‘என்ன தோழர்..
துபாய் வாழ்வு
எவ்வளவு காலம்தான் போகும்’ என்றார்
எதிர்காலம் குறித்த கவலையோடு
நண்பரொருவர்.

‘இந்த ஒரு பயணம்
சென்று திரும்பியதும்
இங்கேயே
தங்கிவிட திட்டம்’ என்றேன்
முந்தைய பயணங்களின் போது
சொல்லிச் சென்றதை போல.

என் தனி வாழ்வின் முடிவுகளும்
என்னால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை
எப்போதும் எதிலும்.

ஒரு பலி ஆட்டை போல
நகர்த்தக் கற்றுக்கொண்டேன்
நாட்களை! 

இ.இசாக், துபாய் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)