சில்லென்று
நுண் நீர்த்துளிகளாய்
வீசும் காற்றில்
மனம் நனைத்து
கரையோரக் கடல் நீரில்
கால் பதித்து
கரையொதுங்கிய
கிளிஞ்சிலைச் சட்டென
கையில் தூக்கிய விரல்
எழுதிய கவிதை
கடலுடையது!

- ப.தனஞ்ஜெயன்