நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம்
நம்முள்ளத்தில் வேரூன்ற வேண்டும்! மேலும்
நாமெல்லாம் ஒரே வகுப்பார் என்ற எண்ணம்
ஒன்றாக நம்முணர்வில் ஏற வேண்டும்
தீமையுற நமை எல்லாம் சமயம் சாதி
சிதறடிக்க இடங்கொடுத்தால், நமது குற்றம்!
ஆமை உயிர் காதிருந்தன் முதுகின் ஓட்டை
அகற்றென்றால் அவ்வாமை கேட்கலாமா?