எவரும் தொடுவதற்கு அஞ்சும் பிரச்சினையை திரைப்படமாக்க முன் வந்த துணிவுக்காகவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அவரது எழுத்து-இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘இறைவி’ படம் பெண்ணுரிமை என்பதையும் தாண்டி பெண்விடுதலையைப் பேசுகிறது. ஆண்கள் தங்களிடம் கட்டி எழுப்பியிருக்கும் ‘ஆணாதிக்கம்’ என்ற ஆணவத்துடன் எடுக்கும் முடிவுகள், பெண்களிடம் உருவாக்கும் கடும் பாதிப்புகளையும் வலிகளையும் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
சிலப்பதிகாரம் - தமிழ் தேசிய இலக்கியமாக – தமிழ் தேசியவாதிகளால் முன் வைக்கப்படுகிறது. அதில்அடங்கியுள்ள பெண்ணடிமை சிந்தனையை பெரியார் கேள்விக்குள்ளாக்கினார். மாதவி எனும் தாசிவீட்டுக்குச் சென்ற கணவன் கோவலன், எப்போதுதிரும்பி வருவான் என்று உடலையும் உள்ளத்தையும் வருத்தி காத்திருக்கிறாள் கண்ணகி. இதேபோல் கண்ணகி, தனதுகாதலன் வீட்டுக்குச் சென்றால், கோவலன் காத்திருப்பானா என்று பெரியார் கேட்ட கேள்வியை இத்திரைப்படமும் கேட்கிறது.
கைவிட்டு ஓடிய காதலனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பாத்திரம் இந்த படத்தில் காதலையும் திருமணத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. கொலைக் குற்றத்தில் சிறைக்குப் போய்விட்டு திரும்பிய கணவன், தனது மனைவியை மிகவும்நெருக்கமான நண்பன் ஒருவன் காதலித்த செய்தியை அறிகிறான். இதே கணவன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து, அவளுடன் படுக்கையையும் பகிர்ந்து கொண்டவன்தான். கணவனின் சந்தேகத்திற்கு மனைவி துணிவுடன் பதில்கூறுகிறாள். “உன்னுடைய நண்பன், அவனது காதலை என்னிடம் கூறியது உண்மைதான். நான் அதற்கு அவனிடம் பதில்கூறவில்லை. ஊரைவிட்டு இங்கு வந்து விட்டேன்.” “அது மட்டும்தானா?” என்று கணவன் மீண்டும் கேட்கிறான். அப்போதுமனைவி கூறும் பதில்தான் பெண்ணுரிமையின் உச்சம். “படுத்திருந்தேனா என்று கேட்கிறாயா? அதற்கு நான் உனக்குபதில் கூறப் போவது இல்லை. இந்தக் கேள்வியை கேட்கும் உரிமையும் உனக்கில்லை” என்று நெத்தியடி தருகிறாள். தன்னை‘பத்தினி’யாக நிரூபிக்கும் அவசியமில்லை என்பதே இதில் அடங்கியுள்ள கருத்து. படத்தின் இறுதிக் காட்சியில் தொடர்வண்டி நிலையத்தில் கதாநாயகன் சூர்யா பேசும் வசனம், படத்தின் மய்யக் கருத்தை உடைத்துப் பேசுகிறது.
“பொறுத்துப் பொறுத்துப் போவதற்கு நாங்க என்ன பொம்பளைங்களா? நான் ஆண்; ஆண்-அது நெடில்; பெண்-அது குறில்.” ஆண் ஆதிக்க உணர்வு கொண்ட கொலையுண்ட கணவர்களின் இரண்டு மனைவியர்கள், கணவர்களை இழந்த பிறகுதங்கள் குழந்தைகளுடன் பேசும் இறுதிக் காட்சிகளில் அவர்கள் விடுதலை பெற்ற மனஉணர்வுக்கு வந்துவிட்டதாகவே இயக்குனர் உணர்த்துகிறார். “மழையில் நனைவோம்” என்று குழந்தைகளுடன் பேசி, தங்களின் மன உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். மனிதன் என்ற சொல்லுக்கு பெண்பால் சொல் இல்லை. இயக்குனர் ‘மனிதி!’ என்ற சொல்லை அறிமுகப்படுத்துகிறார். ‘மனிதியே வெளியில் வா’ என்ற முத்தாய்ப்பான பாடல்வரிகளுடன் படம் முடிகிறது. ‘இறைவன்’ என்ற சொல்லுக்கு, பெண்பால் ‘இறைவி’ - சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட இந்த சொல் வழக்கொழிந்து நிற்கிறது. இயக்குனர் இதையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்.
‘விபச்சாரி’ என்ற சொல்லுக்கு ‘விபச்சாரகன்’ என்ற ஆண்பால் சொல் ஏன் இல்லை? ‘விதவை’ என்ற சொல்லுக்கு‘விதவன்’ என்ற ஆண்பால் சொல் ஏன் இல்லை? - இது பெரியார் கேட்ட கேள்வி. அதே திசையில் இயக்குனரும் சிந்தித்திருக்கிறார். படம் நீண்டு கொண்டே போவதும், இடையிடையே சோர்வுகளைத் தருவதும் உண்மைதான் என்றாலும் அதையும் தாண்டி துணிவுடன் பெண் விடுதலையைப் பேசும் இத் திரைப்படத்தையும் எழுதி இயக்கிய கார்த்திக் சுப்புராஜையும் பாராட்ட வேண்டும்.
>இது யதார்த்தம் . இயக்குனர் " அந்த யதார்த்தை நியாயபடுதவில்லை -அதை அமபலபடுத்துகிறா ர் .
> ஆண், தனக்கு பிடித்ததை , கோபத்தை, கொலையை எப்படி, எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் ( தன்னை பற்றிய சுயநல சிந்தனையே ) அதனால் தன்னை சார்ந்தோருக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டு கொள்ளாமல் , தனது " இகோவுக்கு " மட்டுமே இணங்கி , தலைவணங்கி போகும் "நான் -ஆண் , எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது , என்ற அகம்பாவத்தை -அமபலப்டுத்திகி றார் !
> பெண்களின் கையறு நிலையை பயன்படுத்தும் இந்த ஆண்கள் " ஒரே ஒருதடவை "மா , இனி அப்படி செய்யமாட்டேன் என மேலும் பெண்களின் " இளகிய - மென் தன்மையை , அவர்கள் காட்டும் அளவில பாசத்தை " குப்பையில் எரியும் , இந்த சமூகத்தின் எதார்த்த மனிதர்களை "அமப்லப்டுத்துக ிறார் "இறைவி -பட இயக்குனர் .
> பல படங்கள் அவர் எடுத்திருந்தாலு ம் , ஒன்றை ஒன்று பொருத்தி பார்ப்பது " சரியானது அல்ல .
ஒவ்வொரு படமும் , வெவ்வேறு தளம் ...
> யாதார்த்தை உச்சி வரை உணரவைத்த படம் -இறைவி .
+++++++++++++++ பெண்களுக்கு என்று மனது -விருப்பம் - ஆசை - சிந்தனை -என எல்லாமே இருக்கிறது என்ற உணமையை ஏற்க மறுக்கும் " சமகால " ஆண் மேலாதிக்க-ஆண் அகம்பாவ உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற மிகையாகாது -- அதைதான் இளைய இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் படைத்திருக்கிறா ர் -
> பாலச்சந்தர் -பாலு மகேந்திரா -மகேந்திரன் பாணி அந்தகால பாணி அதையும் ஆராதிதோம்
> நலன் குமாரசாமி - நடராஜ் - கார்த்திக் சுப்புராஜ் - பாலா - சமுத்ரகனி -வெற்றிமாறன் -மற்றும் பல -- இது இன்றைய பாணி யதார்த்த படைப்புகளின் பிதாமகன்கள் - இவர்களையும் நல்ல யதார்த்த படைப்புகளையும் ஆராதிப்போம் .
> இறைவி - தமிழில் இல்லாத வார்த்தை - ஆனால் சொல்லபடாத காவியம் அல்ல - பாலசந்தரும் சொல்லி இருக்கிறார் அவர்பாணியில்
RSS feed for comments to this post