வெளுத்து வெண்பஞ்சு ஆகிப் போன முடிக்கு ஹேர் டை அடித்து, முகத்தின் சுருக்கங்களை மறைக்க பவுடர் பூசி, காலத்தில் தொலைத்த இளமையை மறைக்க டி ஷர்ட் போட்டு, இன்னமும் கல்லூரி கேர்ள்ஸ்சோடு காபிஷாப் போவதாக மொட்டைக் கடுதாசி ஒன்றை தனக்குத் தானே எழுதிக் கொள்ளும் ரோகியை நீங்கள் பார்த்ததுண்டா? புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கலாம்.

யாராவது வந்து கையெழுத்து கேட்க மாட்டார்களா, ஒரு பெண்ணாவது வந்து தன்னிடம் பேசி விட மாட்டாளா என்று ஏங்கிப் போய் உயிர்மை வாசலில் கிடந்து கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் ஜனசமுத்திரத்தை எரிச்சலுடன் பார்த்து, அவமானத்தை மறைக்க‌ குனிந்து மொபைலை நோண்டி... so called (!) இலக்கியவாதியாக இருப்பது எத்தனை அவஸ்தைகள்? Seeking famous is disgusting one.

charu_350தமிழ் இலக்கிய ஜாம்பாவான்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் சில‌ எழுத்தாளர்களைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது. விட்டால் "என்னைப் பாராட்டுங்க... பாராட்டுங்க" என்று தரையில் விழுந்து நக்கி நாத்தாங்கால் நட்டு விடுவார்கள் போலிருக்கிறது. Comic people!!

குஷ்டத்தில் பல வகை உண்டு. குஷ்டநோயானது பதினெட்டு வகைப்படும். அதாவது, வாதத்தால் கபாலகுஷ்டமும், பித்தத்தால் அவதும்பரகுஷ்டமும், சிலேஷ்மத்தால் ருசியஜிம்மிககுஷ்டமும், சிலேஷ்மபித்தத்தால் சருமகுஷ்டமும், ஏககுஷ்டமும், கிடிப குஷ்டமும், சித்மகுஷ்டமும், அலசகுஷ்டமும், சிலேஷ்ம வாதத்தால் வியாதிகாகுஷ்டமும், திரிதோஷத்தால் தத்துருகுஷ்டமும், புண்ட ரீக குஷ்டமும், சதாருகுஷ்டமும், விஸ்போடகுஷ்டமும், பாமா குஷ்டமும், சர்மதளகுஷ்டமும், காசசகுஷ்டமும், பிறக்கும். இவற்றுள் அவதும்பரம், மண்டலம், ருசியஜிம்மிகம், புண்டரீகம், கபாலம், காகசம் என்னும் ஆறு குஷ்டங்களை மகாகுஷ்டங்களென்று கூறுகின்றார்கள். இவைகள்தான் நாட்டு வைத்தியத்தில் உள்ள குஷ்ட வகைகள் இவைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிதில் சரிப்படுத்தி விட முடியும்.

சாருவுக்கு வந்திருப்பதும் ஒருவகையான மனக் குஷ்டம்தான். Mental disorder. அதனால்தான் எப்போதும் தான் குடிக்கும் ரெமிமார்ட்டின், அப்சல்யூட் ஓட்கா, நாற்பதாயிரம் ரூபாய்க்கு கண்ணாடி, ஆண் விபச்சாரம், குப்பி கடித்தல், குண்டியடித்தல், குமட்டில் குத்தல், செக்ஸ் என்று தன்னை ஒரு பிளே பாய் ரேஞ்சுக்கு பில்டப் செய்து கொண்டிருக்கிறார். தேகம் என்னும் மரண மொக்கை நாவல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் "சரோஜாதேவி புத்தகங்களை மிஞ்சி விட்டாய்" என்று சொன்னாராம். உண்மையில் மிஷ்கின் அப்படி பட்டவர்த்தனமாக உண்மையைச் சொல்லியிருக்க வேண்டியதில்லை. அது ஊரறிந்த ரகசியம்தானே!  ஆனால், 'உனக்கு நடிப்பே வரவில்லை' என்று மிஷ்கின் சொன்னதன்மூலம் சாருவின் கதாநாயகக் கனவு உடைந்ததுதான் அவரது கடுப்பிற்குக் காரணம்.

தன்னுடைய பசி, தன்னுடைய காமம், தனக்கு வேண்டிய சரக்கு, தனக்கு வேண்டிய மதிப்பு இவைகள் எதுவும் தன்னிடம் இல்லை என்பதும் கிடைக்க வேண்டிய வயதிலும் இதெல்லாம் தனக்குக் கிடைக்கவில்லை என்பதும்தான் சாருவின் வருத்தமாக இருக்கிறது. கடந்த கால சாருவின் வாழ்வு தொடர்பாக கொஞ்சம் விசாரித்தாலும் ஒரு மேல் மத்திய தரவாழ்வை அவர் வாழ்ந்ததும், அவர் பேசுகிற விளிம்பு வாழ்வுக்கும் அவருக்கும் எப்போதுமே தொடர்பெதுவும் இருந்திருக்கவில்லை என்பதும் தெரியவரும். மத்திய அரசு ஊழியரான அவர் சராசரி இந்தியர்களின் வாழ்வை விட சிறந்த வாழ்வையே இன்று வரை வாழ்கிறார். He is being sophisticated man.

தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிற சாருவை கேரள ஊடகங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவும் ஐஸ்வர்யாராய்க்குப் பிறகு நான்தான் கேரளாவில் பேமஸ் என்றும் தமிழ்நாட்டில் தனக்கு மரியாதை இல்லை என்றும் புலம்பல்... இதற்கு ஜால்ரா தட்ட சில அல்லக்கைகள் வேறு...

சேட்டன்களிடம் ஷகீலாகூட பேமஸாக இருந்தார்தான். ஷகீலாவைக் கொண்டாடிய மலையாளிகள் இப்போது சாருவைக் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கு என்ன வந்தது? அவர்கள் 'இலக்கிய சுப்பிரமணியசாமி' என்பதைத் தாண்டி எந்த மரியாதையையும் சாருவுக்குத் தரத் தயாராக இல்லை. 'நான் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா?' என்று ஒருவன் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்றால், அவன்தான் அந்த ஊருலே பெரிய டம்மிப் பீஸூ. He is not worth for anything.

‘திருவனந்தபுரத்தில் கூப்பிட்டாங்க... பாலக்காட்டிலே கூப்பிட்டாங்க... கொச்சியிலே கூப்பிட்டாங்க...’ (தமிழ்நாட்டில் ஒரு பயபுள்ளயும் ஒரு காலத்துலேயும் கூப்பிடாது). என்று பிலாக்கணம் வைப்பதற்கு பேசாமல் சாரு அங்கேயே குடியேறிவிடலாம். முல்லைப் பெரியாறுக்கு மலையாளிகளைப் பழிவாங்கிய மாதிரியும் இருக்கும்; தமிழகத்தில் ஒரு ஊளைச் சத்தம் குறைந்த மாதிரியும் இருக்கும்.

Premature ejaculation ஆக சாரு நிவேதிதா வெளித்தள்ளுவதை எல்லாம் புத்தகங்களாக்க மனுஷ்யபுத்திரனுக்கு வேண்டுமானால் அவசியம் இருக்கலாம். ஆனால் அதைக் கொண்டாட வேண்டிய‌வேண்டிய அவசியம் வாசகர்களுக்கு இல்லை.

பெரும்பாலான ஏழைகளைக் கொண்ட நாடு நம் நாடு. அவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. அன்றாடம் கூலி உயர்வு கேட்டு அவர்கள் போராடினால் அடியும் உதையும்தான் கிடைக்கிறது. காலையிலிருந்து மாலை வரை உழைத்து வாங்கிய கூலியில் வயிறார உண்ட காலம் மாறி அன்றாடம் கத்தரிக்காய் குழம்புக்கே வழியில்லாமல் போய் விட்ட நிலையில், எழுத்தாளனுக்கு மட்டும் சமூகம் செய்யணுமாம். Ridiculous!! சமூகத்திடம் எதிர்பார்ப்பது கூட சரிதான். ஆனால் சமூகத்திற்கு நீங்க என்ன செய்தீங்க சாரு?

நீங்க குடியிருக்கிற வீட்டின் உரிமையாளரின் மகள்கள் உள்ளாடையில் சுய இன்பம் அனுபவித்து வடித்து விட்டது‌, பேருந்தில் செல்லும் ஒரு சாதாரண பெண்ணின் சேலையில் விந்து வடிப்பது இவற்றைத்தானே உங்கள் எழுத்துக்கள் பேசுகின்றன. இதுதான் தமிழக மக்கள் சந்திக்கும் பிரச்சனையா? சமூகம் உங்களைக் கொண்டாடவிடவில்லை என்று வருத்தப்படுகிறீர்களே? உங்கள் எழுத்துக்களைக் கொண்டு போய் சமூகத்திடம் கொடுத்து அம்மா...தாயே நான் இதை எல்லாம்தான் இத்தனை நாளாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கொண்டாடுங்கள் என்று சொல்லுங்கள் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்...

இவ்வளவு சீர்கேட்டையும் ஒழுக்கக்கேட்டையும் கொண்ட எழுத்துக்களை ஆளும் கட்சி கனிமொழி முன்னிலையில் வெளியிடுவதால் ஆபாசம் இல்லாமல் ஆகி விடுமா?

மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. அதை மறைத்து கொண்டாட்டங்களைக் கசிய விடுவதும், மக்களுக்காகப் போராடுகிறவர்கள் மீது அம்புகளை ஏவுவதும்தான் - ஆளும் வர்க்கங்கள் தங்கள் சார்பு எழுத்தாளர்களுக்கு இட்ட பணிகள். அதில் சாருவுக்கு போதை பொருள் சப்ளை பண்ணுகிற வேலை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் சாரு.

Pin It