ambedkar 583பல்வேறு ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட வருவாய் முழுவதையும் மொத்த வருவாய்க்கு ஒவ்வென்றும் அளித்த பங்கின் விகிதாசாரத்தையும் அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

முதலாவது நிலவரி: மொத்த நிலவரி வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த வருவாயில் அதன் விகிதமும்.

காலம்

நிலவரி சராசரி

வருடாந்திர வருவாய்

மொத்த வருவாயில் நிலவரியின் பங்கு விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

4,068,000

50.33

1797-98 முதல் 1801-02

4,126,000

42.02

1802-03 முதல் 1806-07

4,582,000

31.99

1807-08 முதல் 1811-12

5,078,000

31.68

1812-13 முதல் 1816-17

9,018,000

52.33

1817-18 முதல் 1821-22

13,263,000

66.17

1822-23 முதல் 1826-27

13,567,000

61.83

1827-28 முதல் 1831-32

13,112,000

60.90

1832-33 முதல் 1836-37

11,942,000

57.00

1837-38 முதல் 1841-42

12,380,000

59.05

1842-43 முதல் 1846-47

13,432,000

55.85

1847-48 முதல் 1851-52

14,947,000

56.06

1852-53 முதல் 1855-56

16,183,000

55.40

1792-93 முதல் 1855-56

10,349,000

54.07

அபினி வருவாய்:

                அபினி வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த வருவாய்க்கு அதன் பங்களிப்பு விகிதமும்.

காலம்

சராசரி

வருடாந்திர வருவாய்

மொத்த வருவாய்க்கு பங்களிப்பு விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

264,000

3.27

1797-98 முதல் 1801-02

312,000

3.18

1802-03 முதல் 1806-07

579,000

4.04

1807-08 முதல் 1811-12

767,000

4.79

1812-13 முதல் 1816-17

958,000

5.56

1817-18 முதல் 1821-22

1,090,000

5.44

1822-23 முதல் 1826-27

1,641,000

7.47

1827-28 முதல் 1831-32

1,747,000

8.12

1832-33 முதல் 1836-37

1,677,000

8.00

1837-38 முதல் 1841-42

1,547,000

7.38

1842-43 முதல் 1846-47

2,965,000

12.33

1847-48 முதல் 1851-52

3,840,000

14.50

1852-53 முதல் 1855-56

4,943,000

16.91

1792-93 முதல் 1855-56

1,667,000

8.71

உப்புவரி:

                மொத்த உப்புவரி வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த வருவாயில் அதன் பங்களிப்பு விகிதமும்.

காலம்

சராசரி

வருடாந்திர வருவாய்

மொத்த வருவாய்க்கு பங்களிப்பு விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

1,207,000

14.93

1797-98 முதல் 1801-02

1,188,000

12.10

1802-03 முதல் 1806-07

1,589,000

11.09

1807-08 முதல் 1811-12

1,785,000

11.14

1812-13 முதல் 1816-17

1,882,000

10.92

1817-18 முதல் 1821-22

2,256,000

11.25

1822-23 முதல் 1826-27

2,603,000

11.87

1827-28 முதல் 1831-32

2,590,000

12.03

1832-33 முதல் 1836-37

2,036,000

9.72

1837-38 முதல் 1841-42

2,593,000

12.37

1842-43 முதல் 1846-47

2,798,000

11.65

1847-48 முதல் 1851-52

2,438,000

9.47

1852-53 முதல் 1855-56

2,677,000

9.17

1792-93 முதல் 1855-56

2,118,000

11.07

சுங்க வருவாய்:

                மொத்த சுங்க வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த வருவாயில் அதன் பங்களிப்பு விகிதமும்

காலம்

சராசரி

மொத்த வருவாய்

மொத்த வருவாயில் பங்களிப்பு விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

192,000

2.38

1797-98 முதல் 1801-02

304,000

3.10

1802-03 முதல் 1806-07

596,000

4.16

1807-08 முதல் 1811-12

807,000

5.04

1812-13 முதல் 1816-17

1,159,000

6.68

1817-18 முதல் 1821-22

1,667,000

8.32

1822-23 முதல் 1826-27

1,663,000

7.58

1827-28 முதல் 1831-32

1,747,000

8.12

1832-33 முதல் 1836-37

1,506,000

7.19

1837-38 முதல் 1841-42

1,418,000

6.76

1842-43 முதல் 1846-47

1,449,000

6.02

1847-48 முதல் 1851-52

1,439,000

5.40

1852-53 முதல் 1855-56

1,611,000

5.52

1792-93 முதல் 1855-56

1,190,000

6.22

இதரவகை வருவாய்கள்:

                இந்த இனத்தின் மொத்த வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாயில் இதன் விகிதமும்

காலம்

சராசரி

வருடாந்திர வருவாய்

மொத்த வருவாயில் இதன் விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

2,315,000

28.64

1797-98 முதல் 1801-02

3,809,000

38.79

1802-03 முதல் 1806-07

6,857,000

47.87

1807-08 முதல் 1811-12

7,452,000

46.49

1812-13 முதல் 1816-17

3,990,000

23.16

1817-18 முதல் 1821-22

1,392,000

6.94

1822-23 முதல் 1826-27

1,986,000

9.05

1827-28 முதல் 1831-32

1,789,000

8.31

1832-33 முதல் 1836-37

3,059,000

14.00

1837-38 முதல் 1841-42

1,434,000

6.84

1842-43 முதல் 1846-47

1,636,000

6.80

1847-48 முதல் 1851-52

1,977,000

7.40

1852-53 முதல் 1855-56

1,575,000

5.39

1792-93 முதல் 1855-56

3,043,000

15.90

வருவாய் ஆதாரங்களையும் ஒவ்வொரு ஆதாரத்தின் வாயிலாகவும் பெறப்பட்ட தொகைகளையும், ஒட்டுமொத்த வருவாயில் அவற்றின் வீகிதாசாரங்களையும் பற்றிய இந்த விவரங்கள் போதுமானவை.

                செலவுகளைப் பொறுத்தவரை நாம் பின்வரும் இனங்களைக் காண்கிறோம்.

1)            வருவாய் வசூலிப்பதற்கு ஆகும் செலவுகள்

2)            இராணுவம் மற்றும் கடற்படைச் செலவுகள்

3)            சிவில், நீதித்துறை மற்றும் காவல்துறை

4)            பொதுப்பணி

5)            இந்தியாவில் பத்திரக்கடன் மீதான வட்டி

6)            ஒப்பந்தங்கள் மற்றும் அவைகளைப் பயன்படுத்துவதன் கீழ் துணை மாநில அரசர்களுக்கு அலவன்சுகளும் பொறுப்புகளுக்குமான செலவினங்கள்

7)            உள்நாட்டுச் செலவினங்களில் பின்வருவன அடங்கியிருந்தன:

அ. உள்நாட்டுப் பத்திரக் கடன் மீதான வட்டி

ஆ. கிழக்கிந்தியக் கம்பெனிப் பங்குகளின் உரிமையாளர்களுக்கு இலாபப் பங்கீட்டுத் தொகை.

இ. மேதகு ராணியாரின் படைகளுக்கும் இதர நிர்வாக அலுவலர்களுக்கும் ஊதியங்கள்.

ஈ. கிழக்கிந்திய கம்பெனி மற்றும் கட்டுப்பாட்டு வாரியத்திற்கான செலவினங்கள்.

                இனவாரியாகச் செலவினங்களைப் பட்டியலிட்டுக் காட்டுவது உபயோகமானதாக இருக்கும்.

                1800 முதல் 1857 வரையிலான காலகட்டத்தைத் தேர்வு செய்து ஒவ்வொரு பத்தாண்டுகளையும் ஒரு பிரதிநிதித்துவ ஆண்டாக கொண்டு அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் வருவாய் மீதான செலவினங்களின் சதவீதத்தைக் காண்போம்.

பொதுப்பணிகள்:

                பேராசிரியர் ஆடம்ஸின் கூற்றுப்படி வளர்ச்சிக்கான செலவினங்களின் கண்ணோட்டத்திலிருந்துதான் ஒரு நாட்டின் நிநி வளத்தைக் கணக்கிட முடியும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான செலவினங்களில் பொதுப்பணித்துறை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

                இதே அளவுகோலைப் பயன்படுத்திக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதி அமைப்பு முறையை முற்றிலும் கண்டனம் செய்யும் கட்டாயத்திற்க்குள்ளாகிறோம்.

                1885 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிர்வாகம் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. ஆகவே பொதுப்பணிகளில் எந்த ஒரு புதிய திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. அதேசமயம் பழைய திட்டங்களையும் கிடப்பில் போட அனுமதித்தது.

                தமது “நவீன இந்தியா” (1837) என்ற நூலில் டாக்டர்.ஸ்பிரே, “சுதந்திரமான துணை மாநிலத் தலைவர்கள் மற்றும் மன்னர்களின் பிரதேசங்களில் மட்டும்தான் மகத்தான, பயனுள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. நமது பிரதேசங்களில் கால்வாய்கள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், கிணறுகள், தோப்புகள் போன்றவற்றிற்கென்று, வருவாய்களிலிருந்து நமது முன்னோர்கள் ஒதுக்கிய பணிகள் வேகமாகச் சீரழிந்து வருகின்றன” என்று கூறுகிறார்.

                இந்தியாவில் பொதுப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, “இந்திய மக்களின் சார்பாக நான் பேசவேண்டுமெனில், பொதுப்பணிகளைப் பொறுத்தவரை நான் இந்த உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியா முழுவதிலும் இருப்பதைவிட ஒரே ஒரு ஆங்கிலேய கிராமப்புறப் பகுதியில் அதிக சாலைகள் உள்ளன” என்று திரு. ஜான் பிரைட் கூறினார்; தொடர்ந்து “1834லிருந்து 1848 வரையிலான 14 ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி தனது ஆட்சிப்பகுதிகள் முழுவதிலும் சகலவிதமான பொதுப்பணிகளில் செலவிட்டதைவிட மான்செஸ்டர் நகரம் அங்கு வசிப்பவர்களுக்குத் தண்ணீர் வசதி செய்து கொடுப்பதற்காக அதிகப் பணத்தைச் செலவிட்டுள்ளது என்றும் கூறுவேன். இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருந்த உண்மையான நடவடிக்கை போர்தொடுப்பதும் நாடு பிடிப்பதுமாகத்தான் இருந்தது என்றும் கூறுவேன்” என்றார்.

                இந்தியாவின் எல்லா மாகாணங்களுக்கும் “பொதுப்பணித்துறை” ஒரே மாதிரியாக ஆக்கப்படுவதற்கு முன்னர், நிர்வாகத்தின் இந்த முக்கியத்துறை பல்வேறு வழிகளில் நடத்திச் செல்லப்பட்டது.

                பம்பாயில் இத்துறை இராணுவ போர்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. சாலைகள் மற்றும் குளங்களுக்கான கண்காணிப்பாளர் இராணுவ போர்டின் துணை அமைப்பாக இருந்தபோதிலும் அதன் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருந்து செயல்பட்டது.

                வங்காளத்தில் அத்துறை முற்றிலுமாக இராணுவ போர்டின் கட்டுப்பாட்டில் இருந்தது.

                மதராசில் இத்துறையின் நிர்வாகம் மூன்று பிரிவாக இயங்கியது:

அவையாவன:

1)            வருவாய் வாரியத்தின் பொதுப்பணித்துறை

2)            சாலைகளின் கண்காணிப்பாளர்

3)            இராணுவ போர்டு

இந்த அமைப்பின் பல்வகைத் தன்மை டல்ஹவுசி பிரபுவினால் ஒரே சீரான அமைப்பாக மாற்றப்பட்டது. பொதுப்பணிகள் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக அரசின் சார்பாக தனியாக ஒரு துறையை உருவாக்கினார்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்பட்ட பொதுப்பணிகள் பற்றிய விபரத்தைச் சுருக்கமாக இங்குப் பார்ப்போம்.

1) கால்வாய்கள்

                கங்கைக் கால்வாய் 4491/2 மைல்கள்

                கிழக்கு மற்றும் 445 மைல் நீள மேற்கு யமுனைக் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது.

                பஞ்சாப் கால்வாய்கள் பஞ்சாபில் 425 மைல் நீளமுள்ள போரீ – தோவாப் கால்வாய் 1856 ஆண்டு மே மாதம் செயல்படுத்தப்பட்டது.

                மதராஸ் நீர்ப்பாசனப் பணிகள் – குளங்கள், நீர்த்தேக்கங்கள், “அணைக்கட்டுகள்” அல்லது அணைகள் முதலியவை காவிரி, கோதாவரி, கிருஷ்ணா நதிகளின் குறுக்கிலும் படுகைகளிலும் கட்டப்பட்டன.

2) பெருவழி வண்டிச் சாலைகள்:              

 

 

மைல்கள்

செலவு

கல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை

1,423

1,423,000

கல்கத்தாவிலிருந்து பம்பாய்வரை

1,002

500,00

மதராசிலிருந்து பெங்களூர்வரை

200

37,121

பம்பாயிலிருந்து ஆக்ராவரை

734

234,676

ரங்கூனிருந்து புரோமே வரை

200

1,60,000

 3) இரயில் இருப்புப் பாதைகள்

கல்கத்தாவிலிருந்து பர்த்வான் வரை -              120

பம்பாயிலிருந்து வாசின்ட் வரை                            -              50

பம்பாயிலிருந்து கொம்ப்பூயி வரை                    -              10

மதராசிலிருந்து வேலூர் வரை                  -              81

4) மின்சாரத் தந்திக் கம்பிப் பாதை

கல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை

ஆக்ராவிலிருந்து பம்பாய் வரை                             மொத்தத்தில் கிட்டத்தட்ட 4000 மைல்கள்

பம்பாயிலிருந்து மதராஸ் வரை               

                “நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்பணிகளின் விஸ்தரிப்பு பெருமளவில் நடைபெறவுமில்லை; விரும்பியதுபோல் தொடர்ச்சியாகவும் நடைபெறவில்லை. முற்றிலும் இராணுவத் தன்மை கொண்ட பணிகளைத் தவிர்த்து விட்டுத் தகவல்தொடர்பு மற்றும் நீர்ப்பாசனப் பணிகள் சம்பந்தமான நிலம் மற்றும் நீர்வழிப்பாதைகளின் கீழ் வகைப்படுத்தபடும் பணிகளை, வேறு வார்த்தைகளில் சொல்வதெனில் வருவாய் – உற்பத்தி சார்ந்த பொதுப்பணிகளைப் பார்த்தோமானால், அண்மை ஆண்டுகளில் நடைபெற்ற பெரும்பாலான நடவடிக்கைகளுக்காக ஓராண்டிற்கு அதிகபட்சத் திட்டமதிப்பீடாகக் கிட்டத்தட்ட 15 இலட்சம் ஸ்டெர்லிங் ஒதுக்கப்பட்டது. கால்வாய் வெட்டுதல், நீர்பாசனம் போன்ற உடனடி உற்பத்தி சார்ந்த பணிகளைப் பார்த்தோமானால் 1853-54 ஆம் ஆண்டில் 543,333 ஸ்டெர்லிங்கும் செலவிடப்பட்டது.”

                “பிரிட்டிஷ் இந்தியாவின் நிலப்பரப்பு 837,000 சதுர மைல்களாகவும் அதன் மக்கள் தொகை 1,32,000,000 ஆகவும் இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது வருவாய் நிலைமை மிகத் துரிதமான, பரந்த திட்டமதிப்பீட்டைத் தடுத்து வந்தது. திட்ட ஒதுக்கீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாகக் கூறுபவர்களுக்கும் கூட இது பதிலளிப்பதாக இருந்தது. இந்தப் பதில் இதிலுள்ள சிரமத்தைச் சுட்டிக் காட்டுகிறது. மேற்கூறப்பட்ட சம்பவங்களில் இச்செலவினங்கள் உற்பத்தியான பலன்களைக் கொடுத்துள்ளது என்ற உண்மையிலிருந்து மட்டுமன்றி, இந்த நாட்டின் காலனி சாம்ராஜ்யத்தின் இதர துறைகளின் வரலாறு மற்றும் கொள்கையிலிருந்தும் கூட இச்சிரமங்கள் தெளிவாக நமக்குத் தெரிவதுடன் இவற்றிற்குப் பரிகாரம் காணமுடியும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. கவனமாகத் தேர்வுசெய்யப்பட்ட திட்ட இலக்குகள் எதிர்பார்க்கும் பலன்களைத் தராதபோது, அவை அடிக்கடி ஊதாரித்தனமானதாகவும் குறிக்கோளற்றதாகவும் தோன்றக்கூடும் என்ற பொதுவான விதிக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி அல்லது இதர நாடுகளின் வர்த்தகக் கம்பெனிகளின் வரலாறு விலக்கல்ல என்பதைக் காட்டியுள்ளன….

வருவாயின் நெருக்குதல்

                நமது ஆய்வின் இந்தத் துறை முற்றிலும் சாத்தியமற்றதாகும். இது நமது குறிக்கோளுக்கு அப்பாற்பட்டது என்பதல்ல. ஆனால், நமது பாதையில் எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளன என்பதேயாகும். முதலும் முக்கியமுமாக மக்கள் தொகை சம்பந்தமாக நம்மிடம் முற்றிலும் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. அந்த காலகட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இல்லாதிருந்தது. மக்கள் தொகையைப் பற்றிய மதிப்பீடு சுருக்கதில் எந்தவித விஞ்ஞானரீதியான முடிவுக்கும் ஆதாரமாகக் கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு பொதுவான, அர்த்தமற்ற யூகமாக இருந்தது.

                இத்தகைய ஆய்வு மேற்கொள்ளும்போது ஏற்படும் மற்றொரு முக்கியக் குறைபாடு யாதெனில், ஒவ்வொரு ஆண்டும் கிழக்கிந்தியக் கம்பெனி தனது பிரதேசத்தைப் பல சதுர மைல் பரப்புக்கு விஸ்தரித்துக் கொண்டே போயிற்று. ஆகவே, வருவாய் பெருகியது, உயர்வரி விகிதத்தினாலா அல்லது பிரதேசம் விஸ்தரிக்கப்பட்டதனாலா என்பது நம்மைக் குழப்பமடையச் செய்கிறது என்ற உண்மையாகும்.

                மூன்றாவதாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்க் கணக்குகள் தெளிவாக இல்லை. முன்னர் கண்டதுபோல, 1813 வரை அவை வர்த்தகக் கணக்கு வழக்குகளுடன் கலந்திருந்தது. அதற்குப் பின்னர் நாடாளுமன்றச் சட்டத்தின்படி தனியாகப் பிரிக்கப்பட்ட போது அவற்றைப் புரிந்து கொள்வது இயலாததாக இருந்தது.

                இந்த மோசமான குறைபாடுகளின் விளைவாக, நமது ஆய்வின் இந்த முக்கியமான கட்டத்தை ஒதுக்கிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடக்கும் சில அறிக்கைகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது, அது வருவாயின் நெருக்குதல் சம்பந்தமாக நமக்கு சில கருத்துகளைச் சொல்லக்கூடும் வேறு எவரையும் விட, இத்துறையில் நிபுணரான திரு.ஆர்.சி.தத் நிலவரியைப் பற்றி மட்டுமே பேசும்போது, “பிரிட்டிஷ் அரசாங்கம் வசூலித்த நிலவரி மிக அதிகமானது மட்டுமின்றி, அவ்வப்போது ஏறி இறங்கக் கூடியதும் பல மாகாணங்களில் நிச்சயமற்றதாகவும் இருந்தது. இங்கிலாந்தில் நிலவரி ஒரு பவுண்டிற்கு ஒரு ஷில்லிங் மற்றும் நான்கு ஷில்லிங்காக இருந்தது. அதாவது 1798க்கு முன்னர் நூறாண்டுகளாகக் குத்தகையில் ஐந்து முதல் 20 சதவிகிதத்திற்கு இடையில் இருந்தது. அப்போதுதான் அது வில்லியம் பிட்டினால் நிரந்தரமானதாகவும் திரும்பப் பெறக்கூடியதாகவும் ஆக்கப்பட்டது. 1793க்கும் 1822க்கும் இடையில் வங்காளத்தில் நிலவரியானது குத்தகைத் தொகையில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. வட இந்தியாவில் குத்தகைத் தொகையில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. பெருமளவில் நிலவரி வசூலித்து வந்த முகமதிய ஆட்சியாளர்களின் முன்னுதாரணத்தையே பிரிட்டிஷ் அரசாங்கம் பின்பற்றியது என்பதுதான் உண்மை. ஆனால், இதில் வித்தியாசம் என்னவெனில் முகமதிய ஆட்சியாளர்கள் விதித்த வரியை முழுமையாக வசூலிக்க முடியவில்லை; பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விதித்த வரியை முழு வீச்சில் வசூலித்தனர்.

வங்காளத்தின் கடைசி முகமதிய ஆட்சியாளர் தமது நிர்வாகத்தின் இறுதி ஆண்டில் (1764) 8,17,553 பவுண்ட் வரியாக வசூலித்தார்; அதே மாகாணத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முப்பது ஆண்டில் ஔத்தின் நவாப் வட இந்தியாவில் அலகாபாத் மற்றும் சில இதர வளமான மாவட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இழந்தார். அதிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 16,82,306 பவுண்டுகளை நிலவரியாக வசூலித்தனர். மதராசில், கிழக்கிந்தியக் கம்பெனி முதலில் விதித்த நிலவரி, நிலத்தின் மொத்த உற்பத்தியில் பாதியாக இருந்தது. பமபாயில் 1817 இல் மராட்டாக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசத்தின் நிலவரி வருவாய் அந்த ஆண்டு 8,00,000 பவுண்டாக இருந்தது பிரிட்டிஷ் ஆட்சி அமல்செய்யப்பட்ட சில நாட்களிலேயே அது 15,00,000 பவுண்டாக உயர்த்தப்பட்டது. அதுமுதல் நிலவரி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது” என்று கூறுகிறார். 1826இல் இந்தியா முழுவதிலும் பயணம் செய்து, பிரிட்டிஷ் ஆட்சிபுரியும் மாகாணங்களிலும் மன்னர்கள் ஆண்ட மாகாணங்களுக்கும் சென்று வந்த பிஷப் ஹெபர் என்பார், “மன்னர்கள் ஆளும் எந்த ஒரு மாநிலத்திலும் நம்மைப் போல நிலக்குத்தகை வசூலிக்கப்பட வில்லை” என்று எழுதினார். “இந்தியாவில் இப்போது நடப்பில் இருக்கும் நிலவரி முறை நிலக்கிழாரின் குத்தகைத் தொகை முழுவதையும் அபகரித்துக் கொள்வதாக இருக்கிறது. ஐரோப்பாவிலோ அல்லது ஆசியாவிலோ எந்த அரசாங்கத்தின் கீழும் இத்தகைய முறை இருப்பதாகத் தெரியவில்லை” என்று 1930 இல் கர்னல் பிரிக்ஸ் என்பார் எழுதினார்.

                “பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் செய்யப்பட்டிருந்த மிக அதிகமான நிலவரி மதிப்பீட்டிலிருந்து வங்காளத்தையும் வட இந்தியாவையும் சேர்ந்த மக்கள் படிப்படியாகச் சில சலுகைகளைப் பெற்றனர். வங்காளத்தில் இந்த மதிப்பீடு நிரந்தரமாக்கப்பட்டது. சாகுபடி நிலங்கள் விஸ்தரிக்கப்பட்டபோது கூட இது உயர்த்தப்படவில்லை, இப்போது (அது முதல் விதிக்கப்பட்ட குத்தகை மீதான வரியில் சாலை மற்றும் பொதுப்பணிகள் மதிப்பீடு அடங்கும்) குத்தகையில் இந்த மதிப்பீடு நிரந்தரமாக்கப்படவில்லை. ஆனால் 1885 இல் எல்லா மதிப்பீடுகளையும் உள்ளிட்டு 50 சதவிகிதத்திற்கும் சற்றே அதிகமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் புதிய மதிப்பீடுகள் சேர்க்கப்பட்டன. நடப்புக் குத்தகைத் தொகையில் அல்லாமல், ஆனால், வருங்காலக் குத்தகையின் மீது வரியானது கிட்டத்தட்ட 60 சதவிகிதமாக உயரும் விதத்தில் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.”

                பம்பாயிலும் மதராசிலும் நிலைமை பழைய மாதிரியாகவே இருந்தது. இந்த இரு மாகாணங்களிலும் இரயத்துவாரி த் தீர்வை நடப்பிலுள்ளது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின்போது நில உரிமைக் காலத்தில் இந்த இரயத்துவாரி அமைப்பு செயல்படும் விதத்தை திரு.ஃபுல்லர்டன் (மதராஸ் அரசாங்கத்தின் உறுப்பினர்) மிக அழகாக விவரிக்கிறார். அவர் கூறுகிறார், ஒட்டுமொத்தமாக நில உடைமை அனைத்தும் – அதாவது கிரேட் பிரிட்டனில் நிலக்கிழார்கள் அனைவரும் மூலதன விவசாயிகளும் கூட ஒரே நேரத்தில் இந்த உலகப் பரப்பிலிருந்து துடைத்தெறியப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். முடியரசின் ஒவ்வொரு வயலின்மீதும் நிர்ணயிக்கப்படும் குத்தகை, அதைச் செலுத்தும் வழிவகைக்கு ஒரு போதும் குறையாமல், பொதுவாக அதிகமாக, இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு குத்தகைக்கு விடப்பட்ட நிலம் கிராம மக்களுக்கு அவர்களின் வசமுள்ள கால்நடைகள் மற்றும் ஏர்களின் எண்ணிக்கைக்கேற்ப அதாவது ஒவ்வொருவருக்கும் 40 அல்லது 50 ஏக்கர் நிலம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்று கொள்வோம். ஒரு இலட்சம் வருவாய் அலுவலர்களைக் கொண்ட அமைப்பின் மூலமாக விதிக்கப்படக்கூடிய மேற்கண்ட விகிதத்திலான வருவாய், உழுபவரின் நிலத்திலிருந்து கிடைக்கும் விளைச்சலிலிருந்தோ அல்லது அவருடைய சொந்த ஆஸ்தியிலிருந்தோ அந்த அலுவலர்களின் விருப்பப்படி, நிலத்தை உழுபவரின் வரி செலுத்தும் ஆற்றலைப் பற்றிய அவர்களது கருத்துக்கேற்ப வசூலிக்கப்பட்டுச் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு நபரையும் அவரது அண்டை வீட்டாரை வேவுபார்க்கும் உளவாளியாகச் செயல்படுமாறு ஊக்குவிப்பதற்காகவும், அவரது வரி செலுத்தும் வழிவகைகளைப் பற்றி தெரிவிக்கவும், அதன்மூலம் அவர் தன்மீது விதிக்கப்படும் கூடுதல் வரியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்று வைத்துக் கொள்வோம். கிராமத்தின் ஒன்று அல்லது கூடுதல் நபர்கள் செலுத்தத் தவறும் வரியை ஈடுகட்டுவதற்காகக் கிராமத்தின் எல்லாக் குடியானவர்களும் எல்லாக் காலங்களிலும் தனியான ஒரு கோரிக்கைக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள் என்று கொள்வோம். ஒரு வாரியத்தின் உத்தரவின்படி செயல்படும் கலெக்டர்கள், உழைப்புக்கான ஆர்வமனைத்தையும் அழித்துவிட, நெஞ்சிற்கினிய கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டு மதிப்பீட்டை ஒரு பொதுவான சமநிலைப்படுத்துவதன் மூலம், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஓடிவிடும் விவசாயிகளைத் திரும்பவும் அவர்களுடைய இடத்திற்கே திருப்பி அனுப்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இறுதியாகக் கலெக்டர், மாஜிஸ்ட்ரேட்டுகள் அல்லது நாட்டின் அமைதிக்கான நீதிபதிகள் ஆகியவர்களின் மூலமாகத்தான் ஒரு பிரஜை அனுபவிக்கும் தனிப்பட்ட குறைபாடுக்கான எந்த ஒரு குற்றவியல் புகாரும் உயர் நீதிமன்றங்களுக்குச் சென்றடைய முடியும் என்று வைத்துக் கொள்வோம். அதே சமயத்தில் நிலவரி வருவாயை வசூலிப்பதில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு கீழ்நிலை அலுவலரும் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தையோ அல்லது அந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களோ இல்லாமல் அபராதம் விதிக்கவும் சிறையிலடைக்கவும், ஜப்தி செய்யவும், தனது பகுதியிலுள்ள எந்த ஒரு பிரஜைக்கும் கசையடி கொடுக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.”

                மார்ட்டின் மேலும் கூறுவதாவது;

                                “மதராசில் உள்ள இரயத்துவாரி முறையை நியாயப்படுத்துபவர்களின் கண்களை ஏதேனும் திறக்கமுடியும் என்றால், இந்த சித்தரவதை வெளிப்பாடுகள் அதைச் செய்யும். மதராசில் உள்ள கவுன்சிலின் உறுப்பினரான காலஞ்சென்ற திரு.சல்லிவன், தம்முடைய கச்சேரியிலிருந்து (கருவூலம்) வண்டிவண்டியாக வெள்ளி ஏற்றிச் செல்லப்பட்டதைக் கண்ட போது, யாரிடமிருந்து அது வசூலிக்கப்பட்டதோ அந்த மக்களின் ஏழ்மையை எண்ணிப்பார்த்த அவர், வரவிருக்கும் ஆண்டில் அவர்களுடைய நிலையை எண்ணி அதிர்ச்சியடைந்தார், ஏனெனில் அரசாங்கத்தின் தேவை அளவற்றதாக இருந்தது, ஒரு குறிப்பிட்ட தொகை வரவேண்டும் என்று கூறினார்.”

                கம்பெனியின் ஆட்சியின்போது இந்தியாவின் பொருளாதார நிலைமையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளும்போது உள்நாட்டுப் போக்குவரத்து கடந்து செல்லும் வரிகள் நெருக்குதலைப் பின்னர் பரிசீலனை செய்வோம்.

                வரிவிதிப்பின் இந்த நெருக்குதலைப் போலன்றி மக்களின் வருவாய் சம்பந்தமாக மிகக் குறைவான தகவலே நமக்குக் கிடைத்துள்ளது.

                வருவாயுடன் வரியை ஒப்பிட்டு செய்வதைவிட வரியின் நெருக்குதலைப் பற்றிய ஒரு சிறந்த தகவலை நமக்கு வேறு எதுவும் தருவதில்லை. ஆனால், மக்களின் வருவாயைப் பற்றிய போதிய விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. மன்ரோவின் கூற்றுப்படி ஒருவிவசாயத் தொழிலாளியின் மாதாந்திர ஊதியம் நான்கு ஷில்லிங்குக்கும் ஆறு ஷில்லிங்குக்கும் இடையில் இருந்தது. வாழ்க்கைச் செலவினம் ஆண்டொன்றுக்கு 18 ஷில்லிங்குக்கும் 27 ஷில்லிங்குக்கும் இடையில் இருந்தது.

                வரியின் நெருக்குதல் எந்த அளவுக்கு இருந்தது என்பது நமக்குத் தெரியாது. அது மிகப் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டுமென்பதை நமக்குக் கிடைக்கும் சூழ்நிலைச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

(முதுகலைப் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு - மே 15, 1915)

தொடரும்...

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)