நதி கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக்கிடக்க
நிலவை மறைத்து நிற்கும் தாழங்காடு
இருளை முக்காடிட்டு
அரிவாளும் சுரடுமாக நடப்பர்
ஆற்றங்கரைக்கு
பாம்பு தீண்டி இறந்தவளின்
நினைப்பு வந்தாலும்
அல்லாவே என்றபடிதான்
தாழையை இழுத்தறுக்கிறார்
புதர் அசைய அசைய
முள் கீறி நீரில் சிதைந்து கசியும் நிலா
தாழையோடு நிலவை அறுத்துக் கட்டி
தாயைக் காவல் வைத்து
மறைவில் மலம் கழிக்கும் மகள்
இரவுக் காற்றில்
பாம்பென நெளிந்து அசையும் தலையுடன்
வாழ்ந்த கதை இழந்த கதை பேசித்திரும்புகிறார்
சிலர் பறி முடைய
பகலைக் கண்டு அறியாத
மணமாகாப் பெண்கள் நிலவைக் கிழித்து
பாய்பின்னி மஞ்சள் ஒளியை
அறைக்குள் நிரப்பி உறங்குகிறார்
- மாலதிமைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வடநாட்டில் இல்லாத ஆகமம் தமிழ்நாட்டுக்கு ஏன்?
- 10% EWS இட ஒதுக்கீட்டின் பின்னால் இருக்கும் கவர்ச்சிகர அரசியல் நன்மைக்கானதல்ல
- சைமன் ஆணையத்தை இந்தியாவில் வரவேற்றவர்கள் பெரியார், அம்பேத்கர் மட்டுமே!
- மொழிப் பாடத்தின் மீது ஏன் இத்தனை புறக்கணிப்பு?
- திராவிட இயக்கத்தின் இன்றைய திசை வழி
- மீண்டெழும் மாநில சுயாட்சி மாநாட்டின் அறைகூவல்…
- நடிகர் ரஜினிகாந்துக்கு பதில்
- கோடை வெயில்
- ஸ்பெயினும் இந்தியாவும்
- பெரியார் முழக்கம் மார்ச் 16, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
புன்னகை - நவம்பர் 2009
- விவரங்கள்
- மாலதிமைத்ரி
- பிரிவு: கவிதைகள்