பூக்களின் உலகம் அழகானது. பட்டாம் பூச்சிகளின் அழகு விந்தையானது. பறவைகளும் கவர்ச்சியானவை. இந்த வரிசையில் மீன்களின் உலகமும் அலாதியானது. பவளப்புற்றுப் பகுதிகளில் கடற்பாசிகள் அழகு கூட்டுகின்றன. பலவண்ண மீன்கள் அணியணியாய் பவளப்புற்றுகளினூடே துடுப்பசைத்து நீந்திச் செல்கையில் உலகின் வனப்புமிகுந்த ரோஜாத் தோட்டம் நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கடல் சூழல் அற்புதமானது. மீன்களின் உலகத்தில் சிறுபயணம் போகலாம் வாருங்கள்.
பரிணாமத்தின்போது இயற்கை மும்முறையாவது இறக்கைகளை பிறப்பித்திருக்கிறது...








