பன்றியை இந்து புராணங்கள் - மகா விஷ்ணுவின் அவதாரம் என்று புகழ் கின்றன. ஆனால், ஒரு சக ‘இந்து’வை ‘பன்றி’ என கூறி விட்டால் அதற்காக எந்த இந்தும் மகாவிஷ்ணுவுக்கு ஒப்பிட்டதாக பெருமைப்படுவது இல்லை. திருப்பி அடித்து விடுவான். பன்றி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு பன்றி விரும்பி சாப்பிடும் “உணவை”யே படைக்கலாமா என்று கேட்டால், உடனே மதத்தைப் புண்படுத்துகிறார்கள் என்று ஓலமிடத் தொடங்கி விடுவார்கள்.

இப்போது பத்திரிகைகளில் கதா நாயகன் ஒவ்வொரு நாளும் மகாவிஷ்ணு தான்! உலகம் முழுவதும் ‘மகாவிஷ்ணு’ வைக் கண்டு நடுங்கிக் கொண்டிருக்கிறது. மகாவிஷ்ணு, காய்ச்சல் அவதாரம் எடுத்து மக்களின் உயிரோடு திருவிளையாடல் நடத்து கிறான். அதற்காக மக்கள் பகவான் வந்து விட்டார் என்று கூறி மகிழ்ச்சிக் கூத்தாட தயாராக இல்லை. ‘மகாவிஷ்ணு’ காய்ச்சலை அதாவது, பன்றி காய்ச்சலை விரட்டி அடிப்பதற்கு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாவிஷ்ணு (பன்றி) காய்ச்சல் - தொற்று நோய். இந்தத் தொற்று நோய்களையெல் லாம் தடுப்பதற்கு நமது முன்னோர்களே பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்திருந்த தாகவும், அதுதான் ‘நமஸ்தே’ என்று கும்பிடு போடும் பழக்கம் என்றும் ஒரு பார்ப்பனர் ‘இந்து’ ஏட்டில் (ஆக. 23) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான” இந்துவும் அதை வெளியிட்டிருக்கிறது. ஒருவருக் கொருவர் கை குலுக்காமல், கும்பிடு போடும் பார்ப்பன கலாச்சாரம் ‘தீண்டாமை’யின் மறுவடிவம்தான். நாட்டில் தொற்று நோய்கள் பரவா திருக்க ‘தீண்டாமை’யைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதன் மூலம் ‘தீண்டாமை nக்ஷமகரமானது’ என்று சங்கராச்சாரி கூறுவதை நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். எப்போதோ வந்து போகும் தொற்று நோய்களுக்காக சமூகம் ஒருவரையொருவர் ‘தீண்டாமல்’ வாழ்வதே சிறந்த தத்துவம் என்று கூறி, இந்து பார்ப்பனியத்தை நியாயப்படுத் தும் எல்லைக்குப் போய் விடுகிறார்கள்.

எங்கேயாவது விமான விபத்துகள் நடந்தால் கூட அதற்காகத்தான் ‘கடல் தாண்டக் கூடாது’ என்று, ‘இந்து தர்மம்’ ஏற்கனவே கூறியிருக்கிறது என்று இவர்கள் கூறினாலும், வியப்பதற்கு இல்லை. தகாத உறவுகளால் ‘எய்ட்ஸ்’ பரவுகிறது என்பதால்தான் நமது முனிவர்கள் இல்லறத்தையே வெறுத்தார்கள் என்று கூறி, இனி, திருமணமில்லாத வாழ்க்கையே சிறந்தது என்று இவர்கள் கூறுவார்களா, என்று எவரும் கேட்டுவிடக் கூடாது. ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளாமல் தூர நின்று, ‘கும்பிடு போட்ட’ காலங்களில் பிளேக் நோயும் காலராவும் பரவி, ஊர் ஊராக பிணங்கள் விழுந்தனவே. அதற்கு என்ன காரணமாம்! இத்தகைய அபத்தங் களை கட்டுரையாக வெளியிடும் மவுண்ட் ரோடு ஆங்கில “பன்றி”கள் (அதாவது மகாவிஷ்ணுவின் மாற்றுப் பெயர் என்று அறிக!) ‘தீண்டாமை’யை நியாயப்படுத்துகின்றனவா? இதற்காக ‘தீண்டாமை’ தடுப்புச் சட்டத்தின் கீழ் எவராவது இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதற்கு நாம் பொறுப்பு அல்ல. தன்மானமுள்ளவர்கள் நாட்டில் இல்லாமலா போய் விடுவார்கள்?