை நடைபெறுகின்றது.
இதன் மூலம் நம் மக்களுக்குப் பெரிய கேடு வர இருக்கின்றது. அதனில் இருந்து நாம் மீளவேண்டும். இராசகோபால ஆச்சாரியாரின் சுதந்தரா கட்சியின் உள் எண்ணம் பற்றியும் எதிர்க்கட்சிகளி ன் பித்தலாட்ட அரசியல் பேச்சுகள் பற்றியும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.”
---------------- 28-05-1960 கருர் நகரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 29-05-1960
பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவது குறித்து பெரியார் மிகத் தெளிவாகவே விளக்கியுள்ளார்.
ஜாதி ஒழிப்பது என்பது கொள்கை (Principles ).ஜாதி ஒழிய குடுமி வைக்கக் கூடாது, பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்பது போன்ற செயல்கள் திட்டங்கள் ( Policies ).
காலப்போக்கில் கொள்கையில் மாற்றம் இல்லாமல் திட்டங்களில் மாற்றம் செய்து கொண்டு பெரியார் போராடியுள்ளார். மேற்கண்ட பெரியாரின் சொற்பொழிவு நமக்கு தெளிவாக அதை உணர்த்துகிறது.
அம்மை நோயை தடுப்பதற்கு அம்மை கிருமியிலிருந்த ே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டது போல் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஜாதி என்னும் கிருமியை, நோயை ஒழித்து பெரியார் ஆனார் என்ற வரலாற்றை சொல்ல பெரியார் ராமசாமி நாயக்கரு" என்ற தலைப்பு கொடுத்திருக்கிற ார்களே ஒழிய ஜாதியை நிலை நிறுத்த அல்ல.
RSS feed for comments to this post