modi yoga

ஆர்.எஸ்.எஸ்-இன் முகமுடி பா.ஜ.க.

அதன் ஒவ்வொரு அசைவிலும் மதமும், மதம் சார்ந்த சிந்தனைகளும் இருக்கும்.

இன்று அவர்களிடம் சிக்கிக்கொண்டு இருப்பது ‘யோகா’.

யோகா ஓர் உடற்பயிற்சி. அதற்கு மதம் இல்லை, சாதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது என்கிறார் மோடி.

உண்மையும் அதுதான். யோகா சூத்திரத்தில் கூறப்பட்டுள்ள 1.யமா, 2.நியமா, 3.ஆசனா, 4.பிராணாயமாம், 5.பிரத்யாஹாரா, 6.தாரணா, 7.த்யானம், 8.சமாதி ஆகிய எட்டும் யோகா என்ற பெயரில் இருக்கும் உடற்பயிற்சிகள். இதில் மதச் சிந்தனை இல்லை - பதஞ்சலி வருவதற்கு முன்னர்.

பதஞ்சலியின் யோகா என்பது மதத்திற்குள் இருந்து ஆத்திகமாக வெளிவருகிறது.

அவரின் யோகா குறித்த விளக்கம், கடவுளுடன் இணைந்த சாங்கியமாக மாறுகிறது.

‘‘யோகாவைச் (பதஞ்சலி) சாங்கியத் தத்துவத்தில் நுழைப்பதால் ஆத்தியகர்கள் திருப்தி அடைந்தார்கள்’’ என்கிறார் கார்பே.

கடவுளை ஏற்று கொண்ட பிற்காலச் சாங்கியத்துடன் யோகாவை இணைக்கிறார் பதஞ்சலி.

யுஜ் என்பது யோகம் என்ற சொல்லின் வேர்ச்சொல்.

யுஜ் என்றால் இணைவது என்பது பொருள். இணைவது என்றால் ‘‘ஜீவாத்மாவும்’’ ‘‘பரமாத்மாவும்’’ இணைவதாகும். இதற்கு எல்லையற்ற பரம்பொருளுடன் இணைவது, இரண்டறக்கலப்பது என்று பொருள் கொள்ளப்படுகிறது.

அதுமட்டுமல்ல யோக சாத்திரத்தின், இராஜயோகத்தில் யோகா தவிர கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகியவையும் இருக்கின்றன. அவையும் யோகாக்களாம்.

மத்தியில் பா.ஜ.க அரசு வந்தவுடன் யோகாவுக்கு இவ்வளவு பெரிய விளம்பரமும், முக்கியத்துவமும் கொடுப்பதன் நோக்கம் இதுதான்.

யோகாவுக்கு மதம்ச் சாயம் இல்லை என்று சொல்லிக்கொண்டே மக்களிடம் இந்துத்துவ விதைகளை யோகா மூலம் விதைக்கும் வேலையை செய்து கொண்டு இருக்கிறது மோடி அரசு.

குறிப்பாகப் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளிடமும் -

கல்லூரி மாணவர்களிடமும் -

இது உடற்பயிற்சி என்ற போர்வையில் இந்துத்துவத்தைக் கொண்டு செல்ல முயல்கிறது இந்த அரசு.

சமண மதத் தலைவர் மகாவீரர் 12 ஆண்டுகள் உடற்பயிற்சி என்ற யோகாவைச் செய்தார்.

சமணம் இந்து மதக் கருத்துகளில் உடன்பட்டது என்பது நோக்கத்தக்கது.

புத்தர் 6 ஆண்டுகள் யோகா என்ற உடற்பயிற்சியைச் செய்தார்.

அப்பொழுது அதில் உள்ள இந்துத்துவச் சிந்தனைகளைக் கண்டறிந்த அவர், இந்த யோகாவால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று சொல்லி, அந்த யோகாவை விட்டுவிட்டு வெளியேறிவிட்டார்.

பவுத்தம் இந்து மதத்திற்கு எதிரானது என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

இப்போது யோகாவை கையில் எடுத்து இருக்கிறார் மோடி. உடற்பயிற்சி என்ற பெயரில் மதத்தைத் திணிப்பதற்காக.

*************************

காவி முகமும் தலித் முகமூடியும்

வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தியிருப்பதாகப் பறை சாற்றிக் கொண்டுள்ளது. அவர் ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர் என்பதே உண்மை. தலித் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.

வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், கோலி என்னும் சாதியப் பிரிவைச் சேர்ந்தவர். அந்தப் பிரிவு, அம்மாநிலத்தில் அட்டவணைச் சாதியினர் பிரிவில் வருகிறது. உண்மையில் அவர் ஒரு நெசவாளர் குடும்பத்தவர். தமிழ்நாட்டில் செங்குந்த முதலியார்கள், அடிப்படையில் நெசவாளர்கள்தாம். முதலியார் என்பது சாதிப்பட்டம். அங்கோ அந்த சமூகத்தினர் அட்டவணைச் சாதியினர். மற்றபடி தீண்டப்படாதவர்கள் அல்லர். எஸ்.சி. சான்றிதழ் வைத்துள்ள ஒருவர் அவர். அவ்வளவுதான்.

முற்போக்குச் சிந்தனையாளரான கே.ஆர்.நாராயணனுடன் இவரை ஒரு விதத்திலும் ஒப்பிட முடியாது!

Pin It