Nightஅவிழ்ந்த கதைச் சுருளாய்
நழுவிப் பிரிகிறது இரவு மனம்
வானும் மண்னும்
உதடுகளாய்ச் சமைந்த
விசும்பின் வாயிலிருந்து உதிர்கின்றன
நட்சத்திர அட்சரங்கள்
கருந்தாள் பரப்பில்
எரிநட்சத்திரங்கள்
சித்திரங்கள் தீற்றுகின்றன
விடிய விடிய ஆடும்
நெடிய கூத்தின் கதையை
கூவிக் கதைக்கிறது இருட்டு

அழகிய பெரியவன்