அடுத்த அடியை நிலவில்
வைத்தவள்
அடுத்த நொடி பாட்டியானாள்....
-----------------------------------------------------
ஈரப்பாதங்கள்
தேகம்
சொட்டுகின்றன...
-------------------------------------------------------
திறந்து எட்டிப் பார்த்து
யாருமில்லை என்று
அடைக்கையில்
பின்னால் ஒரு கதவு
அடைப்பதாக
ஒரு தட்டல் எட்டிப் பார்க்கிறது...
---------------------------------------------------------
ஞாபகம் வரும் போது சொல்
வருகிறேன்...
மீண்டும் புறக்கணி...
-------------------------------------------------------
கொட்டி விட்டுப் போனது
குப்பையானது
கோபம்...
------------------------------------------------------
இன்னும் கடிதங்கள்
எழுதுகிறேன்
நீ கிழித்தெறிய
---------------------------------------------------------
நீ தள்ளி விட்ட பிறகு
மீனான கதையையும்
உன் தூண்டிலிடமே
கூற முற்படுகிறேன்...
வார்த்தை சிக்கிக் கொண்டது..
------------------------------------------------------------
- கவிஜி