அத்தனை சலசலப்பிலும்
செத்தவளின் முகத்தில்
மின்னுகிறது மூக்குத்தி
*
ஞானமடைந்த மரத்தையெல்லாம்
கணக்கெடுங்கள்
புத்தனின் வழித்தடம் கிடைத்து விடும்
*
குழாயடி சண்டையில்
பச்சை பச்சையாய் திட்டிக் கொள்ளும்
பெண்களுக்கு பேச மட்டுமே வாய்த்திருக்கிறது
*
கல்லறைகளில்
கம்பீரமாய் மேல் சாதி
மண் அடுக்குகளில்
கூனிக் குறுகி கீழ் சாதி
செத்த பின்னும் புத்தி வரவில்லை
*
கண்டுக்காமல் வா
முள்காட்டு கழிப்பிடம்
முக்காடிட்டு அமர்ந்திருப்பது
உன் கல்லூரி
தேவதையாகவும் இருக்கலாம்....!
*
- கவிஜி