பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

இராஜபக்க்ஷே மீது போர்க்குற்றவாளி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், இந்தியா இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களின் ஒருமித்த உணர்வைப் பிரதிபலிக்கிறது, இந்தத் தீர்மானத்தை தமிழக முதல்வரே முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றச் செய்ததை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது.

ஈழத்தமிழர் பிரச்சனையில் சரியான பார்வையோடு தமிழக முதல்வர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு உவப்பான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்,.

தமிழ்நாட்டு சிறப்புமுகாம்களில் பலஆண்டுகளாக விசாரணை ஏதும்இன்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்களை உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு நீண்ட காலமாகப் போராடி வருகிறார்கள், கடந்த ஆட்சியில் கண்டுகொள்ளப்படாத இந்த நியாயமான, மனிதாபிமானக் கோரிக்கையைப் பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம்.

Pin It