நாம் மதிப்பிட்டதைப் போலவே இந்திய அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை மாநிலங்களின் மீது சுமத்துவதற்கு உறுதியான திட்டம் தீட்டி விட்டது. அதிலும் தமிழ் நாட்டை வஞ்சிப்பதில் குறியாக உள்ளது. இந்திய அரசு தான் வசூலிக்கும் வரி வருமானத்தில் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய இந்திய நிதியமைச்சர் நியமித்த இரகுராம்ராஜன் குழு அளித்துள்ள அறிக்கை 26.09.2013 அன்று வெளியாகி உள்ளது.

மறைமுக வரியிலும், நேரடி வரியிலும் இந்திய அரசு திரட்டும் வருவாயில் ஒரு குறிப்பிட்டப் பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பகிர்ந்தளிக் கப்படும் வரியினங்களின் பங்கீட்டு விகித்ததை தீர்மானிக்கவும், மாநிலங்களுக்கு என ஒதுக்கப்படும் பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யவும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது.

இப்போது 13 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் செயலில் உள்ளன 2015 க்குப் பிறகு இந்திய ஒன்றிய மாநில அரசுகளின் நிதிப் பங்கீடு குறித்து தீர்மானிப்பதற்கு கடந்த ஆண்டு .முனைவர் ஒய்.வி.ரெட்டி தலைமையிலான 14 ஆவது நிதி ஆணையம் 2016 அக்டோபரில் தனது முடிவுகளை அரசுக்கு அளிக்க இருக்கிறது.

நிதி ஆணையம் என்பது அரசமைப்புச் சட்ட உறுப்பு 280-ன் படி நிறுவப்படும் அமைப்பாகும். அது இருக்கும் போதே அரசமைப்புச் சட்டத்திற்கு தொடர் பில்லாமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதே செய்தி குறித்து முடிவு செய்ய இன்னொருக் குழுவை நிதியமைச்சர் ப.சிதம்பரம் நியமித்ததேகடும் அதுமீறலாகும்.

நிதியாணையம் அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்டப் பின்பே தனது பரிந்துரையை அளிக்கிறது. ஆனால், நிதியமைச்சர் நியமித்த நிதிப் பங் கீட்டு குழுவுக்கு அப்படி ஒரு சட் டக் கடப்பாடே இல்லை. எனவே, தானடித்த மூப்பாக இப்பரிந் துரையை அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் ஒட்டு மொத்த வரிப்பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதற்கு இரகுராம் ராஜன் குழு அளித்துள்ளப் பரிந்துரையை உற்று நோக்கினால், செயல்திறன் உள்ள மாநிலங்களை தண்டிக்கும் நோக்கில் அது அமைந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக இப்பரிந்துரை தமிழகத்தின் மீது மிகக் கொடுமையான நிதித்தாக்கு தலைத் தொடுக்கிறது.

இது குறித்து கடந்த 2.10.2013 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள விரிவான கடிதத்தில் தமிழக முதலைமைச்சர் செயலலிதா இரகுராம் ராஜன் பரிந்துரை எவ்வாறு தமிழகத்துக்கு எதிராக உள்ளது என்பதை ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறார்.

‘நகர் மயமாக்கலை வளர்ச்சியின் ஓர் அளவுகோளாக குறீப்பிடும் இக் குழு நகர்மயமாக்களோடு இணைந்து உருவாகும் நடைபாதை குடியிருப்பு உள்ளிட்ட முறை சாராக் குடியிருப்புகள் பெருகுவதையும் அது மாநில அரசுக்கு ஏற்படுத்தும் கூடுதல் செலவினங்களையும் கருத்தில் கொள்ள வில்லை. தண்ணீர் என்பது மிக அடிப்படையான வாழ்வாதாரப் பொருள். தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையில் தத்தளிக்கும் மாநிலம் மக்களுக்கு பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்குவது மாநில அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் கணக்கில் கொள்ளப் படவில்லை.

இந்தியாவின் ஒட்டு மொத்த தாழ்த் தப்பட்ட பழங்குடியின மக்களின் தொகையில், தமிழ்நாட்டில் அப் பிரிவு மக்களின் விகிதம் என்ன என்று எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக தமிழ்நாட்டு மக்கள் தொகையில் இப்பிரிவினரின் விகிதம் என்ன என்று கொள்ளப் பட்டிருப்பது அறிவியலுக்கு புறம் பான அளவீடாகும். தொழில் மய மாகும் தமிழகம் அத்துடன் சேர்ந்து காற்று மற்றும் நீர் மாசுபாட்டையும் சந்திக்கிறது, இதில் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையையும் இரகு ராம் ராஜன் குழு கணக்கில் கொள் ளவில்லை. 1971 ஆம் ஆண்டு அடிப்படையாகக் கொள்ளாமல் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்வது குடும்பக்கட்டுப் பாட்டில் முன்னிலை வகிக்கும் தமிழகத்தை வஞ்சிப்பதாகவே அமையும்’ என்று செயலலிதா கூறுவது சரியான காரணங்களாகும்.

ஆனால், இரகுராம் இராஜன் குழு அறிவியலுக்குப் புறம்பான வகையில் நிதிப் பங்கீட்டுக்கான வரை முறைகளை வகுத்துக் கொண்டுள்ளது.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத் தகுதியான ஒட்டுமொத்த வரி நிதியில் அனைத்து மாநிலங்களுக் கும் தலா 8.4 விழுக்காட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் மீதம் உள்ள 91.6 விழுக்காட்டு நிதியை தேவை அதிகமுள்ள மாநிலங்களுக்கு முக்கால் பங்கும் செயல் திறன் உள்ள மாநிலங் களுக்கு கால்பங்கும் என்ற அளவில் பிரித் துக் கொடுக்கலாம் என்றும் இரகுராம் ராஜன் குழு அறிக்கை வரைய றுக்கிறது.

தேவையுள்ள மாநிலங்கள் (nee ded states) என்பதைத் தீர்மானிக்க “வளர்ச்சியின்மை’’ யை (under development) அளவுகோலாக இரகு ராம்ராஜன் குழு வைத்துக் கொள்கிறது. வளர்ச்சி குறித்த 10 முக்கிய அளவுகோல்களைக் கொண்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டை (underdevelopment index) இக்குழு வரையறுத்தது.

1) மாநிலத்தின் தனி நபர் மாத நுகர்வுச் செலவு 2) கல்வி நிலை 3) உடல் நலம் 4) குடும்பத் தில் உள்ள வசதிகள் 5) வருமை விகிதம் 6) பெண் கல்வி 7) மாநில மக்கள் தொகையில் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தொகை விகிதம் 8) நகரமயமாக்கல் விகிதம் 9) மக்களிடையே நிதி ஆதாரப்பகிர்வு 10) சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகிய பத்து கூறுகளில் ஒரு மாநிலம் எந்த அளவுக்கு பின் தங்கியிருக் கிறதோ அந்த அளவுக்கு அதற்கான வளர்சியின்மைக் குறியீடு வழங்கப்படும்.

இந்த வளர்ச்சியின்மைக் குறி யீட்டின் அடிப்படையில் இந்தியா வில் உள்ள மாநிலங்களை மூன்று தொகுதிகளாக இரகுராம் ராஜன் குழு வகைப்படுத்துகிறது.

முற்றிலும் எந்த வளர்ச்சியும் இன்மை என்பதை 1 ஆகக் கொண்டு இந்த குறியீட்டு அளவு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 0.6 க்கு மேல் வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் “மிகவும் வளர்ச் சிக்குறைவான ”மாநிலங்கள் (least developed) என்றும், 0.4 க்கும் 0.6க் கும் இடைப்பட்ட வளர்ச்சியின் மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் “வளர்ச்சிக் குறைவான’’ (least developed) மாநிலங்கள் என்றும் 0.4க் குக் கீழ் வளச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் ஒப்பீட்டள வில் வளர்ந்த (relatively developed) மாநிலங்கள் என்றும் வகைப் படுத் தப்படுகின்றன.

பீகார், மத்தியப் பிரதேசம், இரா சஸ்தான், உத்திரப்பிரதேசம் உள் ளிட்ட பெரும்பாலான வடமாநி லங்கள் மிகவும் வளர்ச்சிக் குறை வான மாநிலங்கள் என்றப் பட்டிய லில் வருகின்றன. இவற்றிக்கு நிதித் தேவை அதிகம் என மதிப்பிடப் பட்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண் டும் என்பதே இரகு ராம்ராஜன் குழுவின் பரிந்துரை.

இவ்வகைப்பாட்டின்படி குச ராத், ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் கூட வளர்ச்சிக்குறை வான மாநிலங்கள் எனப் பட்டியலி டப்பட்டு அவற்றிக்கு தமிழ் நாட்டைவிட கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப் பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு வளர்ச்சி யின்மைக் குறியீட்டில் 0.34 பெற்று ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலம் எனற கிரீடம் சூட்டப்பட்டு நிதி ஒதுக்கிட்டில் கீழ் நிலையில் வைக் கப்படுகிறது.

கல்வி, சாலை வசதி உள்ளிட்ட வற்றில் பிற மாநிலங்களைவிட சொந்த முயற்சியில் முன்னேற்றம் கண்டதால் தமிழ் நாட்டிற்கு இரகுராம் ராஜன் குழு அளிக்கிற பரிசு இது.

வரி வசூலில் தமிழ்நாடு இந்தி யாவின் பெரும்பாலான பிற மாநி லங்களை விட திறன் பெற்ற மாநில மாகும். இங்கேயும் வரி ஏய்ப்பவர் கள் உண்டு என்றாலும் ஒப்பீட்டள வில் குறைவு.

தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகக் கூறப்படும் குசராத், மகாராட்டிராவை விட தமிழ் நாட்டில் வரி வசூல் விகிதம் அதிக மாகும். 2012-2013 ஆம் நிதியாண் டில் தமிழ் நாட்டிலிருந்து இந்திய அரசு அள்ளிச்சென்ற வரி வருவாய் ஏறத்தாழ 85 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது இந்திய அரசின் ஒட்டு மொத்த வரி வசூலில் 14.12 விழுக் காடு ஆகும்.

ஆனால் இந்திய அரசு கடந்த நிதி ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக் கிய வரிப் பங்கீடு மற்றும் மானியங் களின் மொத்த அளவு ஏறத் தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இந்திய அரசு திரட்டும் மொத்த நிதித்தொகையில் தமிழகத்திற்கு வழங்குவது 4. 18 விழுக்காடே ஆகும். அதாவது 14. 12 விழுக்காடு எடுத்துக் கொண்டு வரிப்பங்காக 4.18 மட்டுமே வழங்குகிறது.

13 ஆவது நிதி ஆணையம் இந்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிடு செய்யும் மொத்த நிதித் தொகையில் தமிழ்நாட்டுக்கு 5.01 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. திட்டக் குழு 4. 46 விழுக்காடு பகிர்ந்தளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால் இந்திய அரசு தமிழகத் திற்கு அளித்ததோ 4. 18 விழுக்காடு தொகை.

இதையும் ஏறத்தாழ பாதியாகக் குறைத்து 2.51 விழுக்காடு தொகை யை தமிழ்நாட்டிற்குக் கொடுத் தால் போதும் என இரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஒப்பீட்டளவில் வளர்ச்சிய டைந்த மாநிலங்கள் என்றப் பட்டி யலில் தமிழ்நாட்டை விட முன்னே உள்ள கேரளாவுக்கு செய்த நிதி ஒதுக்கீட்டையும் விட இது குறை வானது. இதற்கு முன்னர் மாநிலங் களுக்கு இடையில் நிதிப் பகிர்வு வழங்குவதற்காக உருவாக்கபட்ட காட்கில் வழிமுறை (பார்முலா), காட்கில்- முகர்ஜி வழிமுறை ஆகிய அனைத்தையும் விட இரகுராம் ராஜன் குழு வழிமுறை தமிழகத் தைப் பெரிதும் வஞ்சிக்கக் கூடியது.

இந்திய அரசு தமிழ்நாட்டி லிருந்து அள்ளிச்செல்லும் வரி வருமானத்தில் பாதியையாவது தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்வதற்கு பதிலாக இருக்கும் குறைவான ஒதுக்கீட்டையும் இன்னும் பாதி யாகக் குறைப்பது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கில் இன் னும் ஒரு கொடிய நடவடிக்கையாகும்.

பீகார் மாநிலம் தங்கள் மாநி லத்தை மிகவும் பின் தங்கிய மாநில மாக ஏற்று கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனக் கோரியதை அடுத்தே இக் குழு அமைக்கப் பட் டதாக இதன் நோக்க அறிக்கைக் கூறுகிறது. அது உண்மையானால் நடுவண் அரசு தன்னுடைய நிதி யிலிருந்து சிறப்பு நிதி ஒதுக்கீடு பீகாருக்கு வழங்க வேண்டுமே அல்லாது தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வழங்கும் நிதியிலி ருந்து எடுத்து வழங்கக் கூடாது.

தவிரவும் தொழில் வளர்ச்சி , கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் ஒப் பீட்டளவில் முன்னே நிற்கும் தமிழ கத்தில் பீகார், ஜார்கண்ட், ஒரிசா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து அலை அலையாகக் குடியே ரும் வெளியாரால் ஏற்படும் கூடுதல் சுமை என்பது கணக்கில் கொள் ளப்படவில்லை. பின் தங்கிய மாநி லங்களின் பின் தங்கியத் தன்மையை இதன் மூலம் தமிழகமும் பகிர்ந்து கொள்ளு கின்றது. இதற்கான கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்கின்றது.

இந்த சிக்கலை 14 ஆம் நிதி ஆணையம் தனது விசாரணை வரம்பில் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இரகுராம் ராஜன் குழு இப்படி ஒரு பிரச்சினை இருப்பதையே கண்டுகொள்ளவில்லை.

ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நிறுவப் பட்டுள்ள திட்டக் குழு மாநிலங் களை ஆதிக்கம் செய்யும் இந்திய அரசின் ஒரு உறுப்பாக செயல்படு கிறது. அதுவும் இப்போதுள்ள திட்டக் குழு தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா இந்தியப் பேரரசர் போலவே அதிகாரம் செய்கிறார். திட்டக் குழு ஒதுக்கீடு பற்றி விவாதிப்பதற்கு இந்திய வளர்ச்சி மன்றமாவது இருக்கிறது. அதில் மாநில முதலைமைச்சர்தன் தரப்பு நியாயங்களை வலியுறுத்த முடியும்.

ஆனால், இரகுராம் ராஜன் குழு பரிந்துரை மீது மாநில அரசுகள் கருத்துக் கூறி மாற்றங்கள் ஏற்படுத் துவதற்கு வழியேது மில்லை. எல்லா வகையிலும் இரகுராம் ராஜன் குழு பரிந்துரை தமிழகத் திற்கு எதிரானது. இதனை இந்திய அரசு ஏற்கக் கூடாது. அதன் பரிந்து ரைகளை எந்த வடிவிலும் செயல் படுத்தக் கூடாது.

இந்திய அரசு தனது நயவஞ்ச கத்தை தொடருமேயானால் தமிழ கத்திலிருந்து இந்திய அரசு வரி வசூல் செய்வதை தடுப்போம் என தமிழக அரசும் மக்களும் களம் இறங்கவேண்டிய நேரமிது.