குவின் புருசன விட்டிற்றுப்போய் கனவருசம் ஆகின பிறகு முரளிதாஸ் என்று அழைக்கப்படுகிற கர்ணநேசனுக்கு குவின்ல பிளான் வருகுது.... அகிலேந்திரன், ஷேபசத்திரன் எண்டு கர்ணநேசனுக்கு இருக்கிற பிரண்டுகளால கர்ணநேசன் அவேக்குள்ள ஒண்டுக்க ஒண்டாகிறார்.  

சரி விசயத்துக்கு வருவம்... சிவப்பு கலர் பல்சர்ல பிரண்டு ஒருத்தன் கொண்டுவந்துவிட தன்னைதானே கண்ணாடில பாக்காம பேனையோட கதை எழுத மேசையில குந்துறதோட கதைக்குள்ள என்டராகிறான் கர்ணநேசன்.

வசதி இல்லாத காலத்திலையும் அவங்கள் இவன படிப்பிச்சு எழுதுறத்துக்கு வாய்ப்புகளெல்லாம் ஏற்படுத்தி குடுத்தவங்கள். இவன மட்டுமில்ல நிறைய பேர. கர்ணநேசன் எழுத்தில புலி. நிறைய விசையங்கள எழுதினவன். இப்ப அவங்கள் இல்ல.  இந்த நேரத்தில தான் அவனுக்கு அகிலேந்திரனும் ஷேபசத்திரனும் கைகுடுக்க முன்வருகினம். இந்த ரெண்டு பேரும் இவன மாதிரியே எழுதுறாக்கள் தான். அவே வெளிநாட்டில இருந்து எழுதுறாக்கள். அதில ஷேபசத்திரன் காத்துவளம் பாத்து மூத்திரம் அடிக்க தெரியாத காலத்திலையே நாட்ட விட்டு ஓடினவன். அகிலேந்திரன் கடைசி சண்ட தொடங்கின காலத்தில ஓடினவன்.

அகிலேந்திரனும் ஷேபசத்திரனும் தமிழ்நாட்டில ஒரு எழுத்து பிஸ்னஸ் தொடங்கி இப்ப ஒவ்வொரு நாட்டிலையும் ஒருத்தன் இரண்டு பேரோட சுமாரா பிஸ்னஸ் போய்க் கொண்டிருக்கு. நாலு பேரோட கொழும்பிலையும் புதுசா பிஸ்னஸ் தொடங்கி இருக்கிறாங்கள். இந்த நேரத்தில தான் இவேக்கு கர்ணநேசன ஞாபகம் வருகுது.. உடன கர்ணநேசன தொடர்பெடுத்து பிஸ்னஸ பற்றி சொல்லினம். முதல்ல கர்ணநேசனுக்கு ஒருமாதிரி தான் இருக்கு... பிறகு பாத்தான் இது தான் நேரம்... கொஞ்சம் பேமசுமாகலாம் காசும் கையில வந்த மாதிரி இருக்கும் எண்டு பிஸ்னஸ் அக்ரிமண்டும் போட்டிற்றான்.

அகிலேந்திரனுக்கும் ஷேபத்திரனுக்கும் வெத்திலையும் வீணையுமெண்டா சுப்பர் விருப்பம். ரண்டையும் அடிக்கடி உயத்திதான் கதைப்பினம். அந்த குரூப்புக்கு புதுசா வாங்கின லவுட்ஸ் பீக்கர்தான் இந்த கர்ணநேசன். அவங்களோட இருக்கேக்க கர்ணநேசனோட இருந்த சில பேர் இப்ப வெத்தில தோட்டத்தில தான் வேலை செய்யினம்.  

கர்ணநேசனும் கதை எழுதிக் கொண்டிருக்கிறான். நினைச்சளவு பிஸ்னஸ் போகல... எதிர்பார்த்த பேமஸ் கிடைக்கல... எத்தின நாளைக்கு தான் இயற்றி இயற்றி எழுதுறது எண்டு நினைச்ச கர்ணநேசன் யாரையாவது பற்றி எழுதுவம் எண்டு நினைக்கிறான். யாரும் கிடைக்கல... கதைஎழுத ஒண்டும் கிடைக்கல.. உடன பேஸ்புக்ல போய் பாக்கிறான்.. அகிலேந்திரன் ஷேபசத்திரன்ட புரொபைல்களுக்க போறான்... அங்க போனா ஒரே ஆச்சரியம்... அட இவங்கள் அவங்களுக்கு எதிரா எழுதுறபடியா தான் நல்லா காசு பாக்கிறாங்கள் எண்டு முடிவெடுக்கிறான். உடன தானும் எழுத தொடங்கிறான்.

தனக்கு தெரிஞ்ச நாலஞ்ச வச்சு கொண்டு அதுக்கு எதுகை மோனைகள போட்டு வெளில விட்டுப் பாத்தான்... அகிலேந்திரன் ஷேபசத்திரன் குரூப்பில இருக்கிறாக்களிட்ட இருந்து நல்ல வரவேற்பு... அதோட இவனுக்கு தென்பு பிறக்குது.. பிஸ்னஸ்க்கு சிக்கல் வரப்போறதில்ல எண்டு முடிவெடுக்கிறான். அடுத்த கதை எழுதணும்.. என்ன எழுதலாம் எண்டு யோசிச்சவனுக்கு அங்க இருக்கேக்க தன்னோட இருந்திட்டு இப்ப வெத்தில தோட்டத்தில வேலை செய்யிறவன், விமல் எண்ட ஒருத்தன் ஞாபகத்துக்கு வாறன். விமல பற்றி எழுதி அவங்கள குறை சொல்லினா பிஸ்னஸ் ஓடுமெண்டது கர்ணநேசன்ட நம்பிக்க. உடன அவன்ட குடும்பத்த, அவன்ட லவ்வ, எண்டு அவன நாறடிச்சு ஒரு கதை எழுதி புத்தகமடிச்சு வெளியிடப்பண்ணிட்டான். அவனுக்கு நல்ல வருமானம்.

கர்ணநேசன் அவங்களோட பந்தாவ திரியேக்க கொமினிக்கேசன் சென்டர்ல வேலை செய்து கொண்டு திரிந்தவங்கள்தான் ரவியும் சுரேசும். கனநாள் ஆசையா காசு சேத்து ரவி ஒரு புது லப்டொப் வாங்கினான். அதுக்கு மொபிட்டல் டொங்குள் உம் வாங்கி இன்டநெட்டும் போட்டான். சுரேஸ் இன்ட ஆசை மச்சான் முதல்ல பேஸ்புக் போவம் என்றான். ஓகே போனா போச்சு என்று சொல்லியபடி பேஸ்புக்குள்ள என்டர் ஆகிறான் ரவி. ஹோம் பேச்சில முதலாவதா ஒரு போஸ்ட் இருக்கு. சரி படிச்சு பாப்பம் எண்டு ஓபின் பண்ணி வாசிக்கிறார்கள். அப்ப சுரேஸ் கேட்கிறான் யாரு மச்சான் இந்த கர்ணநேசன்??? "அவன் விமலோட நிண்டவன் தான்டா" என்கிறான் ரவி... "இவன் என்ன செய்யிறான்" என்று கர்ணநேசனை பற்றி சுரேஸ் திரும்பவும் கேட்கிறான்.

"இவனும் இப்ப வெத்தில தோட்டத்திலதான் வேலை செய்யிறான்". "உனக்கு கர்ணநேசன ஞாபகம் இல்லையா" என்று அவனைப் பற்றி சொல்கிறான் ரவி...  முழுவதுமாக உள்வாங்கிய சுரேஸ் "அட அந்த தூத்தேறிச்சனியானா.. வம்பில பிறந்தது.. தன்னைத்தானே கண்ணாடில பாக்காம தன்னோட இருக்கிறவனையே நாறடிச்சு வச்சிருக்கிறானே உறண்டல்....  அவங்களோட இருந்து நல்லா வளந்திட்டு இப்ப வெத்தில தோட்டத்தில வேலை செய்யிற கொழுப்பில தன்னோட வேலை செய்யதவனையே இப்பிடி எழுதி வச்சிருக்கிறானே உறண்டல்.. இப்பயும் சனியன் ஒரே தோட்டத்திலதானே வேலை செய்யிது... என்ன புழைப்புடா இந்த நாய்களுக்கு"... என்று தனது வெறுப்பை உமிழ்ந்து காறித்துப்பினான் சுரேஸ்... ரவியின் புது லப்டொப் கர்ணநேசன் மேல் காறித்துப்பிய சுரேஸின் எச்சிலில் நனைந்து கிடந்தது. ....

- மா.குருபரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)