மசால் வடை
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 8
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பற்கள்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி சிறிது
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும். பின்பு நீரை வடித்து உப்பு சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை மெல்லிய நீள வில்லைகளாகவும், பச்சைமிளகாயைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இஞ்சி, பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொண்டு. சோம்பைத் தூள் செய்ய வேண்டும்.
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்துமல்லி, கருவேப்பிலையை மாவில் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
மாவை எலுமிச்சங்காய் அளவு சிறு சிறு உருண்டைகளாகச் செய்துகொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய்யை விட்டு சுட வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாய் எடுத்து வாணலியில் விட வேண்டும்.
ஒரு பக்கம் சிவந்து வந்த பின் திருப்பி விட்டு மறுபக்கமும் சிவந்து வந்ததும் எடுத்தால் மசால் வடை சுடச் சுட தயார். |