 |
கவிதை
தூக்கம் மரணித்த இரவொன்றில்....
பரட்டை
விரிந்திருந்த போர்வையினுள்
பொதிக்கப்பட்ட நட்சத்திரங்களுக்கு
முன்னால் மேய்ந்துகொண்டிருக்கும்
மேகங்களில் ஒளிந்துகொண்டு தலைதூக்கும்
நிலவினை ரசித்தபடியோ அல்லது
வெறித்தபடியோ கிடக்கும் என்படுக்கை.
நடுநிசிதாண்டி தெருவோரத்தில்
அழுதுகொண்டிருக்கும் நாயின் குரலுக்கான
காரணத்தை யோசித்தபடியோ அல்லது
திட்டியபடியோ கிடக்கும் என் தனிமை..
அலுவலுக்கான பேருந்துபயணத்தில்
மூதாட்டி ஒருத்தியின் இயலாமையை
தோற்கடித்து பெறப்பட்ட இருக்கையிலிருந்து
நான் தொடுத்த அழைப்பை அவளாவது
துண்டிக்காமல் இருந்திருக்கலாம்..
அந்தக்கிழவியின் இயலாமையை
இருக்கையில் அமரவைத்தாவது
என் துயிலுக்கு உயிர்தந்திருக்கலாம்...
- பரட்டை ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|