பாதங்கள் பயணிப்பது
மண்ணிலா பாதாளத்திலா?
பால்காரன் தண்ணீரில்லா
பால் தருகிறானே?
இதென்ன அதிசயம்
தினசரியில் ஏதும் அச்சிடாமல்
வெறும் வெண்தாள்களாய்..
நாட்டில் கொலை, கொள்ளை
ஊழல், வழக்கு
ஏதும் இல்லையா..?
அட யாரிது அழகாய் என் முன்னே
"இந்தாங்க அங்கயே தான் இருந்தது"


* -6.5 என் கண்ணாடி பவர்.


விழியன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.