18 ஆம் நூற்றாண்டு – யார் கைகளில் கடற்ப்படை இருந்ததோ அவர்களுக்குத் தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது.

19 ஆம் நூற்றாண்டு – விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள் தான் உலகை தீர்மாணிக்கும் சக்தியாக இருந்தன.

ஆனால் 20 ஆம் நூற்றாண்டு – “உலக ஊடகங்களை எவர் தனக்கு கட்டுபட்டதாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும்” என்கிறார் முன்னாள் மலேசியா பிரதமர் மகாதீர் அவர்கள்.

இன்று உலகளாவிய ஊடகங்கள் தான் ஆதிக்க சக்தி எது என தீர்மானிக்கிறது. அமெரிக்கா மற்ற நாடுகளின் நிகழ்வுகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்றால், உலகளாவிய ஊடகங்கள் அமெரிக்காவில் இருந்து உலகை இயக்குவதால் தான் சாத்தியமானது.

மனிதனின் குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், நாகரிகங்கள் எல்லாமே புற சிந்தனைகளின் கருத்துத் திணிப்புகளால் உருவாக்கப்படுகிறது. தொடர் பதிவுகளின் மூலம் உருவாக்கப்படும் புறக்கருத்து திணிப்புகளே பிறகு சுய சிந்தனைகளாகவும், சித்தாந்தங்களாகவும் உருமாற்றம் அடைகிறது. 

பொதுவாக ஒளி, ஒலி மற்றும் எழுத்து- ஊடகங்களின் தொடர் பிரச்சாரங்களின் பாதிப்புகள் காலங்கள் கடந்தும் நம் சமுக வாழ்வியலில் பலவித நேர், எதிர் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மனித சமுகத்தின் எல்லா சமுக மாற்றங்களுக்குப் பின்னாலும் ஊடகங்களின் பெரும் பங்களிப்பு இருக்கிறது. இந்த ஊடகங்கள் தனக்குள் உள்வாங்கி மென்று துப்பும் கருத்தாக்கங்கள்தான் மனித சமுகத்தை தீர்மானிக்கின்றது.

எல்லைகள் தாண்டி, வக்கிரங்களை விதைத்து, உயிர்கள் பறித்து, நாடு பிடித்து வளங்கள் சுரண்டிய காலங்கள் எல்லாம் வரலாற்று தடயங்களாகிவிட்டது. எல்லா நாடுகளுமே அணுகுண்டினை முழுங்கி விட்டு தொட்டால் வெடித்து விடுவேன் என்ற சராசரி மிரட்டலுடன் இருக்கும் இந்த காலகட்டத்தில் உலகம் தழுவிய பெரும் போர்கள் என்பது சாத்தியம் இல்லை. எல்லை தாண்டும் பயங்கரங்கள் இல்லை, உலகை அழிக்கும் பேரழிவு ஆயுதங்களுக்கு வேலை இல்லை, இரத்தமும் இல்லை, சத்தமும் இல்லை. ஆனாலும் உலகத்தை தனதாக்கி கொள்ளும் பயங்கரவாதம் ஊடகங்களின் துணையுடன் நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை மனித இனம் சந்திக்காத பேரழிவு ஆயுதங்கள் என்றால் அது இன்றைய ஊடகங்கள் தான் (என். எஸ் கிருஷ்னன் அவர்கள் இருந்திருந்தால் உலகத்திலேயே கொடிய மிருகம் ”நாக்கு” என்பதை மாற்றி ”ஊடகம்” தான் என்றிருப்பார்)

ஊடகத்தின் ஆக்கமும் அழிவும் எடுத்தவன் கையைப் பொருத்து அமைகிறது. உலக ஊடகங்கள் அமெரிக்க சியோனிஷ்டுகள் கையில் இருப்பதால் 20ஆம் நூற்றாண்டும், 21ஆம் நூற்றாண்டும் அமெரிக்க- யூத சியோனிஷ்டுகளின் இரும்புப் பிடிக்குள் உள்ளது.

இந்த நூற்றாண்டில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல்கள் எல்லாம் தீவிரவாதக் குரலாக மாற்றப்படுகிறது. முதலாளித்துவத்தின் மலக்குளியலை நாட்டின் வளர்ச்சிக்கான சந்தன குளியலின் குறியீட்டு அடையாளமாக காட்டப்படுகிறது. இவையெல்லாம் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ ஊடகங்களின் மாயக்கண்ணாடி விளையாட்டில் சாத்தியமாக்கப்படுகிறது.

சியோனிஸம் என்பது ஒரு யூதப் பரவலாக்க இயக்கம்; உலகை யூதர்களின் நிழலில் இயக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருப்பவர்கள். இஸ்ரேல் என்று தான் கையகப்படுத்திய நிலப்பரப்புடன் நின்று விடாமல் அமெரிக்க அய்ரோப்பா கண்டங்களை தங்களது ஆட்சி அதிகாரங்கள் மூலம் தன் வசமாக்கி வைத்திருக்கிறார்கள். மேலும் உலகம் முழுவதும் ஒரே ஏகாதிபத்திய யூத ஆட்சி வரவேண்டும் என்று திட்டத்துடன் பூமியின் எல்லா இடங்களிலும் அவர்களின் எல்லைகளை விரித்து வருகிறார்கள்.

”Zionism is more accurately described as a strategy for targeting thought and emotion as a means to influence behavior”

சியோனிஸம் என்பதை மிகவும் துல்லியமாக விளக்கினால் அது மனிதர்களின் எண்ண‌ங்களையும் உணர்ச்சிகளையும் குறிவைத்து செயல்படும் வேலைத் திட்டங்களை கொண்டதாகும். அது ஒருவனின் இயல்பான வாழ்க்கைக்குள் ஊடுறுவி செயல்படும்.

மனிதனின் எண்ண‌ங்களையும், உணர்ச்சிகளையும் தனது திட்டமிட்ட கருத்தாக்க ஊடுருவல்கள் மூலம் தாக்குவதால், சுய சிந்தனைத் திறனை இழந்த மனித இனமாக மாற்ற முயற்சிகள் நடந்தவண்ணம் உள்ளது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நாடுகளை பயங்கரவாதத்தின் கோர முகமாக காட்டும் 'புஸ்'ஸின் கருத்தாக்கம் ஊடக எந்திரங்களில் செறிவூட்டப்பட்டுள்ளது - இது ஊடகத் தீவிரவாதமாகும்.

ஊடகங்கள் காட்டும் நிகழ்வுகள் என்பது எதுவும் தானாக நடப்பது இல்லை; அது செய்திகளாக உருவாக்கப்படுகிறது. தனக்கு சாதகமான அல்லது எதிரியென தீர்மானிக்கபட்டவர்களின் அழிவுக்கான வேலைத் திட்டமாகவும் சியோனிஸ ஏகாதிபத்திய கூட்டமைப்புகள் அதை பயன்படுத்திக் கொள்கிறது.

முதலாளித்துவத்தின் பொருளாதாரப் பேரழிவினால் மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களின் குரல்களை பிரதிபலிக்க வேண்டிய ஊடகங்கள் சொந்த நாட்டிலேயே அவர்களின் வாழ்வாதார செய்திகளை புறக்கணிப்பதும், அவர்களின் வாழ்வுரிமை அழிக்கப்பட்டு வருவதை வெளி உலகிற்குத் தெரியாமல் இருட்டடிப்பு செய்வதும் நடந்து வருகிறது.

ஆயிரக்கணக்கான வேலையிழப்புகளையும், சொத்துகள் பறிக்கப்படுவதையும், விரக்தியினால் ஏற்படும் பல ஆயிரம் பேரின் தற்கொலைகள் என அமெரிக்காவின் பாதாளத்தினை நோக்கிய பயண‌த்தை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து வருவதும் அமெரிக்காவை தொடர்ந்து ஒரு வல்லரசு நாடு என்று காட்டுவதும் கூட ஊடகத் தீவிரவாதம் தான். ஆனாலும் ஊடகங்கள் ஆப்கானையும், ஈரானையும், ஈராக்கையும், வட கொரியாவையும் உலக அச்சுறுத்தலாக்குவதன் மூலம் அமெரிக்காவின் தேசபக்தி உருவாக்கப்படுகிறது. சொந்த நாட்டு மக்களின் பிரச்சனைகள் குழி தோண்டி புதைக்கப்படுகிறது.

தனது தொடர் பிரச்சாரங்களால் கம்யூனிசத்தினை துண்டாடிய பின் இன்றைய முதல் எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பது இசுலாமியர்கள். உலகளாவிய இசுலாமிய எதிர்ப்பு என்பதை மேலைநாட்டினர் தங்களின் முக்கிய செயல்திட்டமாக கொண்டுள்ளனர்.

இசுலாமிய எதிர்ப்பு என்பது தீவிரவாத எதிர்ப்பாக மாற்றப்பட்டு அமெரிக்க சியோனிச ஏகாதிபத்திய பேரழிவு ஊடக கூட்டணியில் அந்தந்த நாட்டின் ஃபாஸிச சார்பாளர்களும் சேர்ந்து கொண்டு பெரும் அச்ச உணர்வை மக்கள் மனங்களில் ஏற்படுத்துகின்றனர்.

இந்த எல்லை தாண்டிய ஊடகத் தீவிரவாத்த்தில் உள்ளூர் ஊடகங்களும் இயல்பாகவே கை கோர்க்கும் நிலை உருவாகியுள்ளது. அனிச்சையாக நாம் பார்க்கும் ஒரு உருவம் தாடியுடனும் தொப்பியுடனும் இருந்தால் போதும் அவர் பயங்கரவாதியாகத்தான் இருப்பார் என்ற எண்ணத்தை சாதாரண‌ மக்களிடம் தோன்ற வைப்பதுதான் இந்த உலக ஊடக தீவிரவாதக் கூட்டனியின் நோக்கமாக இருக்கிறது. இந்த கொடூர பண்பாட்டு தாக்குதலினால் இசுலாமியர்கள் தங்கள‌து சொந்த அடையாளத்தை மறைத்து அச்ச உணர்வுடன் வாழும் சூழல் உலகம் முழுதும் உள்ளது.

ஊடகத்தீவிரவாத்தின் ஊற்றுக்கண்கள்

கிரஹாம்: ஊடகங்களின் மீதான யூதர்களின் ஆளுமையை நாம் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் அது அமெரிக்காவை அழிவிற்கு இழுத்துச் செல்லும்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: நீங்கள் அதை நம்புகிறீர்களா?

கிரஹாம்: ஆம் நான் அதை உறுதியாக நம்புகிறேன்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: ஆம். அதை நான் ஒரு போதும் சொல்ல முடியாது, ஆனால் நானும் அதை நம்புகிறேன்.

‍ மதத் தலைவர் பில்லி கிரஹாம்(Billy Graham) மற்றும் அமெரிக்க முன்னால் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் (Richard Nixon) இருவரின் பேச்சின் ஒலி நாடாப் பதிவு இது.

இன்றைக்கு இந்த எச்சரிக்கை எல்லையைக் கடந்து அமெரிக்கா தனது முழு ஆழுமையையும் யூதர்களின் இரும்பு பிடிக்குள் இழந்து சியோனிஷ்ட்களின் அமெரிக்காவாகி விட்டது.

உலகின் தலைசிறந்த மின்னணு செய்தி ஊடகங்களும், காகித செய்தி ஊடகங்களும் மற்றும் உலக சினிமாக்களின் தலைநகரமான ஹாலிவுட்டும் அமெரிக்க சியோனிஷ்டுகளால் நிர்வாகிக்கப்படுகிறது. திரைப்படங்களின் மூலமாகவும், செய்தி நிறுவனங்களின் மூலமாகவும் இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துப் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றது.

ஹாலிவுட்டின் தலைசிறந்த திரைப்பட நிறுவனமான வால்ட் டிஸ்னி(Walt Disney Television ) மற்றும் பல செய்தி, விளையாட்டு தொலைக்காட்சிகள், திரைப்பட நிறுவனங்களையும் நிர்வகிப்பது மிச்சேல் ஈஸ்னர் (Michael Eisner) என்ற சியோனிஷ்ட் யூதர் தான். (Touch stone television ,Buena Vista television,ABC, ESPN, A&E, Lifetime, Miramax Films, Caravan Pictyures, Touchstone Pictures) குழந்தைகளுக்கான கார்ட்டூன்களிலும், கேளிக்கைப் படங்களிலும் சியோனிஸ கருத்துத் திணிப்புகளை உருவாக்குவதோடு இல்லாமல் இப்பொழுது அதி நவீன கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் graphic sex and gratuitous violence video games. , 3D virtual world படங்களையும், மின்னணு விளையாட்டு ஊடகங்களினாலும் இளைஞர்களிடயே வன்முறையையும், கொடிய பாலுணர்வுக் கிளர்சிகளையும் தூண்டி நிரந்த மன போதையாளர்களாய் ஆக்கிவிடுகிறது. இவர்களின் மிகப் பெரிய நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளன‌.

பல முன்னணி ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களின் அதிபரான ஜொய் ரோத் (Joe Roth) போன்றவர்களும், ஜெரால்ட் எம். லெவின் (Gerald M. Levin CEO ) போன்றவர்களும் அமெரிக்காவின் தலைசிறந்த செய்தி நிறுவனங்களையும் பல முன்னனி திரைப்பட குழுமங்களையும் நிறுவனங்களையும் நிர்வகிக்கின்றார்,(TV Networks, Movie Companies & Publishers,HBO, TNT, TBS, CNN, TCM, Warner Brothers, Time Inc. ,Time warner,Warner Bros. Records) . சன்மர் ரெட்ச்டோன் (Sumner redstone) இந்த யூத சியோனிஷ்டின் நிறுவனங்கள்,CBS, Paramount, MTV, Nickelodeon, Showtime, Country Music Television, Nashville Network Cable, Infinity Broadcasting (radio), Pocket Books, Free Press,Viacom ,Inc Prentice Hall,Simon&Schuster. ரொனால்ட் பெர்ல்மேன்(Ronald Perelman ) அமெரிக்காவின் அமைப்பு சாரா தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் ஆவார். இவர் New world entertainment என்ற முன்னணி ஊடக நிறுவனத்தை இயக்குகிறார்.

ஹாலிவுட்டின் முன்னணி திரைப்பட இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் (Steven Spielberg) ஒரு சீயோனிஸ்ட் யூதர் ஆவார். மேலும் David Geffen, Jeffrey Katzenberg இவர்கள் எல்லோரும் திரைப்பட துறையை சார்ந்த யூதர்கள் ஆவார்கள். பிரமாண்டங்களுக்கு பெயர் போன இவர்களின் திரைப்படங்கள் முழுவதும் யூத சியோனிஸக் கருத்துக்களை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது. உலகின் நான்காவது பெரிய செய்தி ஊடக நிறுவன குழுமம் எட்ஜர் பிரான்மன்(Edgar Bronfman ) என்ற யூதரின் ஆளுமையில் உள்ளது.

தலைசிறந்த அமெரிக்கப் பத்திரிக்கையான வால் ஸ்டீரிட் ஜோர்னல்(Wall street Journal), பீட்டர் ஆர் கன் (Peter R Kann) என்பவராலும் உலகின் முன்னணி ஊடகமான CNN journalist Wolf Blitzer நடத்தப்படுகிறது. மேலும் US News & World report அமெரிக்க ஊடகமானது யூதரான Mortimer B. Zucherman என்பவரால் நட்த்தப்படுகிறது.

அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை The New York post -Peter Kalikow என்பவரால் நட்த்தப்படுகிறது. இசுலாமியர்களுக்கு எதிரான நிகழ்ச்சிகளை நடத்தும் சிறந்த ரேடியோ நிகழ்ச்சியாளர் ஹோவார் ஸ்டெம். இவரின் நிகழ்சிகள் அமெரிக்காவில் மிகப் பிரபலமானது.

ரோபெர்ட் முர்டஷ்க் (Robert Murdoch-) இந்த யூதர் உலகின் 5வது பெரிய ஊடக குழுமங்களின் உரிமையாளர் (Murdoch's News Corporation,Fox Television Network, 20th Century Fox Films, Fox 2000, New York Post, TV Guide. )

அமெரிக்கன் ஃஃபில்ம் மேகசின் கணக்கெடுப்பின்படி உலகின் தலைசிறந்த பத்து திரைப்பட நிறுவனங்களில் முதல் 8 திரைப்பட நிறுவனங்கள் யூதர்களுக்குச் சொந்தமானது. 

(மேலும் பல யூத கிளை நிறுவனங்கள்-Warner Bros. , Barry Meyer, CNN/US, Walter Isaacson; Walt Disney Studies, Caravan Pictures,Miramax Films, ESPN CBS,; New World Entertainment; Fox Group; Fox Entertainment. New York Times and the Boston Globe, Arthur Sulzberger, publisher; Wall Street Journal, Kann; US World and News Report, The Atlantic, and the NY Daily News, US News and World Report,Comcast, the largest TV cable network in America; Sony of America; Verizon, the largest American wireless phone company; Corporation of Public Broadcasting, Hollywood Pictures, , Bonnier Group )

பத்து ஆண்டுகளில் வெளிவந்த 1000 ஹாலிவுட் திரைப்படங்களில் 90% வீதம் இசுலாமியர்களையும் கம்யூனிஸ்ட்களையும் தீவிரவாதிகளாகவும் அவர்களின் நாடுகளை பயங்கரவாதங்களின் உற்பத்தி இடமாகவும் காட்டியுள்ளன. இந்த திரைப்பட ஊடகங்கள் கொடூரமான எண்ண அலைகளை மக்களிடம் உண்டு பண்ணியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான மற்றும் கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை ஊடகங்களின் மூலம் பரப்புகிறார்கள் அமெரிக்க சியோனிஷ பேரழிவாளர்கள்.

மேலும் அமெரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனங்களான ஏ. பி. சி, சிபிஎஸ் மற்றும் என்பிசி (American Broadcasting Companies (ABC), Columbia Broadcasting System (CBS), and National Broadcasting Company (NBC) போன்ற நிறுவனங்கள் முழுமையாக யூத சியோனிஷ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

உலகம் முழுவதும் இயங்கும் பிரபலமான முதல் மூன்று பத்திரிக்கைகள் The New York Times, the Wall Street Journal, and the Washington Post இங்கு தான் உலக செய்திகள் கட்டமைக்கப்படுகிறது; உருவாக்கப்பட்ட செய்திகளை உலகம் முழுவதும் பரப்புகின்றன. மற்ற எல்லா பத்திரிக்கைகளுமே இதே செய்திகளை வேறு வடிவங்களில் அப்படியே பிரசுரம் செய்கிறது. அமெரிக்காவின் எல்லா பிரபல கேபிள் நிறுவனங்களும் யூதர்களுடையது.

மேலும் தலைசிறந்த எல்லா பதிப்பகங்களும் யூதர்களுடையது. ( Random House. . . Simon & Schuster , and Time Inc. Book Co. ) இதில் வெஸ்டன் பப்ளிஸிங் Western Publishing நிறுவனம் தான் உலகில் குழந்தைகளுக்கான தலைசிறந்த புத்தக பதிப்பாளர்கள். இந்த யூதப் பதிப்பாளர்கள் இசுலாமியர்களையும் அவர்களின் பண்பாடுகளையும் மிகவும் கேவலமான வடிவில் சித்தரிக்கிறார்கள். மேலும் சியோனிஸ கருத்துத் திணிப்புகளையும், ஃபாசிச சிந்தனைகளையும் தேசபக்தி போன்ற கருத்து மாற்றங்களுடன் சிறு குழந்தைகளின் மனங்களில் நச்சு விதைகள்களாக விதைக்கிறார்கள்.

மேலும் அமெரிக்காவிலுள்ள‌ ஐரோப்பிய நாடுகளின் பல பத்திரிக்கையாளர்கள், நிருபர்கள் எல்லோரும் சியோனிஷ்ட் சிந்தனை உள்ளவர்கள். இவர்கள் கொடுக்கும் எல்லா செய்திகளும் சியோனிஸத்தின் கருத்தாக்க‌ங்களை மட்டுமே பிரதிபலிக்கும்.

ஊடகங்களில் மிகச்சிறந்த ஆறு சியோனிஸ ஊடகங்கள் தான் இன்று உலகின் ஒட்டுமொத்த (96% விழுக்காடு) உலக ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இதில் நமக்கு வரும் எல்லா செய்திகளுமே யூத சியோனிஷ்டுகள் மென்று தின்று கழித்த எச்சங்கள் தான்.

இஸ்லாமிய தலைமைத்துவம் தகர்த்தப்பட்ட பிறகு அதன் வளர்ச்சியை முழுமையாய் ஒடுக்குவதற்கும், இஸ்லாமிய நாடுகளிடையே உறவுகளைத் துண்டிப்பதற்கும் ஊடகத்தின் துணையுடன் இஸ்லாமியர்களை சமுக நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தி இன, கலாச்சார அழிப்பு வேலைகளை செய்து வருகிறது. செய்தி ஊடகங்கள் மட்டும் இல்லாமல், திரைப்படங்கள், கார்ட்டுன் சித்திரங்கள், விளையாட்டு ஊடகங்கள் எல்லாவற்றிலுமே இசுலாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், பண்பாடற்ற பயங்கரவாதிகள் போலவும், கல்வியறிவு இல்லாதவர்கள், பெண்ண‌டிமை வலியுறுத்தும் பிற்போக்குவாதிகள் என்றும் தொடர் கருத்துத் திணிப்புகளை நடத்தி வருகிறது. அது என்னவோ தெரியவில்லை, இந்த ஊடகங்களில் காட்டப்படும் எல்லா இசுலாமிய தீவிரவாதிகளும் ஒருவனின் கழுத்தை அறுக்கும்போது இசுலாமிய வேதங்களை ஓதிக் கொண்டும், குரானை கையில் ஏந்துவதற்கும் தவறுவதே இல்லை. அதே போல் எந்த குண்டுவெடிப்பாக இருந்தாலும் தீயினால் சிறிதும் பாதிக்கப்படாத குரான் பிரதிகள் தவறாமல் இருக்கும். இவையெல்லாம் இசுலாமிய தீவிரவாதிகளின் இருப்பை உறுதி செய்யும். தாய்நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்க கூட்டுப்படைகளை நோக்கி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தாமல் தன் சொந்த நாட்டினர் மேல் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகளை நடத்துவது தான் புரியாத விசயமாகும். வெடித்த குண்டுகள் பாதிக்குப் பாதி கூட அமெரிக்கர்களை மட்டும் கொல்லாதது தொழில் நுட்பப் புதிராக இருக்கிறது.

ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் நாள் ஒன்றுக்கு கணிசமான பிணக்குவியல்கள் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு தேவைப்படுகிறது. அவைதான் அமெரிக்கா நேச நாடுகளின் இருப்பை நீட்டிக்கும். ஈராக், ஆஃப்கான் மட்டும் அல்ல அழிக்கப்பட வேண்டிய நாடுகளின் எண்ணிக்கை தொடர்கிறது.

ஏகாதிபத்திய ஊடகங்களின் தொடர் தாக்குதல்களால் இசுலாமியர்கள் மட்டும் என்றில்லை, உள்நாட்டு அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட பழங்குடிமக்களும், ஆதிக்கசக்திகளால் நிலங்களை இழந்து நிற்கும் மக்களும், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு உள்ளான நாடுகளும் தொடர்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன‌.

ஊடகங்கள் உருவாக்கும் நாகரீக மோகத்தால் இன்று பரவலாக உலக நாடுகள் தனது சுய அடையாளங்களை இழந்து வருகின்றன‌. ஊடகங்கள் விதைத்தவற்றில் நாம் இழந்தது தான் அதிகமாக உள்ளது. மக்களின் போராட்ட உணர்வுகள் மழுங்கடிப்பட்டுள்ளன; உலகமயமாதலில் ஒவ்வொரு குடிமகனையும் நேரடியாக பங்குபெற செய்துள்ளது; அதன் பாதிப்பால் உலக பொருளாதார பாதிப்புகள் ஒவ்வொரு மனிதனின் முதுகெழும்பையும் உடைத்துவிடுகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தை பெருக்கியும் மறைமுகமாக மக்களின் வளத்தையும் அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் சூழல்களையும் உருவாக்கியுள்ளது.

நம் நிலங்களை இழந்து வருகிறோம்; கலாச்சாரத்தைத் தொழைத்து விட்டோம்; மொத்தத்தில் நாம் சிந்திப்பது நமது சிந்தனைகள் அல்ல - அது எங்கிருந்தோ உருவாக்கப்பட்டது. நாம் மூளைச்சாவு வந்தவர்களாகத்தான் அலைந்துகொண்டுள்ளோம்.

இனம் காக்க, மீண்டும் சமுக உரிமை பெற, நாம் நாமாக வாழ இந்த நூற்றாண்டின் சர்வ வல்லமை படைத்த ஊடக ஆயுதத்தை நாம் கையாள வேண்டும்.

தனதாக்கிக் கொள்ளும் ஊடகப் போராட்டமும் ஒரு சுதந்திரப் போராட்டம் தான்.

- இராசகம்பீரத்தான் மால்கம் X (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

+91 97909 29735