ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை.இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங்களுடன் விளக்குகிறது. நூலிலிருந்து...

தமிழ் மன்னர்கள் ஆகிய சோழர்கள் ஆரிய பார்ப்பனர்களுக்குச் சிறப்பிடம் அளித்து அவர்களின் அடிமைகளைப் போல் ஆட்சி செய்து இருக்கின்றனர். இராசராச சோழன் உள்பட அனைத்து மன்னர்களின் கதையும் இதுதான். பார்ப்பன அடிமைத்தனத்தின் உச்சத்தைத் தொட் டவன் இராசராச சோழன். அதைத் தெளிவாகச் சான்றுகளுடன் விளக்கும் பகுதி பார்ப்பனர் களுக்கும் மன்னர்களுக்கும் இடையே ஒரு தவிர்க்க முடியாத உறவு, பிரிக்க முடியாத உறவு இருந்து வந்தது. இது எல்லா நாடுகளிலும் காணப்பட்ட மதம் - அரசு / அரசர்கள் உறவைவிட நெருக்க மானது. பிறப்பின் அடிப்படையில் அமைந்தது.

பார்ப்பனர்களின் நால் வகுப்பு முறை பிறப்பின் அடிப்படையில் தொழில்களை அமைக்கும் விதமாக அமைந்திருந்தது. ஒருவன் எந்த குலத்தில் பிறந்தானோ அந்தக் குலத்திற்கு உரிய தொழிலைத் தான் செய்ய வேண்டும், செய்ய முடியும் என்ற நால்வகைப் பகுப்பு முறை ஒரு இறுக்கமான கட்டமைப்பு ஆகும். மேலும் தலைவிதி, மறு பிறப்புப் போன்ற கருத்துகளையும் பார்ப்பனர் களின் தத்துவம் ஆதரித்து நிற்கிறது. மன்னன், கடவுளின் குறிப்பாகத்  திருமாலின் மறு அவதாரம். எனவே, அவனது அரச கட்டளைகள் கடவுள் சொல்லுக்கு இணையானவை, அவற்றை யாரும் எதிர்க்க  கூடாது. இது போன்ற கருத்துகளை மக்களிடம் பரப்புவதற்குப் பார்ப்பனர்களின் கருத்தியல் மன்னர்களுக்கு தேவையாய் இருந்தது. மன்னர்கள் மக்களைக் கருவிகளைக் கொண்டும், கொலைக் கருவிகளைக் கொண்டும், அடக்குவதை விட இத்தகைய கருத்துகளைக் கொண்டு அடக்கு வது எளிது என்பதை விரைவில் உணர்ந்து கொண் டனர். அதைப் பார்ப்பனர்கள்தான் திறமையாகச் செய்வார்கள் என்பதையும் உணர்ந்து கொண் டார்கள். எனவே மன்னர்கள், பார்ப்பனர்கள் கூட்டுறவு இருவருக்கும் பயன் அளிப்பதாய் விளங் கிற்று. மக்களை ஏமாற்றுவதிலும், அவர்களைச் சுரண்டுவதிலும் இந்த ஒற்றுமை மிகவும் திறமையாக வேலை செய்தது, இத்தகைய கூட்டுறவு இன்று வரை தொடர்ந்து நடைமுறையில் இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும். சங்ககாலம் தொட்டே இந்த உறவு இருந்து வந்தது. கே.கே. பிள்ளை அவர்கள் தமிழக அந்தணர்கள் நல்லவர்கள், தமிழே அவர்கள் மொழி என்று தமது நூலில் வாதிடுகிறார் (மேலது பக்.315-317). ஆனால் அதற்குத் தக்கச் சான்றுகள் எதையும் அவர் காட்ட வில்லை. மாறாக சங்ககாலப் பாடல்கள், மன்னர் களின் பெயர்கள் ஆகியவை அம்மன்னர்களும் பார்ப்பன அடிமைகளே என்ற எண்ணத்தைத் தான் தோற்றுவிக்கிறது. கரிகாற் சோழனைப் பற்றிய சங்கப் புலவன் பாட்டு, வேத வேள்வி செய்த பார்ப்பனருக்கு நிதி, கொடை அளித்து உதவி செய்தான் என்பதை சிறப்பித்துக் கூறுகிறது. பல்யாகசாலைப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போன்ற பெயர்கள் சங்ககால மன்னர்கள் யாகம் செய்தார்கள் அல்லது செய் வித்தார்கள் என்பதைச் சுட்டி நிற்கும். அதன் பின்னர் வந்த களப்பிரர் சமண சமயத்தினர், அவர்கள் காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் கட்டுக்குள் இருந்ததாகத் தெரிகிறது.

வேள்விக்குடி செப்பேடு இதனைத் தெளிவாகக் கூறுகிறது. அதில் ஒரு பார்ப்பனப் புலவன் பாண்டிய மன்னனைப் பார்த்துக் கூறும் செய்தி, “முன்னர் உன்னுடைய முன்னோர்கள் எங்களுக்கு நிலம் கொடுத்தனர், பின் கலி சூழும் காலம் தோன்றிய போது அந்த நிலம் எம்மிடம் இருந்து பிடுங்கப்ப ட்டது. (இது களப்பிரர் ஆட்சியைக் குறிக்கும் காலமாக இருக்கலாம்) கலி என்னும் இருள் நீங்கியவுடன் அந்நிலம் எம்மிடம் வந்து சேர்ந்தது”. இதனால் நாம் அறியும் செய்தி பார்ப்பனருக்கு நிலக் கொடை அளிக்கும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தே நிலவி இருக்கிறது என்பதே. களப்பிரர் காலத்திலும் பல்லவர் காலத்தில் மகேந்திரவர்மன் காலம் வரையிலும் பார்ப்பனர் கொட்டம் அடங்கியே இருந்தது. மகேந்திரவர்மன் சைவ மதத்திற்கும் அதன் பின்னர் வந்த பல்லவர்கள் அவரவர் விருப்பப்படி சைவ அல்லது வைணவ மதத்தைத் தழுவிய பிறகு நிலை தலைகீழாக மாறி சமணர்களும் சாக்கியர்களும் விரட்டப்பட்டனர். சிவ - வைணவ மதங்களுக்கு அரசர்கள் ஆதரவு பெருகிற்று. சமணர்கள் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். மதுரையில் கழுவேற்றப்பட்டனர். வட ஆற்காடு எண்ணாயிரம் என்ற ஊரில் 8000 சமணர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆழ்வார் ஒருவர் சமணர்களையும் சாக்கியர்களை யும் கண்ட இடத்தில் கொல்லுவதே சிறந்த மதத் தொண்டு என்று பாடியுள்ளார். இவ்வாறாகப் பல்லவர் காலத்தில் சிவ, வைணவ மதங்களின், குறிப்பாகப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலை பெறத் தொடங்கிவிட்டது. பிறகு பிற்கால சோழ, பாண்டியர், விசய நகர, மராட்டியர் என்று காலம் காலமாய் நின்று நிலவ ஆரம்பித்துவிட்டது. இன்றும் அது நீடித்து வருகிறது.

கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் கூறுவது நமது நெஞ்சை உருக்குவதாய் அமைகிறது. “தமிழகத்து மன்னர்கள் தமிழகத்து அந்தணர் களிடம் என்ன குறை கண்டனர் என்பது விளங்க வில்லை. இம்மன்னர்கள் ஆயிரக்கணக்கில் வட நாட்டு பிராம்மணர்களை இறக்குமதி செய்து கோவில்களிலும் கல்வி நிறுவனங்களிலும் மடங் களிலும் அவர்களைப் பணிக்கு அமர்த்தினர்.

பொன்னையும் பொருளையும் குடியுரிமைகளை யும் வாரி வழங்கினர். “பிராமணருக்கு” மட்டும் நிலங்களும் முழு கிராமங்களும் தானமாக வழங்கப் பட்டன. அகரம் அக்கிரகாரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் இவை விளங்கின. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல் படாது.

எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், ஆயங்கள், கடமைகள் ஆகியவற்றிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது. இதைவிடத் தெளிவாக ஒரு வரலாற்று ஆசிரியர் எவ்விதம் பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றிக் கூறுவார் என்று எதிர்பார்க்க முடியும்? ஆயினும் சில திருந்தாத உள்ளங்கள் “சோழர்கள் அப்படி இல்லை! பார்ப்பன ஆதிக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தனர்” என்று வரலாற்றைப் புரட்டிப் போட்டு முதுகில் குத்தும் வேலையைச் செய்து வருகின்றனர். இதற்குச் சில தமிழ் ஆய்ந்த முனைவர்களும் முது முனைவர்களும் தாளம் போடுகின்றனர். 1000 கிராமங்களில் 230-ஐத் தான் சோழர்கள் தானமாக அளித்தனர். இது ஒரு பெரிய செய்தியா? பார்ப்பன வரலாற்று ஆய் வாளர்கள் வேண்டும் என்றே கூட்டிச் சொல்லி பார்ப்பனர்களுக்கு சோழர்கள் ஆதரவாகச் செயல் பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டனர்” என்பது அவர்கள் வாதமாகும். இந்த எண்ணிக்கைகளை அவர்கள் எப்படி பெற்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் மக்கள் தொகையில்

2 சதவீதம் உள்ள அயலவர் கூட்டம் 20 சதவீதம் நிலத்தைத் தானமாகப் பெறுவது குற்றமாக அவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஏன்? சோழர்கள் குறிப்பாக இராசராச சோழனின் நற் பெயரை நிலைநாட்டி அவனைத் தமிழ்க் காவலனாகக் காட்டுவதற்குத்தான்! ஆனால், கல்வெட்டுகள் பொய் சொல்லுவதில்லை. கோவிலில் போடும் சோற்றில்கூட வேதம் பயின்ற சிவனடியார்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) முதல் இடம், மற்றவர்களுக்கு இரண்டாம் இடம் என்று இட ஒதுக்கீடு செய்த கொடுமையைக் கல்வெட்டுகள் சொல்லுகின்றன.

(தொடரும்)