ஈழப்போராட்டம் தொடர்பாக நேர்மையான எதிரிகளுடன் வாதம் செய்வதில் எந்த சிக்கலுமில்லை. சுசீந்திரன், சோபாசக்தி என்று ஒரு புலியெதிர்ப்பு கோஸ்டி எடுக்கிற வாந்தியை சிந்தாமல் சிதறாமல் அப்படியே விழுங்கி திரும்ப அப்படியே அதை வாந்தியா எடுத்தா எப்பிடி இருக்கும். ஆதவன் தீட்சண்யா அந்த வகையறா.. இது ஒரு வெத்துவேட்டு கும்பல்.

இந்த எழுத்துக்களை படித்தால் எங்கள் ஊர் என்றால் ஒரு பக்கெட் "பனடோல்" தமிழ்நாடென்றால் 1000 ருபாவுக்கு அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கிப் பூசினாலும் தீராத தலைவலி வரும். இந்த புலியெதிர்ப்பு கும்பல் தமிழீழ அரசியல் களத்திலிருந்து எப்போதோ காலாவதியானவர்கள். (expired )

தற்போது மே 18இற்கு பிறகு ஒரு கும்பல் புறப்பட்டிருக்கிறது. அந்த பாசறையிலிருந்து வந்திருப்பவர்தான் யோ.கர்ணன். அதாவது காலச்சுவடுவில் பாசிசத்திற்கெதிரான - அதாவது புலிகளுக்கு எதிரான "முகமூடி" கட்டுரை எழுதியவரும் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை, படைப்பாளிகளை துணைஇராணுவக்குழுவினரின் துப்பாக்கிகளின் துணையுடன் மிரட்டி வருபவருமான முன்னாள் புலிகளின் தொலைக்காட்சி பணிப்பாளரான கருணாகரனின் கருத்து "பினாமி". கருணாகரனின் குமட்டலை வாந்தியாக எடுப்பது தற்போது யோ.கர்ணணின் வேலை. அதுதான் இந்த கதை "பிரகாரன் துவாரகா"
 
நான் எழுத்தாளராக இல்லாவிட்டாலும் ஒரு நேர்மையான வாசகனாக சொல்கிறேன். இந்தக் கதை வக்கிரத்தின் உச்சம். யோ.கர்ணனின் 4 சிறுகதைகளை படித்தவன் என்ற முறையில் அவரது எழுத்து குறித்து இந்த இடத்தில் ஒரு குறிப்பு. மிகவும் தட்டையான எழுத்து முறை. மிகவும் பலவீனமான உத்திகளை கைக்கொண்டு அவர் அமைக்கும் சட்டகம் கதைகளின் உள்ளீட்டை அழகியல் ரீதியாக சிதைக்கின்றன. அத்தோடு வக்கிரமான அரசியலும் சேரும்போது அது படைப்பா என்ற கேள்வி வாசகன் முன் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.

‎"யோ.கர்ணன் என்ற பன்னியும் (பன்றி) கருணாகரன் என்ற சொறி நாயும்.." என்ற தலைப்பில் நண்பர் ஒருவர் ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருக்கிறார். ஆச்சரியப்படுத்துற வகையில் நல்ல உத்திகளுடன் தேர்ந்த நடையுடன் எழுதப்பட்டுள்ள ஒரு பின்நவீனத்துவ பாணி சிறுகதை அது.

யோ.கர்ணன் என்ற பன்னிக்கும் கருணாகரன் என்ற நாய்க்கும் இடையிலான உரையாடலாக அந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. நாய்களுக்கும் பன்னிகளுக்குமிடையிலான வாழ்வியற் பிரச்சினைகளை, உளவியல் முரண்பாடுகள், இரைக்காக நடக்கும் போராட்டங்கள், கழுத்தறுப்புக்கள் என்று விரியும் பாத்திரங்களின் உரையாடல் முடிவில் ஜோர்ஜ் ஓவலின் 'விலங்குப்பண்ணை" முடிவைப்போல் எது பன்னி, எது நாய், யாருக்கு சொறி பிடித்திருக்கிறது, யார் சேற்றில் விழுந்து புரள்வது என்று அடையாளம் காண முடியாமல் - தெரியாமல் கதை முடிவடைகிறது. இதை எங்காவது பிரசுரிக்க முடியுமா? என்று என்னை கேட்டுள்ளார்.

"பிரபாகரன் -துவாரகா" கதையை பிரசுரித்தவர்களிடம் அனுப்ப வேண்டியதை மாறி எனக்கு அனுப்பியிருக்கிறார் நண்பர். ஒரு கதைதானே என்று எங்காவது பிரசுரிக்கலாம் என்றால் சில நிபந்தனைகளை எழுதியிருக்கிறார். அதுதான் திகிலூட்டுகிறது.

அதாவது இன்னும் 10 சிறுகதைகள் எழுதியிருக்கிறாராம். அதையும் சேர்த்து பிரசுரிக்க வேண்டுமாம். உதாரணத்திற்கு சில தலைப்புக்கள்.

01. சோபாசக்தி எனக்கு அப்பா மாதிரி ஆனால் அப்பா இல்லை. (இங்கு சோபாசக்தி என்பவர் ஒரு வெள்ளாள சாதித்திமிர் பிடித்த நகைக்கடை முதலாளி)

02. ஆதவன் தீட்சண்யாவின் நான்காவது மனைவியின் அ.மார்க்சுக்கு எதிரான வல்லுறவு குற்றச்சாட்டுக்கள். (இங்கு ஆதவன் தீட்சண்யா என்பவர் அப்பாவி பிராமணர்)

03. சுசீந்திரனின் உள்ளாடையும்..... (ஒரு பெண் எழுத்தாளரின் பெயர் அதனால் தவிர்த்துக் கொள்கிறேன்) உள்ளாடையும். (இங்கு சுசீந்தரன் எல்கேஜி மாணவன்)

மிகுதி தலைப்புக்களை இங்கு போடும் தைரியம் எனக்கில்லை. ஆனால் தைரியமாக நண்பர் கதைகளை இரவிரவாக எழுதி முடித்திருக்கிறார். யோ.கர்ணணின் கதை தந்த தைரியம் என்று குறிப்பு வேறு தனியாக எழுதி வைத்திருக்கிறார்.

ஏதோ ஓரளவிற்கேனும் அமைப்பியல், பின்நவீனத்துவம், மிகையதார்த்தம் போன்ற கூறுகளில் தேர்ச்சி உள்ளவனாக யோ.கர்ணனின் கதையும் சரி இப்போது நண்பர் எழுதிய 10 கதைகளும் சரி என்ன வகையானது என்று எனக்குப் புரியவில்லை.

சோபாசக்தி தொடங்கிவைத்த இந்தப்போக்கு யோ.கர்ணனின் கதையில் உச்சத்தை எட்டியிருக்கிறது. தனி மனித வக்கிரங்களை வெளிப்படையாகவே உத்தி என்ற போர்வையில் படைப்பில் பிரயோகிப்பது.

ஏதோ ஓரளவிற்கேனும் உளவியல் குறித்து தேர்ச்சியுள்ளவனாக யோ.கர்ணனின் இந்தப் போக்கு பெரும் கவலையளிக்கிறது. அவர் ஒரு நல்ல உளவியலாளரிடம் உளவள ஆலோசனை பெறுவது நல்லது. அதற்குப் பிறகு திறந்தமனதுடன் மிக இயல்பாக எந்த முன்முடிவுகளும் இன்றி படைப்புக்களை எழுத முன்வரவேண்டும்.

ஒரு சிறந்த படைப்பின் அடிப்படை என்பது, பாத்திரங்களை அதன்போக்கில் செல்ல அனுமதிப்பது. அவை மிக இயல்பாக ஒரு முடிவை எய்தும். எதையும் வலிந்து திணிக்கக்கூடாது. தலைப்பில் இருந்து கதையின் போக்கு, முடிவு எல்லாவற்றையும் இங்கு யோ.கர்ணன் முன்பே தீர்மானித்துவிட்டார். இந்த முன்முவுவுகளே அந்த படைப்பை முற்றாக நீர்த்துப்போக செய்து விட்டது.

யோ.கர்ணனின் "தேவதைகளின் தீட்டுத் துணி" தொகுதியை நான் இன்னும் படிக்கவில்லை. இதை 1000வது தடவையாக பதிவு செய்கிறேன் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் தமிழீழ விடுதலைப்போராட்டம், அதன் தலைமை குறித்து சில முன்முடிவுகளுடன் இருக்கிறேன். அதற்கு எதிராக எழுதப்பட்டதாகச் சொல்லும் ஒரு பிரதியை இந்த முன்முடிவுகளுடன் அணுகுவது ஆரோக்கியமான ஒன்றல்ல.

ஒரு வாசகனாக நான் இந்த அறத்தை கடைப்பிடித்திருக்க ஆனால் படைப்பாளியோ தீர்மானமான முன்முடிவுகளுடன் பிரதியை எழுதி முடித்திருக்கிறார். முன்னுரை அதைவிட தீர்மானமான முடிவுகளுடன் எழுதப்பட்டுள்ளது. அவரே திருப்பி எழுதிய மதிப்பீடும் முடிவை இறுதியானதாகவே அறிவிக்கிறது.

யோ.கர்ணின் பிரதி பற்றிய மதிப்பீட்டில் சோபாசக்திக்கான அங்கீகாரத்தை கோர முற்படும்போதே "எல்லாம்" - எல்லாமும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன.

பின்குறிப்பு: யோ.கர்ணனின் "பிரகாரன் துவாரகா" கதையை ஒரு படைப்பாக ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் அந்த அங்கீகாரத்தை கோருபவர்கள் எனது நணபனின் 10 சிறுகதைகளையும் அங்கீகரித்தால் சந்தோசப்படுவேன். அப்படியே எங்களைமாதிரி அரைகுறைகளும் அப்படியே இதன்வழி "புனைவு"'களை எழுதி எழுத்தாளர் பட்டமும் வாங்கிவிடலாம். அதற்காகவாவது யோ.கர்ணணின் கதையை அங்கீகரிக்க கோருகிறேன்.

(பேஸ்புக்கில் வெளியானது)