நாட்டின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே தலைவிரித்தாடுகிறது. திருவாரூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் இதே நிலைதான்!

முன்னாள் துணைவேந்தர் டாக்டா சஞ்சய் - பார்ப்பனர், இப்போதைய பதிவாளர் வி.கே. சிறீதர் - பார்ப்பனர், நிதி அதிகாரி பி.வி.இரவி - பார்ப்பனர், துணைப் பதிவாளர் வெங்கடேசன் - பார்ப்பனர்.

துணைவேந்தரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றோரும் பார்ப்பனர்களே!  டாக்டர் ஜி.கே. ஜெயராமன் - கன்னட  பார்ப்பனர், சி.ஆர். கேசவன் - பார்ப்பனர், கோபாலகிருஷ்ணகாந்தி - பார்ப்பனர்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள கோபாலகிருஷ்ண காந்தி, சி.ஆர். கேசவன் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். முன்னாள் துணைவேந்தர் வி.சி. சஞ்சய், மீண்டும் துணை வேந்தராக நுழையும் நோக்கத்தோடு தனக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளார்.