supreme court 255உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூசன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம்தான் உண்மையில் ஏதோ இக்கட்டில் சிக்கிக் கொண்டது போல் நடந்து கொண்டது, பிரசாந்த் பூசன் தன் குற்றத்துக்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கட்டளையிட்ட நிலையிலிருந்து, ”ஒரு வருத்தமாவது தெரிவிக்க்க் கூடாதா?” என்று கெஞ்சும் நிலைக்கு உச்ச நீதிமன்ற நீதியர் வந்து விட்டனர், ஏன்? என்ற கேள்விக்கான விடை 02.08.2020 அன்று பிரசாந்த் பூஷன் கொடுத்த உறுதியாவணத்தில் காணக் கிடைக்கிறது. 175 பத்திகள் 134 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம் நீதித் துறையின் மீதான நம்பிக்கைக்கே வேட்டு வைக்கும் படியானவை.

இந்த ஆவணத்தில் பூசன் எடுத்துக்காட்டிய முகன்மைக் கூறுகள் இவை:

இந்த உண்மைகள் பொதுவெளியில் அலசப்படுவதைத் தவிர்க்கவே அரசும் உச்ச நீதிமன்றமும் விரும்பின. சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற நிலைக்கு வந்து விட்டதால்தான் வழக்கை முடிக்க வழிதேடி, வருத்தமாவது தெரிவித்தால் போதும் என்று நீதியின் தலைமைப்பீடம் கெஞ்சியது, வருத்தம் தெரிவிக்க மறுத்த பிரசாந்த் பூசனின் நிலைப்பாட்டை வரவேற்போம். அவரது பணி தொடரட்டும்.

செங்காட்டான் குறிப்புகள்