ஆண்டு தோறும் தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ், பொங்கல் மற்றும் பல திருவிழா நாட்கள் நெருங்கும் போதே மக்கள் மத்தியில் மகிழ்ச்சியும், சலசலப்பும் தொற்றிக் கொள்ளும்.

அதே போல ஆண்டு தோறும் டிசம்பர் 1ம் தேதி வருமுன்பே, பள்ளி-கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டர்கள், தொண்டு நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள் , சினிமா நட்சத்திரங்கள், உலக மற்றும் உள்ளூர் அழகிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு ஊர்வலங்கள், அரங்குக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள் விநியோகம் என வாய்ப்புள்ள வழிமுறைகளில் எல்லாம் தங்களது வரலாற்றுக் கடைமை..?!யை நிறைவேற்றுகின்றனர்.

அப்படியென்ன டிசம்பர்-1 அதிசயம்...! உலக மகா அதிசயம்...! ஆம்…அதிசயந்தான்..! உலக மகா அதிசயம் மட்டுமல்ல..! அதையும் தாண்டிய பிரபஞ்ச அதிசயம் என்றே கூறலாம். அதாவது டிசம்பர் 1 ம் தேதி உலக எய்ட்ஸ் தினம்.

1988 ம் ஆண்டில் எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் படி உலக நாடுகளின் அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உலக எய்ட்ஸ் தினம்- ஆண்டு தோறும் டிசம்பர் முதல் நாள் கடைபிடிக்கப் படுகிறது. இந்நாளில் எய்ட்ஸ் நோயைப் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உலக எய்ட்ஸ் நாள் கடைபிடிக்கப் படுகிறது. கடந்த 2007 ம் ஆண்டுமுதல் தற்போது வரை “எய்ட்ஸை நிறுத்து சத்தியத்தைக் காப்பாற்று” என்கிற முழக்கம் வைக்கப்பட்டுள்ளது

நவம்பர்-26 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத இயக்கங்களின் மீதும், அதற்கு ஆதரவளித்த பாகிஸ்தான் மீதும் கடும்நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும், கடும் கண்டனங்களையும் தெரிவிக்கும் இந்தியா, மேற்கு நாடுகளைத் தவிர்த்து, ஆப்பிரிக்க-ஆசிய நாடுகளில் இலட்சக் கணக்கான மக்களை மனதளவிலும்-உடலளவிலும் அணு அணுவாக சித்ரவதைச் செய்து அன்றாடம் பலி வாங்கிக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் எனும் கொடிய தீவிரவாதத்திற்கு வித்திட்ட அமெரிக்காவை மிக மென்மையாகக் கூட கண்டிக்காமல் எய்ட்சுக்கு ஆராதனை செய்வதுதான் வேடிக்கையாக உள்ளது.

எய்ட்ஸ் பரவும் வழிமுறைகளில் பிரதானமாக குறிப்பிடுவது, தவறான பாலியல் உறவுகள் என்பதே ஆகும். அது உண்மையெனில் முன்-பின் தெரியாதவர்களிடமும், தவறான வழிமுறைகளிலும், வரைமுறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடும் கலாச்சாரம் அதிகமாக உள்ள அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகளில்தான் எய்ட்ஸ் நோய் அதிகமாக பரவியிருக்க வேண்டும். மாறாக இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற கீழ்த்திசை நாடுகளில்தான் எய்ட்ஸ் நோயானது அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

எய்ட்ஸ் நோயின் ஆணிவேரை தேடிச் சென்றால் அமெரிக்காவில்தான் முடியும். இதற்கான எண்ணற்ற அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வெளியிட்டு அமெரிக்காவின் நயவஞ்சகத்தை ஏற்கெனவே அம்பலபடுத்தியுள்ளார்கள் பல நூலாசிரியர்கள். வர்த்தக ரீதியில் பயன்பெறும் நோக்கிலும், அரசியல் ரீதியில் உலக நாடுகளை அச்சுறுத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையிலும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதுதான் எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸ் கிருமிகள்.

இந்தியாவை பொருத்தவரை, புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? விலிருந்து, கட்டிய மனைவியாக இருந்தாலும் காண்டம் அணிய மறக்காதீர்கள்…...! போன்ற விளம்பரங்கள் வரை, பாதுகாப்பான உடலுறவு என்பதை வலியுறுத்தி, பள்ளிக்கூட சிறுவர்களிடத்தில் ஆணுறையை பயன்படுத்துவது எப்படி என்றும், அணிந்து உறவு கொண்டால் எய்ட்சா நோய் வராமல் தடுக்க முடியும் என்பதை வலியுறுத்தியும், பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் விளக்கவேண்டும் என்று நிர்பந்திக்கப் பட்டனர்.

பாதுகாப்பற்ற உடலுறவுதான் எய்ட்சா நோய்க்கு உண்மையான காரணமென்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வரும் மனித குலம், என்றைக்கோ பூண்டோடு அழிந்து போயிருக்க வேண்டும். மனிதகுல வரலாற்றில் தாய் வழி மரபுரிமை காலகட்டத்திலும் அதற்கு பின்பும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவும், நாடோடிகளாகவும் வாழ்ந்த காலத்தில் இருந்த பாலியல் கலாச்சாரங்களை விடவா, தற்போது பாதுகாப்பில்லாத பாலியல் கலாச்சாரங்களை பின்பற்றுகிறார்கள்? அன்றைய மனிதர்களுக்கு வராத எய்ட்சா இன்றைய மனிதர்களுக்கு ஏன் வரவேண்டும்.

நம் நாட்டுத் தலைவர்கள் மனிதாபிமானத்துடன் எய்ட்சா நோயாளிகளை கவனித்துக் கொள்ள வேண்டுமெனவும், எய்ட்சா எப்படியெல்லாம் பரவும் - எப்படியெல்ல்லாம் பரவாது என்றும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து எய்ட்சா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். ரெட் ரிப்பன் எக்சாபிரசா ரயிலை கொடி அசைத்து துவக்கி வைக்கின்றனர். நமது உலக நாயகன் கமலஹாசன் மனிதாபிமானத்துடன் எய்ட்சால் பாதிக்கப்பட்ட 1000 குழந்தைகளை தத்தெடுக்கிறார்.

தமிழக அரசின் எய்ட்சா கட்டுப்பாடு சங்கம் சார்பில் 1.12.2009 அன்று சென்னையில் நடைபெற்ற உலக எய்ட்சா தின நிகழ்ச்சியில், நமது சுகாதாரத்துறை அமைச்சர், தமிழகத்தில் 2001-ல் ஹெச்.ஐ.வி. கிருமியின் தாக்கம் 1.13 சதவீதமாக இருந்ததாகவும், 2007-ல் 0.25 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், எய்ட்சால் பாதிக்கப்பட்ட 1412 குழந்தைகளின் நலன்களுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி டெபாசிட் செய்துள்ளதாகவும், இந்தியாவில் 25 லட்சம் பேரும், அதில் தமிழகத்தில் மட்டும் 1,84,000 பேரும் ஹெச்.ஐ.வி யுடன் வாழ்கின்றனர் என தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் தமிழகத்தில் இனி புதிதாக எய்ட்சா நோயாளிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டுமென்றும் பேசினார்.

இந்நிலையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் எய்ட்சா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். உலக எய்ட்சா தினத்தில், விழிப்புணர்வு என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கடுகளவும் இரக்கமின்றி எய்ட்சா நோய்க் கிருமிகளை உருவாக்கி மக்களுக்கு பெருமளவில் பாதிப்புகளை உருவாக்கிய அமெரிக்காவை கண்டிப்பதற்கு மாறாக போற்றுவதாக(அங்கீகரிப்பதாக)த்தான் இருக்கிறது.

நம்மீது யாராவது ஒருமுறை எச்சில் துப்பினால், நமது பிரதிபலிப்பு என்னவாக இருக்கும். மாறாக எந்த சோப்பு போட்டு குளிக்கலாம் என்றும், எச்சில் துப்புபவர்களிடம் இருந்து தப்பிக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினால் எப்படி இருக்கும். ஆனால் எய்ட்சை உலக மக்கள் மீது துப்பியுள்ள அமெரிக்காவிற்கு தாம்பூலம் மடித்து தருவதாகத்தான் நமது செயல்பாடுகள் உள்ளது.

உண்மையில் எய்ட்சா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தால், உலக எய்ட்சா தினத்தில், எய்ட்சின் பாதிப்புகளைப் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே நேரத்தில், அமெரிக்கா உருவாக்கிய எய்ட்சா கிருமிகளின் பாதிப்புகளுக்கு முழுபொறுப்பையும் அந்த நாடே ஏற்க வேண்டும். அதற்கான நஷ்ட ஈட்டை பாதிக்கப்பட்ட உலக மக்களுக்கு தரவேண்டும். வரும் காலங்களில் ஹெச்.ஐ.வி போன்ற புதிய கிருமிகளை உருவாக்கும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என்பதையும், ஊர்வலங்களிலும் - பொது நிகழ்ச்சிகளிலும் வலியுறுத்த வேண்டும்.

இல்லையெனில், எய்ட்சா, சார்சா, பன்றிக்காய்ச்சல் வரிசையில் இன்னும் பல புதிய பெயர்களில் புதிய வகை நோய்களை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகளைப் போல ஒன்றன் பின் ஒன்றாக, அமெரிக்கா அவிழ்த்து விடத்தான் போகிறது. நாமும் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, புது வகை நோய்களுக்கு புது வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

எய்ட்சுக்கு மருந்தே இல்லை! மரணம்தான் முடிவு! என்ற போது, எண்ணற்ற ஹோமியோபதியர்கள் எய்ட்சா என்ற பெயருக்கு முக்கியத்துவம் தராமல், பாதிக்கப்பட்டவர்களின் நோய்க் குறிகளின் அடிப்படையில் ஹோமியோபதி மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - குணப்படுத்த முடியும் என்பதைப் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை ஹோமியோபதி சங்கங்களுக்கு உண்டு என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது .

டாக்டர்.கே.இராமகிருஷ்ணன்
-டாக்டர்.கே.இராமகிருஷ்ணன்

 

Pin It