எல்லைப் பிரிக்கையில்ஏற்பட்ட சூதுதான்
முல்லைப் பெரியாறுக்கு முட்டு - தொல்லைதந்து
கூட்டாட்சி யைப்பிடித்தோர் பூணூலில் கட்டிவிட்டான்
பட்டேலாம் பார்ப்பா னவன்.
ஆட்டோடு மாட்டோடு பன்றி பலவிலங்கைக்
கூட்டியொடு பட்டியிலே பூட்டிவிட்டான் - கேட்டதற்கு
‘இந்தியா’ என்றே இளித்தவாய்க் காட்டுபவர்
மந்தியோ! மற்ற எதுவோ?
அவனவன் வீட்டிலே அன்போடு வாழாது
எவனது வீட்டிலும் ‘பாய்’ தான் - எவனெங்கும்
வந்தே பொறுக்கிட வாய்ப்புள்ள பாட்டாகும்
வந்தே மாதரந் தான்.
யாருக்கு வேண்டுமிங்கு இந்திமொழி; அய்யய்யோ
யாருக்கு வேண்டுமிங்கு ஜெய்இந்து - பாருக்கு
யாதும்நம் ஊரென்றும் யாவரும் கேளிரென்றும்
ஓதியதே நாங்களன் றோ!