நம்பிக்கை வைத்து
நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள்
நாம் நடந்தால் தேர் நடக்கும்
இன்றேல் வெயில் மழையில் கிடக்கும்
- திசை குழம்பித் திகைத்து நிற்கும் இன்றைய தமிழ் வாழ்வின் திசைவழியைத் தீர்மானிக்கும் தெளிவும் வெளிச்சமும் கொண்ட மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநில மாநாடு தியாகத்தால் சுடரும் நாகை மண்ணில் கம்பீரமாக நடைபெற்றது. பிப்ரவரி 22 முதல் 25 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் பங்கேற்றுத் தமிழகம் இன்று சந்திக்கும் சகல...









