Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             பாரத தேசம்
Bharathi
[ராகம் - புன்னாகவராளி]

        பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

        சரணங்கள்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
       மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
       பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.        (பாரத) 1

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
       சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
       மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.        (பாரத) 2

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
       வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
       எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.        (பாரத) 3

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
       மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
       நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.        (பாரத) 4

சிந்து நதியின்மிசை நிலவினி லே
       சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
       தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.        (பாரத) 5

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
       காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
       சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.        (பாரத) 6

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
       காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
       நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.        (பாரத) 7

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
       பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
       காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.        (பாரத) 8

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
       ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
       உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.        (பாரத) 9

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
       கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
       ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.        (பாரத) 10

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
       வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
       சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.        (பாரத) 11

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
       கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
       உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.        (பாரத) 12


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
       தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
       நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.        (பாரத ) 13


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com