வக்கீல் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். இன்னும் ஒருநாள் தாங்கும் என்று மருத்துவரும் சொல்லிவிட்டார். மருத்துவர் போனபின்பு, வக்கீல் தனது மனைவியை அழைத்து, பைபிளை எடுத்துச் சொன்னார். ‘கடைசி நேரத்திலாவது நல்ல புத்தி வந்ததே’ என்று மனைவி வேகவேகமாக பைபிளை எடுத்துவந்தார். வக்கீல் பைபிளை அங்கே இங்கே என்று புரட்டிக் கொண்டிருந்தார்.

மனைவி கேட்டார்: ‘என்ன செய்கிறீர்கள்?’

“இறுதித் தீர்ப்பு நாள் வருமல்லவா? அதிலிருந்து தப்புவதற்கு, பைபிளில் ஏதாவது loophole இருக்கிறத்தா என்று பார்க்கிறேன்”