ஈழப்போராட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வட கிழக்குப் பகுதியில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் சூழலில் தமிழ் சிறு பத்திரிக்கைகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளை கடும் விமர்சனம் செய்து ஏராளமான கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த கட்டுரையாளர்கள் தங்களை மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயகவாதிகள் என இக்கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டும் வருகின்றனர். விடுதலைப்புலிகளை விமர்சனம் செய்வதில் கட்டுரையாளர்களின் அரசியல், கருத்து சுதந்திரத்தை யாரும் தடுத்து விட முடியாது. ஆனால், இக்கட்டுரையாளர்கள் தங்களின் கட்டுரைகளில், போரில் ஈடுபடாத ஈழத்தமிழ் மக்கள் வதை முகாம்களில் துன்பப்படுவதையோ, இம்மக்களை பட்டினியிட்டும் நோய் மூலமும், குழந்தை பெற்றுக்கொள்ளும் சூழல்களை மறுத்தும் இராஜபக்சே அரசு தமிழ் இன அழித்தொழிப்பு மேற்கொள்வதைப் பற்றியோ, அரச வன்முறை குறித்தோ சிறுவிவாதத்தைக்கூட எழுப்புவதில்லை.
ஈழத்தமிழர்களின் இன்றைய துயரங்களுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற தனி மனிதனின் வன்மமே காரணம் எனும் தொனியில் எழுதப்படும் பல ‘அறிவு ஜீவிகளின்’ கட்டுரைகள் ‘தேசிய இன விடுதலைப் போராட்டம் தவறானது’ என்ற புள்ளியில் முடிவடைகின்றன.
ஜூன்-செப்டம்பர்-2009 புதுவிசை இதழில் அ.மார்க்ஸ் அவர்களின் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அக்கட்டுரையில் பொத்தம் பொதுவாக - கோவை நீலாம்பூரில் நடந்த இராணுவ வாகன தடுப்பு ஆர்ப்பாட்ட செய்தி பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் - 02.05.2009-ம் தேதி இலங்கை இராணுவத்திற்கு உதவ இந்திய இராணுவ வண்டிகள் செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்திய இராணுவ வாகனங்கள் தடுக்கப்பட்ட நிகழ்வினைக் குறிப்பிட்டு - பின் “தவறான செய்திகளின் அடிப்படையில் இப்படி நடந்து விட்டது” என நீதிமன்றங்களில் பிணை விடுதலைக்காக விண்ணப்பிக்கும்போது சிறைப்பட்டோர் வாக்குமூலம் அளிப்பது வேதனை காட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் இந்நிகழ்வில் பங்கெடுத்தவர்களின் தியாகம், அரசியல் மற்றும் உறுதித் தன்மை இவற்றை அவர் நையாண்டி செய்வதாகவே கருதத் தோன்றுகிறது. உண்மையில் இவ்வாறு போகின்ற போக்கில் ஏளனம் செய்யும் முன் தான் குறிப்பிடும் செய்தி உண்மையானதா என அ.மார்க்ஸ் சரிபார்க்கத் தவறி விட்டார்.
தமிழக மக்கள் மத்தியில் ஈழ மக்களின் உயிர்களை காக்க ஒட்டு மொத்தமான சனநாயகக் குரல்கள் எழுப்பப்பட்டன. இதன் தாக்கத்தால் தான் தமிழக அரசு தனது சட்டமன்றத்தில் இரண்டுமுறை இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசோ தொடர்ந்து இராணுவ தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசுக்கு செய்து வந்தது. ஈரோடு, கோவை வழியாக இராணுவ டாங்கிகள் கொச்சிக்கு அனுப்பப்பட்டு கடல் வழியாக இலங்கைக்குச் செல்வதாக புகைப்படத்துடன் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனை தமிழக அரசோ, மத்திய அரசோ மறுக்கவில்லை. மேலும், இன்றுவரை இந்திய அரசு இராணுவ உதவி செய்ததை இலங்கை நன்றியுடன் நினைவு கூர்கின்றது. நமது நாட்டு இராணுவ அமைச்சரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தக் கால கட்டத்தில் தான் 02.05.2009-ம் தேதி சேலம், கோவை வழியாக இந்திய இராணுவ வாகனங்கள் கொச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்தபோது, தன்னெழுச்சியாக இந்திய அரசின் தமிழர் விரோத மனப்பான்மையினை எதிர்க்கும் ஒரு அடையாள சனநாயகப்போராட்டமாக – அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்யவே கோவை நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே குடும்பம், குடும்பமாக பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் இராணுவ வாகனத்திலிருந்த சில பெட்டிகளை சாலையில் தூக்கி வீசி எறிந்தனர். வாகன முகப்புக் கண்ணாடி மற்றும் விளக்கு உடைக்கப்பட்டது. ஒரு இராணுவ வாகனத்திலிருந்த கட்டில் மற்றும் மரச்சாமான் எரிக்கப்பட்டது. இது உடனடியாக அங்கிருந்த அமைப்பாளர்களான கு.ராமகிருஷ்ணன் போன்றோர்களால் தடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குப் பின் கூட்டம் கலைந்து போய்விட்டது.
ஆனால், அதன் பின்பு, வெகுநேரம் கழித்து இராணுவ வீரர்கள் ஒரு வாகனத்தில் இரும்பு பைப்களுடன் வந்தார்கள். சம்பவ இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைத் தாக்கினர். ஒரு பத்திரிக்கையாளருக்கு கை எலும்பு முறிந்து போனது. காவல்துறை தலையிட்டு பொது மக்களின் மீதான தாக்குதலைத் தடுத்தது. அதன் பின்பு, பெரியார் தி.க.செயலர் கு.இராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். பெரியார் தி.க.வினர், மறுமலர்ச்சி தி.மு.க.வினர் என பலர் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு 1 மணியளவில் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தைச் சேர்ந்த பொன்.சந்திரன் வீட்டிற்குச் சென்ற காவலர்கள் அவரின் மனைவியை விசாரிக்க வேண்டும் என்றனர். இரவில் ஆண் காவலர்கள் பெண்களை விசாரிப்பது ஏற்புடையதல்ல என்று சட்ட விதிகளை சுட்டிக்காட்டி வாதிட்டபோதும், அவர்கள் பொன்.சந்திரன் மற்றும் அவரின் மனைவி தனலட்சுமியைக் கைது செய்தனர். பின் முதல் தகவல் அறிக்கையில் மற்றும் பலர் என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு காவல்துறை ஈழ ஆதரவு பேசிய பலரை தேடியது. நீலாம்பூரில் வாகனம் தாக்கப்பட்ட இடத்தில் வேடிக்கை பார்த்த பிரபாகரன் என்ற ஒரு இளைஞரை அந்த பெயருக்காகவே கைது செய்தனர். அவர் மனைவி தன் கணவர் இந்நிகழ்வில் தொடர்பற்ற அப்பாவி என கோவை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்து வந்தார்.
ஈழ ஆதரவுக் கூட்டம் நடத்தியவர்கள் அதற்காக குரல் கொடுத்த பலர் தாங்கள் இவ்வழக்கில் சேர்க்கப்படலாம் என பயந்து தலைமறைவாயினர். அடக்குமுறை அதிகரித்தது. இரவுகளில் பெரும் கொள்ளையனைத் தேடுவது போல இவர்களின் வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டன.
இவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த காவல்துறை முயன்றது. ஒரு நண்பரின் மகள் பள்ளி மாணவி (இளவர்). அவரைக் கைது செய்ய ரேசன் கார்டை சரிபார்ப்பது போல உளவுப்பிரிவு காவல்துறை அவரின் வீட்டில் வேவு பார்தத்து. இதனையடுத்து பள்ளியில் படிக்கும் சிறுமியை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் அவர் தனது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தார். அவர் மூன்று மாதம் கழித்து திரும்பி வரும்போது காவல்துறை வீட்டு உரிமையாளரை மிரட்டி அவரின் வீட்டை வேறு ஒரு பூட்டு போட்டு பூட்டி வைத்திருந்தது என்பது மற்றுமொரு சோகம்.
வேலைக்குப் போக முடியாது; குடும்ப பொருளாதாரத்தை எதிர்நோக்க முடியாத காரணங்களினால் சிலரின் குடும்பங்கள் பெரும் உறவுச் சிக்கல்களை எதிர்கொண்டன. காவல்துறை மனரீதியாக பெரும் அச்சுறுத்தல்களை இவர்களுக்குக் கொடுத்தது. இந்த நிகழ்வினை ஒட்டி கைதானவர்கள் மீது தேச துரோகப்பிரிவு வழக்கு சேர்க்கப்பட்டது. பலர் அடக்குமுறையின் துயர் தாங்காது தாங்களாகவே காவல்துறையில் சரண் அடைந்தார்கள். கோவை குண்டு வெடிப்புக்குப் பின் காவல்துறை கோவையில் நடத்திய பெரிய மனித வேட்டையாக இது இருந்தது.
முதலில் கோவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிணை வேண்டி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த பொன்.சந்திரன், தனலட்சுமி ஆகியோருக்கு நானும், பி.யூ.சி.எல் தலைவர் வி.சுரேஷ், அபுபக்கர், இரா.முருகவேள் ஆகியோரும் ஆஜரானோம். மற்றவர்களுக்கு வழக்குரைஞர் ப.பா.மோகன் வாதாடினார். எங்கள் சார்பாக வி.சுரேஷ் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார். எங்கள் வாதத்தில் எங்கும் நாங்கள் தவறான குறுஞ்செய்திகளைப் பார்த்துப் போனதாக குறிப்பிடவில்லை. உண்மையில் எங்களின் வாதம் ஒரு அரசியல் வாதமாக மட்டுமே இருந்தது. தமிழக சட்டமன்றம் இயற்றிய ‘போர் உதவியை இலங்கைக்கு செய்யக்கூடாது’ என்ற தீர்மானத்திற்கும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும் ஜெனிவா மாநாட்டு வரைவுக்கும் எதிராக இந்திய அரசின் செயல்பாடு அமைந்திருப்பதையும், சொந்த மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அதிகார வர்க்கம் செயல்படுவதையும் சுட்டிக் காட்டினோம். இந்திய பாராளுமன்றம் 1960-ம் ஆண்டு ஜெனிவா மாநாட்டு வரைவு சட்டம் என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர் குற்றம் போன்றவற்றிற்கு இந்தியாவில் யாரேனும் உதவினால் அது தண்டணைக்குரிய குற்றம் என்ற சட்ட விளக்கத்தையே முன் வைத்தோம். எங்களின் பிணை மனுக்களை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றத்திலும் இந்த அரசியல் வாதங்களே முன் வைக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி ஒவ்வொரு இயக்கத்தின் சார்பிலும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யச் சொன்னார். இந்த உறுதிமொழிப் பத்திரத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை என மறுத்தோம். ஆனாலும், நீதிமன்றம் வலியுறுத்தியதற்கு இணங்க மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் அதன் மாநில செயலாளர் என்ற முறையில் நான் உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தேன். இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் எங்கேயும் தவறான குறுஞ்செய்தி அடிப்படையில் இப்படி நடந்து விட்டதாக குறிப்பிடவில்லை. நாங்கள், எங்களின் இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தோம்.
எனவே, ‘தவறான செய்தி அடிப்படையில் இப்படி நடந்து விட்டது’ என அ.மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை நாங்களோ, பெரியார் தி.க.வோ, மதிமுகவோ கொடுக்கவில்லை. அரச வன்முறை தலைவிரித்தாடும் போது தனது சிறு எதிர்ப்பின் மூலம் அதனை கேள்விக்குள்ளாக்குவதை சிவில் வீரம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் மதிக்கின்றனர். இத்தகைய சிவில் வீரத்தை வெளிப்படுத்திய நிகழ்வாக கோவை இரானுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அ.மார்க்ஸ் காணாமல் போனது விந்தையானது. உலகில் போருக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் நெடிய போராட்டத்தின் ஒரு தொடர்ச்சிதான் இந்த நிகழ்வும் ஆகும். இந்நிகழ்வை ஒட்டி கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு தாக்கல் செய்த தேச பாதுகாப்பு வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், யாரையும் இனி இவ்வழக்கில் கைது செய்து சிறைப்படுத்தத் தேவையில்லை என கு.இராமகிருஷ்ணன் (பெ.தி.க) பிணை மனுவின்போது கூறி “மற்றும் பலர்” என்ற அடிப்படையில் நினைத்தவர்களை எல்லாம் கைது செய்து சிறைப்படுத்தலாம் என்ற காவல்துறை அடக்குமுறைக்கும் தற்போது நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்நிகழ்வில் இராணுவ வாகனங்கள் இலங்கைக்குப் போகவில்லை என மறுத்து கட்டுரை எழுதும் அ.மார்க்சிடம் அதற்கான வலுவான ஆதரவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு பேசும் பொய்யை உண்மை என நம்பும் மனநிலை ஏற்புடையதல்ல. மத்திய அரசை எதிர்க்கும் நாம் நமது ஊரில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். இதனை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகின்றோம். அதைப்போன்றுதான் இந்திய இராணுவத்திற்கு எதிராக கோவையில் ஈழ ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டமாகும். மக்கள் போராடத் தயாராக இருந்ததின் வெளிப்பாடே குறுஞ்செய்தி மூலம் அவர்கள் திரண்ட நிகழ்வு. எவர் கொடுத்த போதும் மக்களின் உணர்வுக்கு எதிரான செய்திகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன. அடக்குமுறையை எதிர்கொண்டவர்களின் பாதிப்புக்களை - உண்மைகளை மனசாட்சியோடு உள்வாங்கியிருந்தாலே போகின்ற போக்கில் நையாண்டி செய்யும் குரூரம் நிகழ்ந்திருக்காது.
- ச.பாலமுருகன்,
பொதுச் செயலாளர்,
மக்கள் சிவில் உரிமைக்கழகம்,
தமிழ்நாடு மற்றும் புதுவை.
பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைவிட தன்னுடைய அறிவு அதிகம் என்ற மமதையில், தனக்கு தோன்றியதையெல்லா ம் எழுதுகிறார் அமார்க்ஸ். இராணுவ வாகன தாக்குதலால், கோவையில் பெரியார்.தி.க தோழர்கள் போலீசால்பட்ட துன்பம் பலருக்கும் தெரியாது. ஆனால் எதெற்கெடுத்தாலு ம் (ஈழத்தமிழர் பிரச்சனையை தவிர) ஜொல்னா பையை மட்டிக்கொண்டு உண்மை(?) அறியும் குழு என்ற பெயரில் கிழம்பிவிடுகிர அமார்க்ஸிற்கும் தெரியாமல் போனதுதான் வியப்பு. அந்த துன்பத்திலும் பெரியார்.தி.க தோழர்கள் உறுதியுடன் சட்டத்தை எதிர்கொண்டார்கள ். அதனை கொச்சைபடுத்தும் அமார்க்ஸ் அறிவுஜீவியா? அபத்தகளஞ்சியமா?
புலி எதிர்ப்பென்றால் ஆதவன் தீட்சன்யாவிற்கு தேன்போல் தித்திக்கும். தமிழ்நதியை இந்தியாவைவிட்டு கிளம்பு என்ற சர்வதேசவாதி(?) இவர். கொஞ்சமேனும் அவருக்கு நேர்மையுணர்வு இருக்குமேயானால் , இந்த கட்டுரையை அவருடைய இதழில் வெளியிட்டு பெ.தி.க தோழர்களின் உறுதியை கொச்சைப்படுத்தி யதற்கு வருத்தம் தெரிவிக்கவேண்டு ம்.
ஒரேபுள்ளியில் கூடும் ஆட்களின் பின்புலம்
இவை அவரை வேறுபக்கமாய் நிறுத்தி கட்டயாமாய் பார்க்கச்செய்கி றது
சிறுகதையாடல்கள் என்பது பெருங்கதையாடல்க ளின் மீது ஒரு மீள்பபர்வையை கோருகிறது என்று ஆழம் பார்த்த அவரது பேனா இப்போது திருப்பியெழுதுகிறது
இஸ்லாமியர்கள் வெளியேற்றம்குறி த்து புலிகள் பல முறை மன்னிப்பு கோரப்பட்டபின்னு ம் அ மார்க்ஸின் மன்சாட்சி மன்னிக்கமுடியாம ல் முருங்கை மரத்தில் உட்கார்ந்து சகிக்கா கீதம் பாடிக்கொண்டிருக்கிறது
குடிகுறித்து கூத்தடித்த அவர் நாவுகள் புதுவிசை கட்டுரையில் உணர்வாளர்கள் குடியில் உளறியதாக காரி துப்புகிறது
ஆயுதம் தாங்கிய போராட்டம் சாத்தியமில்லை என்று சிவிலியன்களுக்க ு வகுப்பெடுக்கும் அவர் இந்திய ராணுவத்துக்கும் அரச படைகளுக்கும் பக்கத்தில் நின்றுகொண்டிருப ்பது ஒரு கனவாய் அல்ல நிஜமாய் தெரிகிறது
Special Correspondent
CHENNAI: �Destruction of public property cannot be encouraged any more. It is unfortunate that an Army convoy has been obstructed and such an incident cannot be taken lightly,� the Madras High Court said on Thursday.
In his order granting conditional bail to Krishnaswamy and nine others belonging to the MDMK and the PUCL in a case relating to the attack on Army vehicles near the Neelambur L and T junction in Coimbatore district in May, Justice R.Regupathi appreciated �the discipline of those Army personnel who acted with great responsibility and remained calm in spite of the unruly behaviour and damage caused to their vehicles.�
The Government Advocate (criminal side) submitted that out of 300 persons, 41 had been arrested and remanded to judicial custody. Three had been detained under the National Security Act and the other accused were absconding. Investigation was on.
The petitioners� counsel said the incident took place at a time when the war was on in Sri Lanka.
The mob believed that the weapons in the Army convoy were to be supplied to the Sri Lankan Army.
The MDMK headquarters secretary and the general secretary of the Tamil Nadu and Puducherry units of PUCL had filed affidavits stating that they had been, all along, fighting for the welfare of Sri Lankan Tamils.
They had expressed regret for the incident and said that similar occurrence would not take place in future. They were willing to render community service and abide by any condition imposed by the court.
Mr. Justice Regupathi said the petitioners would be released on bail on their executing a bond for Rs.10,000 with one surety for a like sum to the satisfaction of the Judicial Magistrate, Palladam. He directed the petitioners to report before an orphanage, named by the magistrate, and do service there for three hours a day for one week.
On completion, they should produce before the magistrate a certificate in that regard from the Head of the orphanage.
They should report to the police concerned for a day and thereafter as and when required.
THE HINDU 26 JUNE 2009
THE HINDU---JUNE 26,
தனக்கு ஆகாத செய்திகளை இருட்டடிப்பு செய்வதிலும், திரித்து வெளியிடுவதிலும் இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர் முதலான பார்ப்பன பத்திரிக்கைகள் எப்போதும் ஒன்று போலவே செயல்பட்டு வந்திருக்கின்றன . குறிப்பாக ஈழம் அல்லது ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்களைக் கொச்சைப்படுத்து வதில் இப்பத்திரிக்கைக ள் ‘அமார்க்ஸ், ஷோபாசக்தி, சுகன் கும்பலுக்கு’ கொஞ்சமும் குறைந்தவர்களில் லை. அமார்க்ஸ் கும்பல் தங்களது திரிப்புகளுக்கு பக்கபலமாக இவர்களது செய்தியை எடுத்துக்காட்டு கிறார்கள். என்ன ஒற்றுமை!!
அ. ராஜரத்தினம்
(சயவயேஅசயதய83@பஅயடை.உடிஅ)
‘கோவை இராணுவ வாகன எதிர்ப்பு போராட்டமும், அ. மார்க்சின் பொய்யும்’ என்ற கட்டுரையை வாசித்தேன். அதில் மனித உரிமைப் போராளி ச. பாலமுருகன் அவர்கள் வசதியாக மறைத்த தலையாய உண்மைகளை நாம் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.
“கோவை செஷன்° நீதிமன்றத்திலும ், சென்னை உயர்நீதிமன்றத்த ிலும் எங்களின் வாதம் ஒரு அரசியல் வாதமாக மட்டுமே இருந்தது. தமிழக சட்டமன்ற தீர்மானம், சர்வதேச மனித உரிமைச் சட்டம், ஜெனிவா மாநாட்டு வரைவு போன்றவைகளுக்கு எதிரான இந்திய அரசின் செயல்பாடுகளுக்க ு எதிரான இந்திய அரசின் செயல்பாடு அமைந்திருப்பதைய ும், இனப்படுகொலை, போர் குற்றம் போன்றவற்றிற்கு இந்தியாவில் யாரேனும் உதவினால் அது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்ட விளக்கத்தையே முன்வைத்தோம். மக்கள் சிவில் உரிமைக்கழகம் (பி.யு.சி.எல்) சார்பில் அதன் மாநில செயலாளர் என்ற முறையில் நான் உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தேன். இதில் நாங்கள் எங்களின் இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப்ப ற்றி மட்டுமே குறிப்பிட்டிருந ்தோம். ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை நாங்களோ, மதிமுகவோ கொடுக்கவில்லை.”
என பத்தி நெடுக தன் பக்க விளக்கத்தை முன் வைக்கும் பாலமுருகன் கவனமாக திட்டமிட்டு மறைத்த உயர்நீதிமன்ற உறுதிமொழிப்பத்த ிர வாசகங்கள் இதோ:
ஜுன் 26, வெள்ளிக்கிழமை, ஹிந்து நாளிதழ் செய்தி:
உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். ரெகுபதி முன்னிலையில் ம.தி.மு.க., பி.யு.சி.எல் இன் வழக்கறிஞர் கூறியவை, “ராணுவத்தொடர் வண்டியானதுசிறீல ங்கா படையினருக்கு படைக்கலன்களை விநியோகிக்கத்தா ன் செல்கிறது என கும்பல் நம்பியது.”
ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், பி.யு.சி.எல். இன் தமிழ்நாடு, புதுச்சேரி அலகுகளின் பொதுச் செயலாளரும் அளித்திட்ட உறுதிமொழி பத்திரத்தில், தாங்கள் தொடர்ச்சியாக சிறீலங்கத் தமிழர்களின் நலன்களுக்காகப் போராடுவதாகவும் கூறியிருந்தனர்.
அத்துடன் நடந்துவிட்ட சம்பவங்களுக்காக வருந்துவதாகவும் , எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது எனவும் கூறினர். சமூக சேவை செய்வதற்குவிரும ்புவதாகவும், நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைக்கும் பணிந்து நடப்பதாகவும் கூறியுள்ளனர்.
. . .
கோவை இராணுவத்தொடர் வண்டித் தாக்குதலில் பங்கெடுத்தவர்கள ின் தியாகம், அரசியல் மற்றும் உறுதித்தன்மை போன்றவற்றை அ.மார்க்° நையாண்டி செய்வதாக நொந்துக்கொள்ளும ் ச. பாலமருகன் தான் நீதிமன்றத்தில் அளித்த சரணாகதி வாக்குமூலத்திற் கு ‘மாவீரர்’ பட்டயமா எதிர் பார்க்கிறார்?
இலங்கைப் பிரச்சினையில் பி.யூ.ஸி.எல். இன் பலமுகம்
தொடர்ச்சியாக சிறீலங்கத் தமிழர்களின் நலன்களுக்காக தாங்கள் போராடுவதாக உரிமையுடன் கூறிக்கொள்ளும் பி.யூ.ஸி.எல் இன் இரட்டை வேடங்களையும், இலங்கை இனப்போராட்டத்தி ற்கு எதிரான அதன் நுண்ணிய கீழறுப்பு வேலைகளையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
இலங்கை இனப்பிரச்னை தொடர்பாக பெங்களூரில் பெரிய அளவில் மாநாட்டை பி.யூ.ஸி.எல் நடத்தியது. இதற்கான நிதிப்பின்புலம் எங்கிருந்து வந்தது? இம்மாநாட்டில் பேசிய முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை ச் செயலர் ஏ.பி. வெங்கடே°வரன் இலங்கைப்பிரச்னை யில் ஈழத் தமிழர்களின் தலையாய எதிரியாக சீனாவை சித்தரித்துள்ளா ர். போகிற போக்கில் இந்தியாவின் குறைபாடுகளை லேசாகச் சொல்லியுள்ளார்.
இதே போன்றதொரு உரையையே கடந்த 06.09.2009 அன்று சென்னையில் நடந்த ஈழப்பிரச்னை தொடர்பான கருத்தரங்கில் பி.யூ.ஸி.எல் இன் சுரேஷ் ஆற்றினார். இலங்கை இனப்பிரச்னையில் தமிழக சட்டமன்றத் தீர்மானம், சர்வதேச மனித உரிமைச்சட்டம், ஜெனிவா மாநாட்டு வரைவு போன்றவைகளுக்கெத ிராக இந்திய அரசின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக குன்றேறி கூவும் பாலமுருகனும் அவர்சார்ந்த பி.யூ.ஸி.எல். உம் நைசாக இந்திய விரிவாதிக்க தேசிய வெறியின் கையாளாக எப்படித் தொழிற்படுகின்றன ர் என்பதை அவதானியுங்கள்.
சீனாவை நியாயப்படுத்தவோ , இலங்கை அரசின் யுத்த வெறிக்கு அது செய்த உதவிகளை சரிகாணவோ முடியாது. ஆனால் ஈழ இனப்படுகொலையில் வட்டார விரிவாதிக்க வெறிப்போட்டியில ் தலையாயக் குற்றவாளியான இந்தியாவின் பங்களிப்பை சிறியதாகக் காட்டும் முகமாக குற்றப்பட்டியலி ல் எங்கோ தொலைவில் உள்ள சீனாவை முதலிடத்திற்கு கொண்டுவரும் பி.யூ.ஸி.எல் இன் ஜகஜ்ஜால வித்தையையும், துரோகத்தையும் இந்திய விரிவாதிக்க வெறித்தனத்தின் முகவராக அது செயல்படுவதையும் நாம் தீவிரமாக கணக்கிலெடுக்க வேண்டும்.
தலைமைப்போக்கிரி அமெரிக்காவிற்கு சீனாவை எதிர்க்க வேண்டிய தேவையுள்ளது. அந்த திருப்பணிக் குழாமில் திருத்தொண்டர் இந்தியாவும் சீனாவைக்காட்டி தேசிய வெறியைக் கிளப்பி ஏகாதிபத்திய பாதஸேவை செய்து வருகிறது. இந்த அமெரிக்க இந்திய போக்கிரி அச்சின் ஊதுகுழலாக பி.யூ.சி.எல். செயல்படுவதை மனித இன விடுதலைப்போராளி கள் கணக்கிலெடுக்க வேண்டும்.
ஆயிரங்குறைகள் இருந்தாலும் சீனா தனது அண்டை அயலவர்களுடன் நல்லுறவையேப் பேணி வருகின்றது. ஆனால் இந்தியா தன்னைச் சுற்றிலும் உள்ள நாடுகளுடன் ஒரு பேட்டை போக்கிரித்தனமான வெளியுறவுக் கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது. போக்கிரித்தனத்த ிற்கு உயர்ந்த நட்புறவா பரிசாக கிடைக்கும்?
மாற்று ஊடகமாக தன்னை அறிமுகப்படுத்தி ய கீற்று இணையதளம் இன்று அவதூறுகள், அபத்தங்களின் புகலிடமாக மாறியுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது. நாட்டின் தலையாய ஊடகங்கள் கடைப்பிடிக்கும் ஊடக அறங்கள் கூட கீற்றுவிற்கு இல்லையென்பதை என்னவென்று சொல்ல?
ஈழப்பிரச்னை, திபெத் பிரச்னையில் ஹிந்து நாளிதழ் ஓரவஞ்சனையாக நடந்தாலும் கூட வாசகர் கருத்துகளுக்கு மதிப்பளித்து (சுநுஹனுநுசு’ளு நுனுஐகூடீசு) என்ற பக்கத்தை அறிமுகப்படுத்தி செய்திகளில் ஏற்படும் பிழைகள், விடுபடல் ஆகியவற்றை ஒப்புக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் அதற்கான விளக்கம், சமாதானத்தை தருகின்றனர். தேவையென்றால் மன்னிப்பு கூடக் கேட்கின்றனர்.
ஆனால் கீற்றுவின் வழித்தடத்தைப் பாருங்கள் - அகிலன், கதிர்காமரை, காலஞ்சென்ற லட்சுமண் கதிர்காமரின் மகன் என சொல்லியது. தவறைச்சுட்டிக்க ாட்டியவுடன் அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக்காமல் அதை நீக்கியது.
அதேபோல் வேறு யாரோ படத்தைப்போட்டு சுசீந்திரனை அவதூறு செய்தது தவறு என சுட்டிக்காட்டப் பட்டவுடன் அதை நீக்கிவிட்டு, செய்த அவதூறுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காமலிரு ப்பது.கீற்று ஆசிரியர் குழுவைச்சார்ந்த பா°கரிடம் ஆதவன் தீட்சண்யா இதைச்சுட்டிக் காட்டியபோது, “உங்களைப்போல் மூன்று மாத சஞ்சிகைக்கு வேண்டுமென்றால் சரிபார்க்க நேரமிருக்கும். மூன்று நாளைக்கொரு தடவை ருயீனயவந செய்யும் எங்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை” எனக் கூறியது.
டாக்டர் வி. பாண்டியன் போன்ற ஹிந்துத்வ பாணி தூய தமிழ்த் தேசியவாதிகள், ச. பாலமுருகன் போன்ற இந்திய விரிவாதிக்க வெறிமுகவர்களின் நாலாந்தர நடையிலுள்ள கடிதங்களை வெளியிடுதல் என காலச்சுவடு பாணியிலான மாற்று ஊடக வலதுசாரி வழித்தடத்தை கீற்று தேர்ந்தெடுத்திர ுப்பது கண்டனத்திற்குரி யது. தீவிர இலக்கிய உலகில் காலச்சுவட்டின் வலது சாரி வடு அம்பலப்படுத்தப் பட்டதைப் போல் கீற்றுவிற்கு எதிராகவும் போராட வேண்டிய வரும் போலிருக்கின்றது .
அபிடவிட்டின் சர்டிபைடு காப்பி இன்னும் எடுக்கப்படத நிலையில் அது இந்துவுக்கும் கொடுக்கப்படாத நிலையில் அதுகுறித்து தனது யூகங்களையும் வெளியில் பேசியவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு பேசுவது அபத்ததில் முடியும்
இந்தியாவை காக்க சீனாவை நோக்கி சுட்டுவிரல்களை குவிக்கும் வேலையை அவர்கள் செய்வதாகவும்
பி யு சி எல் க்கும் புதிய பட்டத்தை கொடுத்திருப்பது ம்
இந்து பத்திரிக்கைக்கு சர்டிபிகேட் கொடுப்பதும்
சாதரணமாக சொன்ன 'நேரமில்லை' வார்த்தைகளை வளைக்கப் பயன்படுத்துதலும ் கீற்றுக்கு எதிராய் போராட நாள்குறிக்கப் போவதாக சொல்வதும் சாதரண நடையினை நாலந்தரமாக தரப்படுத்துதலும ் சரியாகப்படவில்ல ை
அபிடவிட்டில் நின்று கோர்ட்டின் நடைமுறைகளை அறிந்து முயற்சி செய்து அந்த அபிடவிட்காப்பிய ை ஒரு ஸ்கேன் செய்து ,ராஜரத்தினம் கீற்றின் வாசகர்களுக்கு போட்டால நலமாக இருக்குமே
டி.அருள் எழிலன்.
அமார்க்ஸ் பொய் சொல்கிறாரா அல்லது உண்மை சொல்கிறாரா என்பதைவிட, முக்கியமான விடயம், அவர் இந்த விடயத்தைப் பற்றி விமரிசித்து இருக்கக்கூடாது என்பது தான். எனக்கிருக்கும், எனது இனம் சார்ந்த சிந்தை, இவருக்கு எப்படி இல்லாமல் போனது? இந்தியா என்ன யோக்கிய தேசமா? 60 டாங்கிகள் கொச்சின் வழியாகச் சொன்றது என்பது தான் செய்தி. பிரனாப்முகர்ஜி கருணாநிதி வீட்டிலேயே வந்து, இலங்கைக்கான உதவிகளை நிறுத்த முடியாது என்று சொல்கிறார், துனிச்சலாக.
இலங்கைத் தமிழர் சிக்கலில் அன்றிலிருந்து இன்று வரை, தமிழரைக் கலக்காமலேயே, ரகசியமாகவும், தமிழரைத் துச்சமாகவும் கருதியே இந்தியா நிலைப்பாடுகள் எடுத்து வருகிறது. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாரு க்கு உடைப்பதைப் போல, தமிழனின் உடமைகளை, தமிழினப் பகைவர் சிங்களனுக்கு தாரைவார்த்து வருகிறது. எம்மக்கள் படுத் துயரம், அவர்கள் இழந்தது, எல்லாம் எண்ணி, எண்ணி எமது மனம் பதறுகிறது. தமிழனுக்கு மட்டுமே சொந்தமான, தமிழன் கால்வாயில் தமிழன் மீன்பிடித்தாலே மரண தண்டனை கொடுக்கிறான் சிங்களன். தேவையா இந்த அவமானம் தமிழனுக்கு?
உங்களுக்கு எங்கே கேலியும் , கிண்டலும் வரும்? இப்படியெல்லாம் இன துரோகம் செய்ய உங்களால் எப்படி முடிகிறது?
அடச்சீ.... வெட்கங்கெட்டவர் களே!
நான் ஹிந்துத்துவராம் ! "ஹிந்து" என்ற சொல்லைக் கேட்டாலே எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. தூற்றுதல் என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லயா?
கீற்று தோழர்கள், தங்களுக்கு இது ஒரு பகுதி நேரப்பணி என்றும், வேளைப்பளு காரணமாக சில, தவிற்கமுடியாத குறைகள் இருக்கலாம் என்ற பிறகும் வசையா?
கீற்றிற்கு எதிராகப் போராடப் போகிறீர்களா? இந்தக் கடிதமே அது தானே! தாராளமாக செய்யுங்கள்.
கீற்றும், அதன் வாசக வட்டமும் எதிர்கொள்ளும்!
எங்களின் "அன்பான" விசாரணைகள் இல்லாமல், அமார்க்ஸியர்களு க்கு பாவம், தூக்கம் வராது போல! நிறைய விசாரிக்கிறோம் "அன்பர்களே"!
மார்க்ஸோ, லெனினோ கடவுள் நபிக்கையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றோ, முடியும் என்றோ சொன்னதில்லை. மாறாக, இதயமில்லா உலகின் இதயமாக கடவுள் நம்பிக்கை இருக்கும் என்றுதான் மார்க்ஸ் சொன்னதாகக் கேள்வி.
சில தினங்களுக்கு முன்பு, இரண்டே அடி அகலமுள்ள 150 அடிக்கும் மேலான ஆழ்கிணத்தில், இரண்டு வயது குழந்தை விழுந்து, அதை மீட்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்ட்டன . ஒரு வரட்டு மார்க்ஸியவாதியி ன் குழந்தையாக அந்தக் குழந்தை இருக்கும் பட்சத்தில், அந்த மார்க்ஸிவாதி யாரையெல்லாம் வேண்டுவார்? அறிவியலின் சாத்தியக் கூறுகளுக்கு அப்பால், மனிதனுக்கு ஏற்படும் நெருக்கடிகளின் தாக்கத்தின் வடிகாலாகத் தான், கடவுள் என்ற ஒன்று. இல்லாத கடவுளும் அங்கு அவனின் உளவியல் தேவையை நிறைவேற்றுவார். சன்னியாசியைப்போ ல, பற்றற்று இருப்பதென்பது வேறு. தனது பிள்ளையின் மீது பற்றுள்ளவனுக்கு , இது போன்ற சூழல்கள் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். அங்கு தான் கடவுள் என்ற கோட்பாடு, பெரும்பாலான மக்களுக்கு, Safety Valve ஆக பயன்படுகிறது.
பார்ப்பனீயத்துக ்கு முன்பும் தமிழனுக்கு இயல்பான கடவுள் நம்பிக்கை இருந்தது. பார்ப்பனீய சுரண்டலால் தான் நாம் கடவுளை எதிர்க்க வேண்டியுள்ளது. உலகெங்கும் அதே கதை தான். கருத்துமுதல் வாதத்தை வைத்துக்கொண்டு, ஊளைச்சதை வளர்ப்பவர்களுக் கெதிராகத் தான் மார்க்ஸியம் பேசுகிறதே ஒழிய, எளிய மக்களின் ஆன்மீகத்திற்கெத ிராக அல்ல!
மார்க்ஸே என்னோடு இருக்கும் போது, 50 ஆயிரம் ஆண்டுகளாக பண்பெடுத்து வாழும் செம்மாந்த தமிழ் மக்களுக்கு, அரைவேக்காடுகள் வழிகாட்டத் தேவையில்லை!
மற்றபடி ரிமாண்ட், சிறை, லாக்கப், பெயில் போன்றவையெல்லாம் அவரைப் பொருத்தவரை புரிந்துகொள்ள இயலாத சொற்கள்.
தமிழ்நாடு விடுதலைப்படையின ் தலைவர் தமிழரசன் சிறையிலிருந்து ஒரு முறை தப்பிக்க முயன்று பிடிபட்டபோது சிறை அதிகாரிகள் அவரிடம் இனி இதுபோல் முயலமாட்டேன் என உறுதி தாருங்கள் எனக் கெஞ்சினார்களாம் . அதற்கு தமிழரசன் ''தப்பிப்பது என் பாலிசி தடுப்பது உங்கள் பாலிசி'' எனச்சொன்னாராம். தோழர்கள் ஏன் இப்படிச் சொன்னீர்கள்? எனத் தமிழரசனைக் கேட்டதற்கு என்னைப் பொய் சொல்லச் சொல்கிறீர்களா? எனக் கேட்டாறாம்.
இந்த நடைமுறை மாறி இன்று அரசியல் பணிக்காக நீதிமன்ற நடைமுறைகளைப் பயன்படுத்தி தப்பிப்பது உலகம் முழுதும் இருக்கும் புரட்சியாளர்கள் போராளிகளின் சாதாரண உத்திதான். அது நீலாம்பூர் நிகழ்வுக்கும் பொருந்தும். கைக்குழந்தையோடு மனைவியை விட்டு தடாச்சிறையிலே நான்கு ஆண்டுகள் இருந்த இராமகிருட்டிணனு ம் நீலாம்பூருக்கு இரட்டையராகச் சென்ற பி.யு.சி.எல் தலைவர் பொன்.சந்திரனும் போர்க்குணம் மிக்க அவரது துணைவி தோழர் தனலட்சுமியும் தங்கள் அபிடவிட்டில் ஆயிரம் பொய்களைக்கூறி சிறையிலிருந்து தப்பிவரட்டும். சிறைக்கு வெளியே அவர்களுடைய பணிக்கு நாம் துணை நிற்கிற திராணியை தெம்பை வளர்த்துக்கொள்ள முயல்வோம். அதைவிடுத்து பின்நவீனத்துவப் புனிதர் அ.மார்க்ஸ், மக்கள் போராட்டத்தில் நாளை கடுங்காவல் தண்டனை விதிக்கத் தக்க கொடும் வழக்கில் சிக்கி உண்மைகளை மட்டுமே உரைத்து போராட்டத்தின் ''அறச்சீற்றத்தை தன் அபிடவிட்டில் காட்டுவாராக''.
(ஐயோ, ஜெயா ஆட்சிக்கால ஆசிரியர் போராட்டத்தில் எவனோ ஒரு பெரும்பேராசிரிய ன்
மன்னிப்பு கடிதம் எழுதியதாக மண்டையில் ஒரு லைட் எரிகிறதே ... இதுவும் புலிப்பாசிஸ்ட்ட ுகளின் சதியோ)
இந்திய பார்பனர்களுக ்கு பிறகு மார்க்சிஸ்டுகள ் தான் ஈழத்தை கெடுக்கும் சாத்தான்கள். இவர்களை மன்னிக்கவே முடியாது. எனக்கு தமுஎச ரொம்ப பிடிக்கும் இப்போ அதன் பேரை கேட்டாலே வாந்தி வருகின்றன. நீங்கள் எதை செய்து கிழிக்க போரிங்க
These people call themselves communists and yet they don't know what it means.
I want to remind you brothers out there about the Hindu Newspaper. During the Tibetean uprising last year at the time of Beijing Olympics, and the world over condemned the Chinese high handedness, The Hindu alone published articles supporting the chinese government and portrayed a rosy picture of Tibet against the ground realities.
So what else can we expect from them about the eelam situation. Hindu Ram was the only one who was allowed to visit the camps in srilanka and he promptly published articles saying the tamil population is happy and well and Rajapakse is taking good care of them in the camps. Since Rajapakse is so close to the Chinese, what else you expect from a chinese agent like Ram.
And what else we can expect them to publish about Tamil Nationalists. With A.Marx, taking a news report published in Hindu as proof for his article on the Covai incident, we don't have to think twice about his credibility.
You have stated in your response that China is maintaining cordial relationship with all its neighbors even though it has difficulties with them, while India is maintaining PETTAI POKKIRITHANAMAN A relationship with its neighbors.
Whatever the Chinese do is good and well for you people. We have known this all along. Your double standards in this is not new to us.
Whatever you say about India is true and there is no second thought about it. But the meaning of cordial relationship with neighbors doesn't ring a bell to me.
What is the status of the relationship between India and China? What about the continuing border problem? What about the Naval bases China is constructing so near to Andaman Islands in Burmese Territory? You speak of American Colonialism in lieu of its armed force bases across the world. Does it not suit China in this case with Burma? What about the relationship between China and Pakistan? They are together only to counter India. China is supplying Pakistan with restricted nuclear technology and arms and ammunition only to counter India. Is this the cordial relationship China is maintaining with its neighbors as mentioned by you?
You people have always been against state organised crimes against people and support human rights in all parts across the globe but not china. And you have again proved it right by criticizing people who write about China's part in the Tamil Genocide.
We know who you are and my humble request to you - " Please don't write here again and spoil this site. Better you write articles in right wing newspapers like The Hindu.
With Regards,
Rajeev
RSS feed for comments to this post