இந்திய அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட, உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்த ஐந்து மாநிலங்களிலும் உத்திரப்பிரதேசத் தேர்தல் மட்டும் அதி முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்பட்டது.
காரணம், அங்கு ஆட்சியைப் பிடிக்கப் போவது முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியா அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியா என்பதல்ல பிரச்சினை. மாறாக, ஆட்சியை நாங்கள் தான் அமைப்போம் என்று 403 தொகுதிகளில்...








