nallakannu and thiruma

40வது சென்னை புத்தகக் கண்காட்சியையட்டி 12-1-2017 அன்று சென்னை இக்சா மையத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 50 புதிய நூல்கள் வெளியீட்டு விழாவை நடத்தியது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றதோடு நூல்களை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் 50 நூல்களையும் பெற்றுக்கொண்டார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் இயக்குனர் தா. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சண்முகம் சரவணன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பொது மேலாளர் ரத்தினசபாபதி அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியை என்சிபிஎச் மேலாளர் பாஸ்கர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

ஆர்.நல்லகண்ணு

சென்னை புத்தகக் கண்காட்சியையட்டி 50 நூல்களை வெளியிட்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இப்படிப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளாக மக்களிடையே வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிரவும் மதுரை ஈரோடு என புத்தகக் கண்காட்சி நாடு முழுவதும் நடந்துவருவது வரவேற்கத்தக்கது. என்சிபிஎச்சை 60 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்து புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டுமென்பதற்காக 18 கிளைகள் மூலமாக விற்பனை செய்துவருகிறது. பாரதி நடமாடும் வண்டிகள் மூலமாகவும் புத்தகங்களை ஊர்ஊராகச் சென்று விற்றுவருகிறோம். புத்தகங்களை எடுத்துச்சென்று மக்களிடம் அறிவை வளர்க்கவேண்டும், பகுத்தறிவை வளர்க்கவேண்டும் என்பதற்காக, பண்பாடு கலாச்சாரத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். சங்க இலக்கியத்தை ராஜம் பதிப்பகத்திலிருந்து வாங்கி அனைத்தையும் தொகுத்து முதல் முதல் வெளியிட்ட பெருமை என்சிபிஎச்சுக்கு உண்டு.

ஜீவா அவர்களின் எழுத்தை முழுத் தொகுப்பாக வீ.அரசு தலைமையில் ஒரு குழு அமைத்து ஐந்து தொகுதிகளாக வெளியிட்டோம். சிங்காரவேலர் எழுதிய அனைத்தையும் தொகுத்து வெளியிட்டோம். அண்ணல் அம்பேத்கரின் எழுத்துகளை முழுமையாக வெளி யிட்டோம். இதற்கு ஒரு குழு அமைத்து அரசிடம் அனுமதி வாங்கி மூன்று சுற்றுகளாகப் பதிப்பித்தோம். 37 தொகுப்புகளாக ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளோம். 38, 39 ஆகிய தொகுப்புகள் அச்சில் தயாராகிக்கொண்டுள்ளன. 40வது தொகுதிக்கு அனுமதி வாங்கி அதையும் விரைவில் வெளியிட வுள்ளோம். அம்பேத்கர் எழுத்துகளை ஆங்கிலத்திற்குப் பிறகு மாநில மொழிகளில் தமிழில் நாம்தான் முதலில் விற்பனை செய்தோம். தமிழகத்தில் அம்பேத்கர் எழுத்துகளை அதிகம் கொண்டு சேர்த்தது நாம்தான். படிப்பதற்கு வசதியான முறையில் அதிகமான தொகுப்பு களை வெளியிட்டிருக்கிறோம். கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது நவீன இலக்கியங்களை இலக்கிய ஆய்வுகளை 100 நூல்களாக வெளியிட்டோம். பல நிகழ்ச்சிகளில் பல எழுத்தாளர் களும் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களும் எங்களுக்கு என்சிபிஎச் நூல்கள் பலவழிகளில் ஆர்வ மூட்டுவதாக இருந்தது என்று பல விழாக்களில் பேசிவருவதைப் பார்க்கமுடிகிறது. இந்த 50 நூல்களைப் பெற்றுக்கொண்ட தோழர் திருமாவளவன் அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டார். அவர் நல்ல வாசகர். நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர். இப்படியெல்லாம் புத்தகங்களைப் பற்றி தமிழ்நாட்டில் பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும் கேரளாவில் 5000 பிரதிகள் பதிப்பிக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் 500, 1000 என்று அதற்குமேல் போவதில்லை. அந்தக் குறை இருக்கிறது. அனைவரும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்கவேண்டும். உங்களோடு என்சிபிஎச் கைகோத்து வரும். அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும்.

முத்தரசன்

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு என்சிபிஎச் சார்பில் ஒரே நேரத்தில் 50 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இதுபோல் யாரும் வெளி யிட்டதாகத் தெரியவில்லை. அம்பேத்கர் நூல்களை 40 தொகுதிகளாக என்சிபிஎச் கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை யாரும் இந்தளவுக்கு அம்பேத்கர் நூல்களை வெளியிட்டதில்லை. வெளியிடப் போவதுமில்லை. சிங்காரவேலர் நூல்களை முழுக்க என்சிபிஎச் வெளியிட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்தை தமிழ்நாட்டில் முதலில் அறிமுகம் செய்தவர் என்று காமராஜரையும் எம்ஜிஆரையும் சொல்வார்கள். ஆனால் முதன்முதலில் சிங்காரவேலர்தான், சென்னை மாமன்ற உறுப்பினராக அவர் இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். புத்தகங்களை வெளியிடும்போது அந்தப் புத்தகங்களைப் படித்து விட்டுப் பேசுவது வழக்கம். இங்கு அது சாத்தியமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் புத்தகங்கள் அச்சாகி வந்தன. பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற முயற்சிகள் தொடரவேண்டும். பொது மக்களின் ஆதரவும் தொடரவேண்டும். வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஈரோட்டில் புத்தகத்திருவிழாவுக்கு மக்கள் ஆர்வத்தோடு வருகிறார்கள். மக்கள் வருகை மேலும் மேலும் அதிகரிக்கும்போது சமூக மாற்றங்கள் வரும். அதற்கு துணையாக இருப்பது புத்தகங்கள்தான். இந்த மகத்தான பணியை என்சிபிஎச் தொடர்ந்து அர்ப்பணிப் போடு செய்துகொண்டிருக்கிறது. இங்குப் பணியாற்றும் தோழர்கள் சம்பளத்திற்காக மட்டுமல்லாமல் சேவை உணர்வோடு செயல்படுகிறார்கள். அது பாராட்டுக் குரியது. இனிவருங்காலங்களில் புத்தகங்களுக்கான வரவேற்பைப் பொறுத்து ஆயிரக்கணக்கான புத்தகங் களை என்சிபிஎச் வெளியிடவேண்டும்.

திருமாவளவன்

ஐம்பது புத்தகங்களை அச்சிட்டுப் பதிப்பித்து அதனை சிறப்பாக வெளியிடும் இவ்விழாவில் இந்த அரிய வாய்ப்பை வழங்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றி. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் எத்தகைய புத்தகங் களைப் பதிப்பித்து வருகிறது, கருத்துப் பரப்புரையை சிறப்பாகச் செய்துவருகிறது என்பதை தோழர் நல்லகண்ணு அவர்கள் குறிப்பிட்டார். குறிப்பாக அம்பேத்கர் அவர்களின் எழுத்தும் பேச்சும் 37 தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. மூன்று தொகுதிகளுக்கு அனுமதி வாங்கியிருக்கிறது. அவற்றை மிக அதிகமான அளவில் விற்பனை செய்திருக்கிறது. சிந்தனைச்சிறபி சிங்காரவேலரின் சிந்தனைகளை நூல்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. உலகெங்குமுள்ள புரட்சிகர சிந்தனையாளர்களின் சிந்தனைகளைத் தொகுத்து அளப்பரிய பணியைச் செய்து தனது வரலாற்றுக் கடமையை இந்தியாவில் செய்துவருகிறது. அவ்வரிசையில் 50 நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நம்மைப் பற்றி, அரசியலைப் பற்றி, சமூக சூழலைப் பற்றி, வரலாற்றைப் பற்றி பல்வேறு சிந்தனைகளைத் தாங்கியுள்ள நூல்களாக உள்ளன. இந்த நூல்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக 18 இடங்களில் கிளைகளைக் கொண்டு என்சிபிஎச் விற்பனை செய்து வருகிறது.

மாதம் ஒரு புத்தகம் என்று சிலர் வெளியிடுவார்கள். அவசரகதியில் புத்தகத்தைப் பதிப்பித்து புத்தகத் திருவிழாக்களில் வெளியிடக்கூடியவர்கள் உண்டு.

புத்தகங்களைத் தேர்வுசெய்து எத்தகைய சிந்தனை களைப் பரப்பவேண்டும் என்ற புரிதலோடும் தொலை நோக்கோடும் செயல்படுவதுதான் என்சிபிஎச்சின் தனிச்சிறப்பு.

சிலர் எதை வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்தான் என்றும் வணிகம்தான் நோக்கம் என்றும் இருக்கிறார்கள். வணிக நோக்கம் எல்லாத் துறைகளிலும் உள்ளது. பளபளப்பான அட்டை, கவர்ச்சிகரமான படம் என்று உள்ளடக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் வணிக நோக்கத்தில் சிலர் செயல்படுகிறார்கள்.

எளிமையான வடிவமைப்பில், மலிவான விலையில் சிறந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சிறந்த நூல்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம். இந்தப் பணி மிகச்சிறந்த பணி. எதிர்காலத் தலைமுறையினரை சீரிய முறையில் வளர்ப்பதற்கும் படைப்பாளர்களை உருவாக்குவதற்கும் அந்தத் தளத்தில் பணியாற்றுவது என்பது விடுதலைக்கான போராட்டம்தான்

இளந்தலைமுறையினர் குறுகிய எண்ணத்தோடு சாதி மதவாத சிந்தனைப்போக்கில் அந்த சூழலுக்குள் போய் சிக்கிக்கொள்ளும் நிலையில் அவர்களுக்குப் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதில் உள்ள பிரச்சினைகளைக் கடந்து செயல்பட வேண்டி யுள்ளது.

கேரளாவில் பதிப்புத்துறையில் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன இங்கு ஆயிரம் புத்தகம் விற்பதற்கே சிரமமாக உள்ளது. வாசிப்புப்பழக்கம் குறைந்திருக்கிறது. நாளேடு வாசிக்கிற பழக்கங்களை உருவாக்க பதிப்பகங்கள் முயற்சிக்கவேண்டும். புத்தகம் விற்பதைக் கடமையாகக் கொண்டிருப்பதுபோல வாசகர் வட்டத்தில் இளைஞர்களைக் கொண்டுவருவதையும் ஒரு கடமையாக எண்ணிச் செய்யவேண்டும். அறிமுகம் செய்தாலே போதும். புத்தகங்கள் முறையாக அறிமுகம் ஆகாமல் இருப்பதும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகாததற்கு ஒரு காரணம்.

சிலர் கல்வித்துறையில் நிறைய படித்திருக்கிறார்கள் ஆனால் சமூகநீதிக்கான வரலாறு பற்றிய அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் இருக்கிறார்கள். சமூக அறிவு சமூகச் சிந்தனை இளைய தலைமுறையிடம் போய்ச் சேரவில்லை. மூத்தவர்கள் பலருக்கே சென்று சேரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியினரின் தியாகங்கள் எல்லோருக்கும் சென்று சேரவில்லை. இனப்பற்று. கலாச்சாரம் பண்பாடு எனப் பெரும்பகுதியினருக்கு கொண்டு சேர்ப்பிக்கப்படவில்லை.

பதிப்பகத்தார் தங்களது இன்னொரு பகுதியாக வாசகர் வட்டத்தை உருவாக்கவேண்டியது அவசியம். ஜனநாயக சிந்தனை வட்டம், புரட்சிகரமான ஜனநாயக சிந்தனை வட்டம் என்று ஏற்படுத்தப்படவேண்டும். மக்களிடையே ஜனநாயக சிந்தனை விதைக்கப்படாமல் பிற்போக்கு சக்திகள் மேலெழுந்துவிட்டன. புத்தகங்கள் என்பவை புரட்சிகர விதைகள். புரட்சிகர சிந்தனைகள் அடங்கிய விதைகள். இவற்றால்தான் பிற்போக்கு சக்திகள் வளராமல் செய்யமுடியும்.

பெரியாரைத் தெரிந்து வைத்திருக்கும் மக்களுக்கு பெரியாரின் சிந்தனைகள் போய்ச் சேரவில்லை. பெரியாரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பெரியாரியம் போய்ச் சேரவில்லை. அம்பேத்கரை அடையாளம் தெரிந்திருக்கிற மக்களுக்கு அம்பேத்கரியம் போய்ச் சேரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி போய்ச் சேர்ந்திருக்கிறது கம்யூனிஸம் போய்ச் சேரவில்லை. தலைவர்கள் அடையாளப்படுத்தப்பட்ட அளவுக்கு கருத்தியல் கவனப்படுத்தப்படவில்லை. இவற்றையெல்லாம் இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் கடமையும் பதிப்பகங்களுக்கு இருக்கிறது. தொடர்ந்து அந்த பாதையில் செயலாற்றி வரும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தைப் பாராட்டி விடை பெறுகிறேன்.

தா.பாண்டியன்

50 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப் படுகிறது. அவற்றை வாங்கிப் படிக்கவேண்டும். பல தோழர்கள் எழுதியுள்ள புத்தகங்களை காலத்தின் தேவையை அறிந்து வெளியிட்டுள்ளனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக மகளிர் அதிகமாக எழுதியுள்ள புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும். ஒவ்வொருவருக்கும் முதற்பாடத்தைக் கற்றுத்தந்த பேராசிரியர் தாய்தானே.

அந்தக்காலத்தில் பெண்கள் ஏட்டைத் தொடுவது பாவம் என்று சொல்லி வைத்திருந்தார்கள். இக் காலத்தில் நிறைய படிக்கிறார்கள். ‘பழையன கழிதலும்Õ என்பதுதானே செய்யுள். பரிணாம வளர்ச்சி மற்றும் கால மாற்றத்தில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. பெண்களும் நிறைய படிக்கிறார்கள், எழுதுகிறார்கள், அறிவு நிரம்பிய சான்றோர்களாக வலம் வருகின்றார்கள்.

எப்படி சான்றோர்கள் என்றால், ஒரு எடுத்துக் காட்டு. அந்தக்காலத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. அது வைதிக முறைப்படி நடைபெற்ற திருமணம். அங்கு திருமணச்சடங்கு செய்துகொண்டிருந்த வைதிகர் வடமொழியில் மந்திரங்கள் ஓதிக்கொண்டிருந்தார். அந்த மன்றத்தில் படித்தவர்கள் புலவர்கள் என ஏராள மான பேர் கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தி லிருந்தவர்களில் மறைமலையடிகள் ஒருவர்தான் எழுந்துசென்று ‘நிறுத்து, இது திருமண வீட்டில் சொல்கிற மந்திரமில்லை, இழவு வீட்டில் சொல்ல வேண்டிய மந்திரம்Õ என்று சொல்லிவிட்டு திருமணத்தின் போது சொல்லக்கூடிய மந்திரத்தை வடமொழியில் சொன்னார். இப்படிப் பன்மொழி அறிவுபெற்று, கற்பன எல்லாம் கற்று, அறிவு நிறைந்த சான்றோராகி, மறைமலை அடிகள்தன் எழுத்துகளை எழுதினார். இப்படிப்பட்ட அறிவார்ந்த சான்றோர்களாக இன்று பெண்கள் வலம் வருகின்றார்கள். இது பெருமைக்குரிய விசயம்.

ரொமிலா தாப்பர் அவர்கள் அத்தகைய அறிவார்ந்த பெண்மணி; மிகச்சிறந்த வரலாற்றாய்வாளர். அவர் எழுதிய நூல்கள் இப்போதுதான் தமிழில் வெளியிடப் பட்டுள்ளன. அந்த நூல்களை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும்.

பெரியாரை அடையாளப்படுத்தியிருக்கிறோம். அம்பேத்கருக்கு சிலை வைத்திருக்கிறோம். மாலை போடுகிறோம். ஆனால் அவர்களது சிந்தனைகளை யாரும் படிக்கவில்லை. அவர்கள் சிந்தனையை இன்னும் இன்னும் ஆழமாக ஒவ்வொருவரும் கற்க வேண்டும். காலங்காலமாகச் சமூகக் கடமை ஆற்ற உதவக்கூடியவை அவர்களது சிந்தனைகள். அந்த வகையில் இல்லாமல், அவர்களது நூல்களை, எழுத்துகளை மலிவான விலையிலே நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுச் சமூகக் கடமை ஆற்றி வருகின்றது.

கொஞ்ச காலத்திற்கு முன் காஸ்ட்ரோவைப் பற்றிய ஆய்வுநூல் வெளியீட்டுக்கு கியூப நாட்டு தூதுவர் வந்திருந்தார். அவர் சொன்ன ஒரு செய்தி காஸ்ட்ரோவைப் பற்றி கலைஞர் கருணாநிதி தமிழில் எழுதிய கவிதையை பிடல் காஸ்ட்ரோவால் படிக்கமுடியவில்லை. பின்னர் தமிழிலிருந்து ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு அந்தக் கவிதையை பிரேம் செய்து தன் மேசை யிலேயே காஸ்ட்ரோ வைத்திருந்ததாக கியூப நாட்டுத் தூதுவர் சொன்னார். இதனை அப்போது கலைஞரிடம் சொல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த அளவிற்குத் தம்மைப் பற்றி பிறர் எழுதுவதை அறிந்துகொள்ளும் ஆர்வம் கியூபாகாரர்களுக்கு, புரட்சிக்காரர்களுக்கு உண்டு. அதனால்தான் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் அரிய வரலாற்று நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகின்றது. இப்போது வெளியிட்ட நூல்களிலும் மிக முக்கியமான வரலாற்று நூல்கள் உண்டு.

ஜப்பான் ஆக்கிரமிப்பு காலத்தில் டாக்டர் கோட்னிஸ் என்ற இந்தியர் சீனாவுக்குச் சென்று மருத்துவ சேவை செய்த மருத்துவர், அவரது மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு மாசேதுங் கைப்பட ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சமீபத்தில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டதைப் பார்த்தேன். அந்த டாக்டர் கோட்னிசைப் பற்றிய புத்தகத்தை என்சிபிஎச் வெளியிட்டுள்ளது.

சேலத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கலைஞர் பேசினார். உருக்கமான முறையிலே ‘மார்பில் பால் வரவில்லை, ரத்தம் வரும்போலத் தெரிகிறது, துவண்டு படுக்கிறது. கண்ணீரே காலமாகிவிட்டதுÕ என்றெல்லாம் ஜென்னி மார்க்ஸைப் பற்றிப் பேசினார். அதைக்கேட்ட தாய்மார்கள் கண்ணீர் வடித்தார்கள். அப்போது கலைஞர் என்னிடம் சொன்னார். ஜென்னியையே நாங்கள்தான் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம். நீங்கள் செய்யவேண்டியதைக்கூட நாங்கள்தான் செய்யவேண்டியிருக்கிறது என்று சொன்னார். அவர்கள் நாசூக்கானவர்கள். அப்படித்தான் சொல்வார்கள்.

அப்போது நான் சொன்னேன். மார்க்ஸ் சிந்தனை என்பது வெறும் 300 ஆண்டுகாலத்துக்கு முற்பட்டது தான். அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை‘ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். ஆதிகாலத்திலேயே சமத்துவச் சிந்தனையைத் தமிழனுக்குள் விதைத்தவன் வள்ளுவன். நமக்கு ஆழமான சொந்த வேர்கள் உள்ளன. அவற்றை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.

கீழடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்பாட்டைக் கண்டுபிடித்து உள்ளனர். அந்தப் பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். ஆனால் இன்று அதைப் பற்றிய உணர்வு இருக்கிறதா நமக்கு?

நம் சொந்த பண்பாட்டுப் பெருமையை உணரப் புத்தகங்கள் படிப்பது அவசியம். ஒவ்வொருவரும் கட்டாயம் புத்தகங்களை வாசிக்கவேண்டும். சிந்தனை களை வளர்த்துக்கொள்ளவேண்டும். சிறப்பாக உழைத்து நல்ல நூல்களைக் கொண்டு வந்துள்ள என்சிபிஎச் பணியாளர்களுக்கு வாழ்த்துகள்.

தொகுப்பு: ஜி.சரவணன்