chennai flood 601

கடலூரில், சென்னையில் தொடர்மழை, மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு, வெள்ளப்பெருக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு மேல் பலி, முதலமைச்சர் இரங்கல், பிரதமர் மக்களுடன் துணையாய் நிற்கும் என உறுதி இவை நாம் வருடாவருடம் இந்தியாவில் ஏதோ ஓர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொழுது கூறும் அதே புளித்துப்போன ஆறுதல்... பொதுவாகவே இந்தியாவில் எந்த விட இயற்கை பேரிடர்களுக்கு அதை எதிர் கொள்ளுவது பற்றிய அறிவு மிகவும் குறைவு.

எடுத்துக்காட்டிற்கு மலைப்பிரதேசங்களான ஊட்டி,நிலகிரி போன்ற பகுதிகளில் வருடா வருடம் சில மாதங்களில் மலைச்சரிவு நடந்தே தீரும். அதை எதிர்கொள்ள எவ்வாறு மக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள்.. Disaster Management System மக்களிடம் சென்றடைந்துள்ளதா இல்லை அதிகார மட்டத்திற்கு இதைப்பற்றிய முழு அறிவு உள்ளதா? மண் சரிவை தடுக்க சுவர் எழுப்பதலுடன் முடிந்துவிட்டது இவர்கள் பணி .. மாறாக போலியான நிலச்சரிவு நடைபெறுவது போன்று ஒத்திகை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? மண் சரிவில் சிக்கியவர்களை விரைவில் மீட்பது? மண்சரிவில் மீட்கும் போது ஏற்படும் பாதிப்புகள்? மண் சரிவிற்கு பின்பான புணர்வாழ்வு, மண்சரிவில் இருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை கொண்டு தவறுகளை சரி செய்தல் போன்றவை நடை பெறுகின்றனவா எனில்.. இல்லை என்பதே பதில்..

இன்றைய இணைய உலகில் கருத்துக்கள் விரைவில் மக்களை சென்றடையும் என்பதால் வெள்ளத்தை எதிர்கொள்வதை பற்றிய இக்கட்டுரையும் ஓர் சிறு முயற்சியே...  இக்கட்டுரை வெள்ளத்தின் பொழுது மக்கள் பாதுக்காப்பாக இருப்பதை மைய்ப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டுரைக்கு செல்வோம்,

வெள்ள பாதுகாப்பு பற்றி செல்வதற்கு முன்பு வெள்ள எச்சரிக்கை பற்றி சிலவற்றை பார்ப்போம்..

Flash Flood Warning (F.F.W) - திடீர் வெள்ளம் :

F.F.W என்பது திடீர் வெள்ளத்தை குறிப்பதாகும்.. இவ்வகையான  அறிவிப்பு விடுக்கும் பொழுது மக்கள் தாழ்வான வெள்ள அபாயகர பகுதிகளிலுருந்து உயரமான பாதுக்காப்பான  நோக்கி உடனடியாக நகர வேண்டும்.

பொதுவாக இவ்வகை வெள்ளம் சில மணிநேரங்களில் நடைபெறும்

இவ்வகை வெள்ளம் மழை பெய்யா இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது..

Flood Warning (F.W) - வெள்ள அபாயம்:

சாதாரண மழையினால் ஏற்படும் வெள்ளத்தை குறிக்கும் அபாய எச்சரிக்கை.. குறிப்பாய் மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பின் தரப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை இது..

Flood Watch:

வெள்ளம் ஏற்படுவதற்கான சூழல் சாதகமாக இருப்பதை குறிக்கும் சொல். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் வெள்ளம் வராமலும் இருக்கலாம்.

Flood Advisory:

வெள்ளம் நிகழும் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட காலத்தில் என குறிப்பிட்டு கூற உதவும் சொல். இவ்வகை அபாயத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளவில்லையெனில் உயிர்சேதம் , பொருட்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்...

வெள்ள பாதுகாப்பு என்பது மூன்று வகைகளாக மேற்கொள்ளப்படுகிறது.

1)வெள்ளத்திற்கு முன் (Before Flood)

2)வெள்ளத்தின் பொழுது (During Flood)

3)வெள்ளத்திற்கு பின் (After Flood)

வெள்ளத்திற்கு முன்:

சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு முன்பாகவே கணிக்க படலாம். ஆதலால் வெள்ளத்தினை எதிர்கொள்ள நமக்கு சிறிதுநேரம் கிடைக்கும். இந்த வெள்ளத்தினை எதிர்கொள்ளும் திட்டம் சரியாக இருப்பின் பல நேரங்களில் உயிர் சேதம்,பொருட் சேதம்  தவிர்க்க உதவிகரமாய் இருக்கும்..

Communication Plan :

வெள்ளம் பற்றிய நிலைமையினை தொடர்ச்சியாய் அறிந்து கொள்ள ஓர் நபரிடம் தொடர்பில் இருப்பது அவசியம்.. பாதுகாப்பான இடம், வெள்ளம்பற்றிய பாதிப்புகள் பற்றி அறிய இவை முக்கிய பங்காற்றுகின்றன.

Emergency Kit:

அவசரகால தேவைகளான உணவு பொருட்கள் , தண்ணீர் , மருந்துகள் போன்றவை ந்தபட்சம் மூன்று நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர்த்து டார்ச், முதலுதவி பெட்டி, ரப்பர் காலனி,கையுறை,வானொலி என தேவையானவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Risky Area:

ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும் பொழுது எது பாதுகாப்பான வழி, பயண முற, பயணிக்கும் இடம் என அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

Notification:

அரசு தரும் தொடர்ச்சியான வெள்ள நிலைமைகள் பற்றிய செய்திகளுடன் தொடர்பில் இருத்தல் அவசியம்..

Preparing Home :

மணற்பைகள் மூலம் நீர் உட்புகா வண்ணம் அடுக்கலாம். ஆனால் இதற்கு நாம் எதிர்பார்க்கும் நேரத்தை விட கூடுதல் நேரம் பிடிக்கும்

மழைநீர் சாக்கடையுடன் கலப்பதை தவிர்த்தல் நலம்.

Flood Insurance வீடுகளுக்கு போடுதல்

வளர்ப்பு பிராணிகள் மேல் அக்கறையுடன் கவனித்தல்.

Charge Electronics :

செல்போன்,ரேடியோ இவை முழுமையாக சார்ஜ் செய்யுங்கள்.

கூடுதல் பேட்டரிகளை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

Leave:

வெள்ளம் உங்கள் வீட்டை சூழும் என தெரிந்தால் விரைவில் வெளியேறுங்கள்.

During Flood :

தண்ணீர் அளவும், வேகமும் அனைத்து சூழலையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது. ஆதலால் வெள்ளத்தால் சிக்கினால் வானொலி , தொலைக்காட்சி மூலம் வெளியேறுவதற்கான தகவலை பெறுங்கள்.

Get to Higher Ground :

வீட்டின் உயரமான பகுதியில் தங்குங்கள். வெள்ளம் ஓடும் இடத்தில் நிற்பதை தவிருங்கள்.

Obey Evacuate Orders:

வெளியேறுவதற்கான திட்டம் அறிவிக்கபட்டால் அதை முறையாய் பின்பற்றுங்கள்.

Electrical Safety :

மின்சார பெட்டி தண்ணீரில் மீழ்கி இருந்து spark, cracking sound , popping போன்ற ஒலிகள் கேட்டால் உடனே வெளியேறுங்கள்...

Avoid Flood Water:

6 inch தண்ணீர் போதுமானது உங்களை வீழ்த்த ...

வெள்ளம் ஓடும் நீரில் வண்டிகளை ஓட்டாதீர். வண்டியினை சிறிதாக திருப்பினும் அடித்து செல்லப்படுவீர்.

நீருக்கு அடியில் பல அபாயங்கள் இருப்பதால் போதுமான பாதுகாப்பு இல்லாமல் இறங்காதீர்கள்.

After Flood :

சண்டையில் கிழியாத சட்டை போல , வெள்ளத்தால் பாதிப்படையா வீடுகள் இல்லை.  புணர்வாழ்வு (Rehabilitation) என்பது முக்கியமான விடயம்.

Stay Informed:

வெள்ளத்திற்கு பின்  நிலைமைகள் அறிந்து பயணியுங்கள்..

நீரினை கொதிக்க வைத்து குடியுங்கள்..

மின்சார கசிவு , எரிவாயு சிலிண்டர் கசிவு ஆகியவை பற்றி ஆய்வு செய்து பின் வீட்டினில் பயணிங்கள்..

Avoid Flood waters :

வெள்ளத்தால் தேங்கிய நீரில் நிற்பது பல ஆபத்துக்களை உள்ளடக்கியது.. விசப்பூச்சிகள் முதல் மின்சார பாதிப்பு, நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு வரை உள்ளது.

Avoid Disaster Area:

பாதிக்கப்பட்ட இடத்தில் அனுமதி இல்லாமல் நுழையாதீர்..

Signs:

விழிப்புணர்வு அட்டைகள் இருப்பின் அதனை மதியுங்கள்..

Wait for all clear:

தங்குவதற்காக இடம் மாற்றி அமைக்கப்பட்டால் அங்கேயே அதிகாரிகள் கூறும் வரை தங்குங்கள்..

இவ்வாறு வெள்ளத்தின் பாதிப்பினை பலவகையான முறையில் கையாள வேண்டும். ஆனால் கடலூர் வெள்ளமோ சென்னை மழையினால் ஏற்பட்ட வெள்ளமோ இந்த மேல் குறிப்பிட்ட செயல்கள் செய்யப்பட்டதா என்பதை சிந்திப்பது அவசியமாகிறது. ஊழல் , லஞ்சம் போன்றவற்றால் பதவி பெற்ற அதிகாரிகளால் நிரம்பியுள்ள இவ்வகையான துறைகளில் வெள்ளப்பாதுகாப்பு பற்றி அறிவு குறைவாகவே இருக்கும். சுற்றுச்சூழல் துறை இது போன்ற துறைக்கு மற்றுமொர் எடுத்துக்காட்டு. ஆக இந்நிர்வாகத்தின் செயல்பாடுகளை நாம் கேள்விக்கு உட்படுத்தும் பட்சத்தில் நிர்வாகம் எவ்வாறு மக்கள் நலன் என்பதில் இருந்து விலகி மக்கள் விரோதமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.