பச்சை விளக்கெரிய
பதினைந்து நொடிகளிருக்கும்போது
இடுப்பிலிருக்கும் குழந்தையின்
கைகளை கொண்டு யாசகம் கேட்டிருந்தவள்
எனை நோக்கி நடக்க தொடங்கியிருந்தாள்.
அவசரத்தில் ஒரு நாணயம்
கைவிட்டு உருண்டோடி
மறைந்து போக..
கையிலிருந்த நாணயத்தை
தயக்கமாய் தந்து நகர்ந்தேன்.
வீடு வந்து சேரும்வரை
நினைவை விட்டு அகலவேயில்லை
உருண்டோடிய நாணயம்.
- சசிதரன் தேவேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)